search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village people siege"

    மனைப்பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள எஸ்.நரையூர் கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டர் பிரசாந்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக எங்கள் பகுதியில் அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தை சில தனிநபர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி தங்களது உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு இலவச மனைப்பட்டா பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியற்றவர்களுக்கு மனைப்பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். மேலும் உரிய பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா நடுவக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதியதமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் துணை வட்டாச்சியர் மாரியப்பனிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடுவக்குறிச்சி காலனி பகுதியில் சுமார் 35 வீடுகளில் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுக்கடை ஆரம்பிக்கபட்டது. மது வாங்க வருபவர்களால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுக்கடையை  மூட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, புதியதமிழகம் கட்சி தொகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகன், காசிப்பாண்டி, சந்திரன், அழகுமணி, மாணவரணி தங்கம்சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து மாவட்டநிர்வாகத்திற்கு தகவல் அளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம், பிதப்பபுரம், ஈராச்சி, இளம்புவனம், ராமனூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எட்டயபுரம் நில அளவை துறையினர் இதுவரை நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. 

    இதனால் இலவச பட்டா பெற்று பயனில்லாமல் உள்ளது. இந்நிலையில் இலவச வீட்டுமனை பட்டாவுக்குரிய நிலத்தை அளந்து தரவலியுறுத்தியும்,  முதியோர் உதவித்தொகை வழங்க கோரியும் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  தாலுகா குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர்  மல்லிகா, தாலுகா செயலாளர்  வேலுச்சாமி, தாலுகா குழு உறுப்பினர் செல்வக்குமார், ராமர், மூக்கையா தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தாசில்தார் வதனாளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    வென்றிலிங்கபுரம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட கோரி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடை கட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம் வென்றிலிங்கபுரம். இங்கு 1991-ல் இருந்து வி.ஏ.ஒ. அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் வென்றிலிங்கபுரத்திற்கு வேண்டும் என்று கோரி கிராம மக்கள் 1994-ல் இருந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது.  

    இந்த நிலையில் கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆகியோர் பட்டாடைகட்டி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் தட்டான்குளம் என்ற கிராமத்தில் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர்.  

    மேலும் வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சுமார் 3600 மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தட்டான்குளம் கிராமத்தில் சுமார் 68 மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வென்றிலிங்கபுரம் கிராமத்தில் சுமார் 280 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். எனவே வென்றிலிங்கபுரம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

    இது குறித்து மண்டல துணை தாசில்தார் செல்வக்குமாரிடம் மனு கொடுத்தனர்.
    ×