search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub collector"

    • திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
    • காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி,மேல்மலையனூர், வட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சப்-கலெக்டர் அறிவித்து உள்ளார். 

    தேன்கனிக்கோட்டை அருகே திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (21). இவர் தளியைச்சேர்ந்த பார்வதி என்பவரை கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிபோன கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் பார்வதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு சென்று பார்வதியின் உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். குடும்ப தகராறு காரணமாக பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் பார்வதி தூக்குபோட்டு இறந்ததால் ஓசூர் சப்-கலெக்டர் விமல்ராஜ் மற்றும்  அவரது கணவர் முரளி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் சப்-கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வந்தாலும் சீக்கிரமாக திரும்பி சென்று விடுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப் கலெக்டர் ரத்னா நேற்று மாலை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே ஒரு செவலியர் மட்டும் பணியில் இருந்தார்.

    டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள் நோயாளிகளிடம் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் செவிலியரிடம் டாக்டர் எங்கே என கேட்டார். அதற்கு செவிலியர் டாக்டர் ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார் என்று கூறினார். இதனால் சப்-கலெக்டர் ரத்னா ஆஸ்பத்திரி முகப்பில் டாக்ருக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார்.

    அப்போதும் டாக்டர் வராததால் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இது குறித்து சப்-கலெக்டர் ரத்னா மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும், அதன் பின் டாக்டர் மற்றும் இதர ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மனைப்பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள எஸ்.நரையூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டர் பிரசாந்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக எங்கள் பகுதியில் அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தை சில தனிநபர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி தங்களது உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இலவச மனைப்பட்டா பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியற்றவர்களுக்கு மனைப்பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மேலும் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மேல் ஆதனூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் சப்-கலெக்டர் பிரசாந்த் 475 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே உள்ள மேல்ஆதனூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் சத்யன் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

    இதில் முதியோர் மற்றும் திருமண உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 600-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றில் 475 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் பிரசாந்த், 475 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 55 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ரத்னாவதி, கால்நடை உதவி மருத்துவர் மைதிலி, உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் எழில்வளவன் ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர்.

    முகாமையொட்டி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் தொழுதூர் சீனிவாசன், திட்டக்குடி மேற்கு வேல்முருகன், பெண்ணாடம் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைராஜ், செந்தில், ராசு, சுகாதார ஆய்வாளர்கள் பிரபு, உதவி வேளாண் அலுவலர்கள் வில்வேந்திரன், மேகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் திட்டக்குடி கிழக்கு வருவாய் ஆய்வாளர் தேவநாதன் நன்றி கூறினார். 
    கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் சிதம்பர ஈஸ்வரன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். 

    சிதம்பர ஈஸ்வரன் சென்னையில் வேலை செய்வதால், பாக்கியலட்சுமி தனது குழந்தைகளோடு மாமனார் பால குருநாதன், மாமியார் கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார். 

    பாக்கியலட்சுமி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி பாக்கியலட்சுமியின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி துணை சூப்பிரண்டு ஜெயகுமார் விசாரணை நடத்தினார். பாக்கியலட்சுமிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால், இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    விளாத்திகுளம் அருகே திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததால் மனமுடைந்த புதுப்பெண் திருமணமாகி சுமார் 10 மாதங்களே ஆன நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

    விளாத்திகுளம் அருகே உள்ள ஈவேலாயுதபுரத்தை சேர்ந்த கணேசன் மகள் சோனியா(வயது22). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள தும்ப சின்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் என்ற மரிய வியாகுலனுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. 

    திருமணம் முடிந்த பின் புதுமண தம்பதிகள் ராஜ் வீட்டில் வசித்து வந்தனர். ஒரு மாதத்தில் பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் மற்றும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவரும், அவருடய குடும்பத்தினரும் சோனியாவை கொடுமைபடுத்தி வந்தனர். தொடர்ந்து கணவர் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் சோனியா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி சென்றுள்ளார். 

    கணவர் குடும்பத்தினரின் கொடுமை அதிகரித்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை பெற்றோர் அழைத்து வந்து ஈவேலாயுதபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் தங்க வைத்து இருந்தனர். கணவர் குடும்பத்தினரின் கொடுமையால் மனமுடைந்த நிலையில் சோனியா இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சோனியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    வீடு திரும்பிய பெற்றோர் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக சூரங்குடி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) செழியன் விசாரணை நடத்தி வருகிறார். 

    திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×