search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subsidy"

    • சுதந்திர தின உரையில் 2 பெரும் திட்டங்களை பிரதமர் அறிவித்தார்
    • மானிய விலையில் பிணையில்லாத கடன்கள் வழங்கப்படும்

    இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் விஸ்வகர்மா யோஜனா மற்றும் லக்பதி தீதி எனும் இரு பெரும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), புதிய மத்திய அரசாங்கத்தின் திட்டமான "PM விஸ்வகர்மா"-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    "நேற்று சுதந்திர தின உரையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதுமுள்ள 30 லட்சம் கைவினை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மானிய விலையில் பிணையமில்லாத கடன்கள் வழங்கப்படும். 2023-ல் தொடங்கி 2028 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு இதற்காக ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்காக 18 பாரம்பரிய வர்த்தகங்கள் சேர்க்கப்படும்" என இத்திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

    "பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றோடு 5 சதவீத சலுகை வட்டியில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவியும், இரண்டாவது தவணையாக ரூ. 2 லட்சம் வரை கடன் உதவியும் வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு உதவி, கருவிகள் வாங்க ஊக்குவிப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்" என்று இத்திட்டம் குறித்து மத்திய அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டு தயாரிப்பு கலைஞர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், காலணி தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள் ஆகியோர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    • ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.
    • ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும்

    நெல்லை:

    தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இந்த நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் வீட்டுத்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாடித்தோட்ட தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பாப்பாக்குடி வட்டாரத்தில் ரஸ்தாவூரில் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்பதற்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தோட்ட க்கலை உதவி இயக்குநர் சுபாவாசுகி கலந்து கொண்டு அனைவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தங்களது வீட்டிலேயே அங்கக முறையில் உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.900, மானியம் ரூ.450, பயனாளியின் பங்குத்தொகை ரூ.450 எனவும் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை பெறமுடியும் எனவும் விளக்கினார்.

    இதில் ஏற்கெனவே பயன்பெற்ற பயனாளி மாரியம்மாள், பாரதமணி, சோமு ஆகியோர் மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் முறைகள் பற்றியும், காய்கறி வளர்ப்பதால் உள்ள நன்மைகளையும் விளக்கி கூறினார்கள். இப்பயிற்சியில் ரஸ்தாவூரை சேர்ந்த செம்பருத்தி, முப்புடாதி அம்மன், அன்னை தெரசா, சரோஜினி, அன்னை இந்திரா, மகளிர் மன்றம் ஆகிய பெயர்களில் செயல்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • அரியலூரில் பனை விதை, கன்றுகள் 100 சதவீதம் மானியம் கலெக்டர் அறிவிப்பு
    • விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர்கூறியிரு ப்பதாவது-

    தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இணைந்த மரமாக இருக்கிறது. நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணுக்கு உகந்த மரமாக உள்ளது. மேலும், அடி முதல் நுனி வரை பயன் தந்து பலருக்கு வாழ்வா தாரமாகவும் விளங்கு கிறது.

    எனவே பனை சாகுபடியை ஊக்குவி ப்பதற்காகவும், விவசாயி களின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதற்காகவும், நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயன டைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    • தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரும் முகாமினை நெல்லி க்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் சமையல் எண்ணெய் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரித்திட 2022-23 ஆம் ஆண்டு முதல் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான கன்றுகளை நடவு செய்யும் பொருட்டு எண்ணெய்ப்பனை சார்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்தி ட்டத்தினை திருக்க ண்டேஸ்வரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விவசாய நிலத்தில் எண்ணெய்ப்பனைக் கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்புகள் குறித்தும் மற்றும் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகி ருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி , துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை அருண், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.

    • வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.
    • ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்க ப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்செல்வி அறிவுறுத்தலின் படி, தோட்டக்கலை அலுவலர் சோபியா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறியதாவது:-

    மாடித்தோட்டம் தொகுப்பில் செடி வளர்ப்பு பைகள் 6 எண்கள் , தேங்காய் நார் கழிவுகள் 12 கிலோ , 6 வகையான காய்கறி விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 200 கிராம்,போஸ்போபாக்டிரியா 200 கிராம், ட்ரைக் கோடர்மாவிரிடி 200 கிராம், வேப்ப எண்ணெய் 100 மில்லி மற்றும் காய்கறி வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படும்.

