என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென்னாகரத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை- சப்-கலெக்டர் விசாரணை
Byமாலை மலர்1 Dec 2018 12:22 PM GMT (Updated: 1 Dec 2018 12:22 PM GMT)
பென்னாகரத்தில் திருமணமான 6 மாதங்கள் ஆன நிலையில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மிட்டாதார தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கோழி வியாபாரி.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்கிற சரண்யா (வயது 22) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சந்தோஷ்குமார் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். இரவு வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு சந்தோஷ்குமார் திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை கண்டு சந்தோஷ்குமார் கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யா என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் உறவினர்களிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X