என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shoaib Akhtar"
- பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை என சோயிப் அக்தர் விமர்சனம்
- பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கராச்சி:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:-
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, 'தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு' என்று குறிப்பிட்டு உள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
- 2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 1,50,000 ரசிகர்கள் பார்ப்பார்கள்.
2022-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயார்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு எளிதாக இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோயிப் அக்தர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும்.
2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த முறை சரியான திட்டமிடலுடன் வரும்.
இப்போதே போட்டி முடிவுகளை கணிப்பது கடினம். ஆனால் மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் இரண்டாவது பந்து வீச வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண இந்த முறை ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று நம்புகிறேன். மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 150,000 ரசிகர்கள் பார்ப்பார்கள். அதில் 70,000 பேர் இந்திய ரசிகர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணியில் பிளவு இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒரு குழு விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு விராட் கோலிக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என கருதுகிறேன். இது தெளிவாக தெரிகிறது.
எதற்காக இந்த பிளவு ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. 20 ஓவர் உலக கோப்பையோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததால் இந்த பிளவு இருக்கலாம். அல்லது கடந்த 2 போட்டிகளில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்பதற்காக இருக்கலாம்.
எது உண்மை என தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர். ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறோம்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாசில் தோற்றவுடனே வீரர்கள் அனைவரும் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டனர். தோல்வி அடைந்தபின் விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
விமர்சனங்கள் முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியினர் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினர். தவறான மன நிலையுடன் இருந்தார்கள்.
டாசில் தோல்வி அடைந்தபோது இந்திய அணி போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதை நினைக்க மறந்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டு இருந்தால் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் எந்தவித திட்டமிடலும் இந்திய அணியிடம் இல்லை.
இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் இங்கிலாந்து அல்லது இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் பிரபலங்களால் கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-3 என இழந்ததால் இந்தியாவின் மீதான பார்வை படிப்படியாக மங்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது, அந்த அணி கேப்டன் டிம் பெய்ன் உடன் வார்த்தைப்போரில் ஈடுபட்டார். இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் படுத்தினார்.
டிம் பெய்ன் உடன் விராட் கோலி மோதல் போக்கை மேற்கொண்டதை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சில வீரர்கள் ஆக்ரோஷம் தேவையானது. அது எல்லையை மீறி விடக்கூடாது என ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தரும் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு ஆதரவாக சோயிப் அக்தர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் ‘‘விராட் கோலி தற்போதுள்ள மாடர்ன் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர். போட்டி கிரிக்கெட்டில் ஆக்ரோஷம் ஒரு பகுதி. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். தயது வீராட் கோலியை வசைபாடுவதை நிறுத்துங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த மூன்று சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 38 சதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 62 சதங்கள் அடித்துள்ளார். 38 சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு கிரிக்கெட் விமசகர்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் விராட் கோலிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புது சவாலும் விடுத்துள்ளார்.
Guwahati. Visakhapatnam. Pune.
— Shoaib Akhtar (@shoaib100mph) October 27, 2018
Virat Kohli is something else man with three ODI hundreds in a row, the first India batsman to achieve that .. what a great run machine he is ..
Keep it up cross 120 hundred mark as I set up for you ..
விராட் கோலி ஆட்டம் குறித்து சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் மிகவும் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே மேம்படுத்தி 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
அவரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியும் இணைதள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினர். அப்போது சேவாக்கிடம், கிரிக்கெட்டில் உங்களை அச்சுறுத்திய பவுலர் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேவாக், ‘நான் பயந்த ஒரே பவுலர் யார் என்றால் அது பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்தான். அவர் எந்த பந்தில் காலை பதம் பார்ப்பார், எந்த பந்தில் தலையை குறிவைப்பார் என்பது தெரியாது. அவர் வீசிய நிறைய பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டை தாக்கியுள்ளன. அவரை கண்டு நான் பயந்தேன். அதே சமயம் அவரது பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்’ என்றார்.
இந்த கேள்வியை அப்ரிடியிடம் முன்வைத்த போது, ‘‘நான் எந்த பந்து வீச்சாளரையும் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் ஒரே ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது மட்டும் கடினமாக இருக்கும். அந்த பேட்ஸ்மேன் சேவாக்தான்’’ என்றார்.
பிடித்தமான எதிரணி என்று கேள்விக்கு பதில் அளித்த சேவாக், ‘‘என்னை கவர்ந்த எதிரணி எப்போதும் பாகிஸ்தான்தான். 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். அந்த ஆட்டத்தில் என்னை பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக திட்டி தீர்த்தனர். இத்தனைக்கும் 2 பந்து மட்டுமே நின்றேன். அக்தரின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தேன். எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை அவர்களை போல் யாரும் வசைபாடியதில்லை’’ என்றார்.
மறக்க முடியாத தருணம் எது என்று சேவாக்கிடம் கேட்டபோது, ‘2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்றதை சொல்வேன். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணியாக பங்கேற்றோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சாதித்து காட்டினோம். இதேபோல் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி சொந்த மண்ணில் நடந்தது. சொந்த மண்ணில் இதற்கு முன்பு யாரும் உலககோப்பையை வென்றதில்லை என்ற நிலைமையை மாற்றி காட்டியது மறக்க முடியாது’ என்றார்.
அப்ரிடி கூறுகையில், ‘‘2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றி மறக்க முடியாத நினைவாகும். ஏனெனில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக எங்கள் நாட்டில் கிரிக்கெட் தள்ளாடிக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வெற்றி எங்கள் நாட்டில் மீண்டும் கிரிக்கெட் எழுச்சி பெறுவதற்கு முக்கியமானதாக இருந்தது’’ என்றார்.
இம்ரான் கானுக்கும் நஜம் சேதிக்கும் ஏற்கனவே மோதல் இருந்ததால் நஜம் சேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தானை பொறுத்த வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து அதிகாரத்தையும் கொண்டவர் பிரதமர்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக மாணியை நியமித்தார். அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சி மன்றக்குழு மாற்றப்பட்டது.This is to announce that i have resigned from the post of Advisor to the Chairman #PCB effective immediately.@TheRealPCB
— Shoaib Akhtar (@shoaib100mph) September 6, 2018
#ShoaibAkhtar
இந்நிலையில் சோயிப் அக்தர் தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்த அக்தர், ‘‘ஆட்சி மன்றக்குழு மாறிய பின், நெறிமுறைப்படி பதவியில் தொடர்வது தவறு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வெற்றிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டு தெரிவித்திருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரோல் செய்தனர்.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 198 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்தில் 100 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 33 ரன்கள் குவிக்க இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.
இந்தியாவின் வெற்றியையும், ரோகித் சர்மாவின் அபார சதத்தையும் பாராட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியையும், இந்திய வீரரையும் பாராட்டியதற்காக ஆக்தரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்