    இந்த தொகுப்பின் விலை ரூ.900, மானியம் 50 சதவீதம் போக ரூ.450 மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .

    இந்த தொகுப்பினை பெற www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • ராமநாதபுரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
    • பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திட வும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமய மாக்கல் துணை இயக்கத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூல மாக செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. 2021-22 முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரை தேர்வு செய்யப்பட் டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவ சாயிகளுக்கு 162 எண்கள் பவர்டில்லர்கள் மற்றும் 10 எண்கள் பவர் வீடர்கள் என மொத்தம் 172 எண்கள் ரூ.143.16 லட்சம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் நிலப் பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச்சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறுது.

    மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல் லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார தனிநபர் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உதவி செயற்பொறியாளர், ராமநாதபுரம் அலுவலகத்தில் உள்ள கைபேசி எண் 9489152279 மற்றும் பரமக்குடி, நயினார் கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார தனிநபர் விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டது.
    • பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வைத்தார் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் இடுபொருள்கள் தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து பொம்மலாட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜய அமிர்தராஜ், தமிழரசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, ராமன், வேதை ராஜன், அலெக்சாண்டர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜசேகர், சவுந்தரராஜன், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் விஜய் சாரதி, கோபி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஊராட்சித் தலைவர் சுகந்தி நடராஜன் ஒப்பந்தக்காரர் பழனிவேல் கலந்து கொண்டனர்.

    • குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    கடலூர் மாவட்டத்தில் இறால் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் (2021-2022) மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டர் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 இலட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 இலட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவீதம் மானியம் ரூ. 5.60 இலட்சம் வழங்கப்பட உள்ளது. 

    எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை புவனகிரி (வட்டம்) கடலூர் (மாவட்டம்) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • இணையதளத்தில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
    • பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது.

    மேலும் மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.

    இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 90 எண்களுக்கு ரூ .13.50 லட்சமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 எண்களுக்கு ரூ.5.25 லட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    மின்மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மானியத்திற்கு விண்ணப்பித்திட விவசா யிகள் ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சாதி சான்றிதழின் நகல், ஆதித்திராவிட மற்றும் பழங்குடியினரை சேர்ந்தவராயிருப்பின் சிறு/குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், சம்மந்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கல், மின் இணைப்பு சான்றிதழின் நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஓரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15. கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் - 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட செயற்பொ றியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை- 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுப்பயிர் சாகுபடிக்கு 50 சதவீத மானியம் வழங்கபடும்
    • மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தில், மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறுதானியங்கள், பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் நுண்ணுட்டக்கலவை ஆகிய பொருள்கள் அடங்கிய மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், பசுந்தாழ் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    மொத்த இலக்கில் 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 1 சதவீதம் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். சிறுதானிய தொகுப்பு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு ரூ.1,150 (50%மானியம்). பயிறுவகை சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1740 (50%மானியம்) எண்ணெய் வித்து சாகுபடி தொகுப்பு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4700 (50% மானியம்) கடந்த 2 ஆண்டுகளில் பயன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேற்கண்ட மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பை பெற உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். ஓடிபி விவசாயிகளின் கைபேசிக்கு வரும். மேலும் விவரங்களுக்கு திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் ஊடு பயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், வாழை மற்றும் மரவள்ளியில் ஊடுபயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தோட்டக்கலை உபகரணங்களை நெகிழிக்கூடைகள் 40 சதவீத மானிய விலையில் 80 அலகு வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்ட தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் தொகுப்பு ரூ.450-க்கு 250 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பழச்செடி தொகுப்புகள் மற்றும் மாடித்தோட்ட தொகுப்புகள் திட்டத்–தில் பயன்–பெற www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், மற்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    ×