search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    நீடாமங்கலம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

    நீடாமங்கலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதி மருத்துவமனை தெரு வை சேர்ந்தவர் சரவணன்(வயது30). டேங்கர் லாரி டிரைவர். இவரது மனைவி புனிதா(25). இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வருவாராம்.

    நேற்று சரவணன் குடித்து விட்டு வருவதை புனிதா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புனிதா வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புனிதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ., தனி விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம் 

    மன்னார்குடி கட்டக்குடி பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சந்திரபோஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாராணி (வயது 21).

    இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது மகாராணி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திரபோஸ் கலந்து கொண்டு மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை மகாராணி கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வடுவூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×