search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub collector investigation"

    கடையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பூபதி (வயது 20). பாலமுருகன் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று பூபதி வீடு காலை அதிகநேரம் ஆகியும் பூட்டி கிடந்துள்ளது.  

    இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகனின் அக்காள் வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் பூபதி இறந்து கிடந்தார். அவர் அருகில் சென்று பார்த்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

    பிரேத பரிசோதனைக்காக பூபதி உடலை போலீசார் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பூபதி தற்கொலைக்கான காரணம் குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பென்னாகரத்தில் திருமணமான 6 மாதங்கள் ஆன நிலையில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மிட்டாதார தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கோழி வியாபாரி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்கிற சரண்யா (வயது 22) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சந்தோஷ்குமார் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். இரவு வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு சந்தோஷ்குமார் திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலை கண்டு சந்தோஷ்குமார் கதறி அழுதார்.

    இதுகுறித்து அவர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்யா என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் சரண்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் உறவினர்களிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஜோசப் மகள் சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    திருமணத்தின் போது சத்தியமேரி பெற்றோர் வரதட்சணையாக மகிமைதாசுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மகிமைதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி மனைவியிடம் மகிமைதாஸ் ரூ.1 லட்சம் கேட்டார். அவரும் தன்னுடைய பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், அந்த பணத்தையும் குடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

    இது பற்றி சம்பவத்தன்று சத்தியமேரி மகிமைதாசிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகிமைதாஸ் சத்தியமேரியை தாக்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சத்தியமேரி சற்று நேரத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் ஆரோக்கியமேரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த சத்தியமேரி உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது பற்றி ஆரோக்கியமேரி தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்தும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×