search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride suicide"

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை சேடபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது27). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்துலாபுரத்தை சேர்ந்த லதா(22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. சிறிதுகாலம் சந்தோசமாக இருந்த கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லதா வாழ்வதை விட சாவதே மேல் என தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவான்மியூரில் கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவர் அவருக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்து அவரிடம் சண்டை போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் நித்தியாவிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த நித்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நித்தியாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா எழுதி கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் கிஷ்டாரெட்டி. இவரது மகள் ருத்ராதேவி (வயது 23). இவருக்கும் சென்னை நந்தனத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 21-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பிறகு கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தலை பொங்கல் கொண்டாட ருத்ராதேவி கணவனுடன் சூளைமேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது.

    அய்யப்பன் மனைவியை திட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார். இதனால் மனம்உடைந்த ருத்ராதேவி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொரடாச்சேரி அருகே தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசையை கணவர் ஏற்காததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரியை அடுத்த செட்டி சிமிலியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 26). சமையல் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (21). இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. குழந்தை இல்லை.

    இந்த நிலையில் காமராஜ் பெற்றோர்களுக்கும், கவுசல்யா பெற்றோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கவுசல்யாவின் தாய் ஜெயந்தி சீர்வரிசை பொருட்களை வாங்கி சென்று மகளிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த காமராஜ் மனைவியின் தாய் வழங்கிய சீர்வரிசை பொருட்களை வேண்டாம் என்று பிடிவாதம் செய்து அந்த பொருட்களை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டார். இது கவுசல்யாவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. தாய்வீட்டு சீர்வரிசையை கணவர் வாங்க மறுத்துவிட்டாரே என்று மனமுடைந்தார். 

    இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஜெயந்தி கொராடச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 1 1/2 ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் இது தொடர்பாக திருவாரூர் ஆர்.டி.ஓ. முருகதாசும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    எரியோடு அருகே கணவன் குடிபோதையில் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாகாநத்தம் தோப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கல்யாணி(வயது21) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவர்களது குடும்பத்தில் புயல் வீசதொடங்கியது.

    தினமும் குடிபோதையில் மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்தபோது கிருஷ்ணமூர்த்தி குடிப்பழகத்தை விடவில்லை.

    நரகவேதனையில் வாழ்வதைவிட தற்கொலை செய்துகொள்வதென கல்யாணி முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து எரியோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விரைந்து கல்யாணியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    பென்னாகரத்தில் திருமணமான 6 மாதங்கள் ஆன நிலையில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மிட்டாதார தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கோழி வியாபாரி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்கிற சரண்யா (வயது 22) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சந்தோஷ்குமார் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். இரவு வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு சந்தோஷ்குமார் திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை கண்டு சந்தோஷ்குமார் கதறி அழுதார்.

    இதுகுறித்து அவர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யா என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் உறவினர்களிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குற்றாலம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் கணவர் இறந்ததால் மன வேதனை அடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பரமேஸ்வரி(வயது23). இவருக்கும் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சாரங்கராஜ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி சாரங்கராஜ் மின்சாரம் தாக்கி இறந்தார். இதனால் பரமேஸ்வரி மிகுந்த மன வேதனை அடைந்தார். தனது கணவரை நினைத்து அழுதபடி இருந்த அவர் தாய் வீடான ஆயிரப்பேரிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரும், சகோதரரும் பரமேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். எனினும் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பரமேஸ்வரி யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி தனது அறையில்  தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நீடாமங்கலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதி மருத்துவமனை தெரு வை சேர்ந்தவர் சரவணன்(வயது30). டேங்கர் லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா(25). இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வருவாராம்.

    நேற்று சரவணன் குடித்து விட்டு வருவதை புனிதா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புனிதா வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புனிதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ., தனி விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம் 

    மன்னார்குடி கட்டக்குடி பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சந்திரபோஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாராணி (வயது 21).

    இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மகாராணி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திரபோஸ் கலந்து கொண்டு மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை மகாராணி கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வடுவூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தேவதானப்பட்டியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நயினார்முகமது. இவரது 3-வது மகள் சித்திகா(வயது19). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்த ஆதம் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ரம்ஜான் பண்டிகைக்காக சித்திகா சொந்த ஊருக்கு சென்றார். அதன்பின்பு தாய் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்திகாவை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்த விபரம் தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் ரோடு லைன் தெருவை சேர்ந்த ஆண்டியப்பன்- மஞ்சுளா தம்பதி மகள் நந்தினி. (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் பூபேந்திரன். ஆர்.வி.எஸ். கல்லூரியில் எம்..சி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் நந்தினிக்கும் காதல் ஏற்பட்டது. எனவே பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 பேரும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்தனர்.

    கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை.

    எனவே ஒரு மனமாற்றத்துக்காக நந்தினி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று லைன் தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு நந்தினி வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நந்தினியின் உறவினர் முற்றுகையிட்டு பூபேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மங்கலத்தில் புதுப்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 25). இவரது மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், கணவர் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    கணவர் குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச் சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி புதுப்பெண் சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

    விளாத்திகுளம் அருகே திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததால் மனமுடைந்த புதுப்பெண் திருமணமாகி சுமார் 10 மாதங்களே ஆன நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

    விளாத்திகுளம் அருகே உள்ள ஈவேலாயுதபுரத்தை சேர்ந்த கணேசன் மகள் சோனியா(வயது22). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள தும்ப சின்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் என்ற மரிய வியாகுலனுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. 

    திருமணம் முடிந்த பின் புதுமண தம்பதிகள் ராஜ் வீட்டில் வசித்து வந்தனர். ஒரு மாதத்தில் பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் மற்றும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவரும், அவருடய குடும்பத்தினரும் சோனியாவை கொடுமைபடுத்தி வந்தனர். தொடர்ந்து கணவர் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் சோனியா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி சென்றுள்ளார். 

    கணவர் குடும்பத்தினரின் கொடுமை அதிகரித்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை பெற்றோர் அழைத்து வந்து ஈவேலாயுதபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் தங்க வைத்து இருந்தனர். கணவர் குடும்பத்தினரின் கொடுமையால் மனமுடைந்த நிலையில் சோனியா இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சோனியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    வீடு திரும்பிய பெற்றோர் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக சூரங்குடி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) செழியன் விசாரணை நடத்தி வருகிறார். 

    திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×