search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special camp"

    • வருகிற 19, 20-ந்தேதிகளில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
    • வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும், நியாய விலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாயவிலைக் கடைகளில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது.

    2-ம் கட்டமாக 449 நியாயவிலைக் கடைகளில் கடந்த 5-ந்தேதி முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாமில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தவறியவர்கள் கடைசி 2 நாட்களில் வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்க ளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் 15, 16-ந்தேதிகளில் நடைபெறும் விடுபட்ட வர்களுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடை பெறும். சிறப்பு முகாம்களில் சேர்த்து நடத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், 2 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 775 மையங்களிலும் நடை பெற்றுள்ள முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவரவர் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட மையங்களில் 19,20-ந்தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். இந்த முகாம்களில் 21 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள், தகுதிவாய்ந்த இதர மகளிரில் ஒருவர் விண்ணப் பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
    • வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது

    வேலூர்:

    குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் 'மகளிர் உரிமை தொகை திட்டம்' அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள் முடிந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவர்களை பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    முதல்கட்ட சிறப்பு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி யுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இது, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விடுபட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதுவரை ஒருலட்சத்து 51 ஆயிரத்து 495 ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பு முகாம்கள் வேலுார் மாவட்டத்தில் மொத்தம் 281 இடங்களில் நடக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 44 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3,4 ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
    • நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் விண்ணப்பம் அளிப்பதற்கு ஒவ்வொரு நியாயவிலை அங்காடியினையும் ஒரு அலகாக கொண்டு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக 24.07.2023 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சுமார் 1027 முகாம்கள் நடத்தப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ள இயலாமல் விடுபட்ட பயனாளிகள் தங்களின் விண்ணப்பங்களை அளித்திட ஏதுவாக 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும் 2வது கட்டமாக வரும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் உட்பட) தொடர்ந்து சுமார் 2,77,315 குடும்ப அட்டைதாரர்களுக்கு 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 01.08.2023 முதல் விண்ணப்பங்கள் ஒவ்வொரு தெருவாரியாக நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 நாட்கள் நடைபெறுகிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விண்ண ப்பங்கள் இணையத்தில் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல் கட்டமாக நடைபெற்று வரும் இந்த முகாமில் பதிவு செய்யாமல் விடுபட்ட மற்றும் விண்ணப்பபதிவு மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ள வருகிற 3 மற்றும் 4-ந் தேதி அந்த மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • முகாம்கள் 24-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    வேலூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம், விண்ணப்பங்களை கைபேசி செயலியின் மூலம் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகள், விண்ணப்ப பதிவு முகாம்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3,02,447 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் ரேசன் கடைகள் மூலமாக 20.07.2023 முதல் 23.07.2023 வரை இல்லங்களுக்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று செயலியில் பதிவேற்றும் செய்யும் 397 முதற்கட்ட முகாம்கள் 24-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    கடந்த 24-ந் தேதி அன்று நடைபெற்ற முதல் நாள் முகாமில் வேலூர் வட்டத்தில் 6,716, காட்பாடி வட்டத்தில் 3675, அணைக்கட்டு வட்டத்தில் 3243, குடியாத்தம் வட்டத்தில் 3307, கீ.வ.குப்பம் வட்டத்தில் 3568, பேரணாம்பட்டு வட்டத்தில்3347 என மொத்தம் 23,856 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, அரியூர் அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் முகாம்களை கலெக்டர்பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங் களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார்.

    மேலும், முதற்கட்ட முகாம் 326 நியாயவிலைக் கடைகளில் அப்பகுதிகளுக் குறிய குடும்ப அட்டைதாரர் களிடமிருந்து விண்ணப்படி வங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும்.

    அதேபோல் 2-ம் கட்ட முகாம் 439 நியாயவிலை கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி களை சரியாக அமைத்து கொடுத்து கண்காணித்து வரவேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டை தாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலை கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகா மில் தனி வருவாய் ஆய்வா ளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குழந்தைகள் வைப்பு தொகை குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து வைப்புத் தொகை ரசீது பெற்ற குழந்தைகளில் வயது 18-ஐ கடந்தும், முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் உள்ள பெண் குழந்தை களிடம் கருத்துரு பெற்று சென்னை, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திற்கு அனுப்பிட மாதந்தோறும் 2-வது செவ்வாய்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி 11-ந்தேதி காலை 10 மணியளவில் ராமநாத புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.

    முகாமிற்கு வருபவர்கள் குழந்தைகளின் பிறப்பு சான்று நகல்கள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், குழந்தைகளின் தாயாருடன் இணைத்துள்ள வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளுக்கும் தாயாருக்கும் ஆதார்கார்டு நகல், வைப்புத்தொகை ரசீது நகல், தாய் மற்றும் குழந்தையின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறா்ரகள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் பழங்குடியினர் சான்று சிறப்பு முகாம் நடந்தது.
    • சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே வைகை நகர், லீலாவதி நகர், வேந்தோணி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல் லாததால் ஜாதி சான்றிதழ் பெறுவதில் மிகவும் சிரமம் பெற்றனர்.

    இதனை அடுத்து நரிக் குறவர் இன மக்கள் பழங் குடியினர் என சாதி சான்றி தழ் பெறுவதற்கு ஆவணங் களை மாற்றுவதற்கான சிறப்பு முகாம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் ரவி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக் காளர் அட்டை உள்ளிட்டவற் றில் மாற்றம் செய்வதற்காக தங்களது ஆவணங்களை சமர்ப்பித்தனர். இவர் களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிறப்பு முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், மண்டல தாசில்தார் அமர்நாத் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 313 மனுக்கள் பெறப்பட்டது
    • ரூ. 1.4 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மருதாலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணிபெரியசாமி, தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் செல்வி வரவேற்றார்.

    இந்த முகாமில் மொத்தம் 313 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 293 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன.

    • வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர்நகர் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு செங்கம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை தாசில்தார் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ஞானவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் வரவேற்றார்.

    இந்த நிகழ்வில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கு கோரிக்கை மனுக்கள் அச்சமூகத்தை சார்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டது.

    செங்கம் அடுத்த திருவள்ளுவர்நகர், கட்டமடுவு, நரடாபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜாதி சான்றிதழுக்காண கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
    • திருப்பூர் சப்- கலெக்டர் அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் சான்று கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.அவரிடம் அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், ஜாதி சான்று இல்லாததால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாகவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் வசிக்கும் அறிவொளி நகரில் சிறப்பு முகாம் நடத்தி நரிக்குறவர் இன மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினார். சப் -கலெக்டர் அறிவுரையின்படி நேற்று ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் வகுப்பு சான்று-9,வருமானச்சான்று- 1,குடும்ப அட்டை பெயர் சேர்ப்பு-2, வாக்காளர் அடையாள அட்டை படிவம் - 6 உள்ளிட்ட 79 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்கள் மீது ஆய்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னப்பன்,ஊராட்சி வார்டு மெம்பர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×