search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம்"

    • மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    • ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக சீசன்களை கட்டும். அப்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வழியாக வரும் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். இதனால் அருவிக்கரையோரம் வியாபாரிகள் கடை அமைத்து வியாபரத்தில் ஈடுபடுவார்கள். கேராளாவில் இருந்து சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும். இந்நிலையில் கடந்த மாதம் தொடங்க வேண்டிய சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம், பழைய குற்றாலம் மற்றும் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    • ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    • ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்ததை அடுத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் 4 கிளைகளிலும் மெயின் அருவியில் மிதமான அளவிலும் தண்ணீர் கொட்டி வருவதால் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    இன்று காலையில் ஐந்தருவி, மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    இருப்பினும் காலை முதல் லேசான வெயில் மட்டும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் மட்டுமே குற்றால அருவிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து குற்றால சீசனும் களைகட்டும்.

    • அருவி கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

    அமைச்சர் ஆய்வு

    இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணி களை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

    சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.

    சீரமைப்பு பணி

    குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்த னர்.

    மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.
    • நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

    அதாவது ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி சீசன் களைகட்டும். இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியது.

    செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அங்கு இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதில் தற்போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ தொடங்கியுள்ளனர். மெயின் அருவி முழுவதும் பாறையாக காட்சியளித்த நிலையில் அதில் சற்று தண்ணீர் வழிய தொடங்கி உள்ளதால் எப்பொழுது தண்ணீர் அதிகரிக்கும் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் கொக்கிரகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×