என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    X

    அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

    • ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை சார்பில்அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    • 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குளத்திரன்பட்டு ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்ட ளை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் மற்றும் 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் அதிபருமான கரிகாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளரும் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரதநாட்டியம், யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சைக்கிள் மற்றும் சீருடை கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது:-

    கல்வியே சமூக மாற்றத்திற்கு சிறந்த கருவி. இது போன்ற கல்வி பணிகளை இந்த அறக்கட்டளை தொடர்ந்து செய்து வரும். இப்பகுதி மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், ரவி , பல்லவராயர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன்

    பிரபல பட்டிமன்ற நடுவரும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பொருளாதார பேராசிரியருமான தங்க ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன், அன்புக் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×