என் மலர்
செய்திகள்

குடிபோதையில் டார்ச்சர்- தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண்
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாகாநத்தம் தோப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கல்யாணி(வயது21) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவர்களது குடும்பத்தில் புயல் வீசதொடங்கியது.
தினமும் குடிபோதையில் மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்தபோது கிருஷ்ணமூர்த்தி குடிப்பழகத்தை விடவில்லை.
நரகவேதனையில் வாழ்வதைவிட தற்கொலை செய்துகொள்வதென கல்யாணி முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து எரியோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விரைந்து கல்யாணியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






