என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே இளம்பெண் தற்கொலை- உதவி கலெக்டர் விசாரணை
Byமாலை மலர்17 Dec 2018 1:10 PM GMT (Updated: 17 Dec 2018 1:10 PM GMT)
கடையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பூபதி (வயது 20). பாலமுருகன் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று பூபதி வீடு காலை அதிகநேரம் ஆகியும் பூட்டி கிடந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகனின் அக்காள் வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் பூபதி இறந்து கிடந்தார். அவர் அருகில் சென்று பார்த்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனைக்காக பூபதி உடலை போலீசார் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பூபதி தற்கொலைக்கான காரணம் குறித்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X