search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டியில் திருமணமான 3 மாதத்தில் தூக்கில் புதுப்பெண் பிணம்
    X

    தேவதானப்பட்டியில் திருமணமான 3 மாதத்தில் தூக்கில் புதுப்பெண் பிணம்

    தேவதானப்பட்டியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நயினார்முகமது. இவரது 3-வது மகள் சித்திகா(வயது19). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்த ஆதம் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ரம்ஜான் பண்டிகைக்காக சித்திகா சொந்த ஊருக்கு சென்றார். அதன்பின்பு தாய் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்திகாவை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்த விபரம் தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×