search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோயிப் அக்தர்"

    • அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என அக்தர் கூறினார்.
    • இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

    அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் வீரர்):

    எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த நம்பிக்கை ஏற்படும். இதுவே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதை அனுபவித்து இருப்போம். டிரெவிஸ் ஹெட் சதம் அடித்தபோது ரசிகர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இது மிகப்பெரிய சதமாகும். குறைந்தபட்சம் ஒரு சிலராவது எழுந்து நின்று பாராட்டி இருக்கலாம்.

    சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர்):

    அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அபாரமாக விளையாடிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருந்தால் டாஸ் மிக முக்கிய பங்கு வகித்து இருக்காது என்றார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆடுகளம் உகந்ததாக அமைந்ததுதான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

    இஸ்லாமாபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் (163 ரன்), மிட்செல் மார்ஷ் (121 ரன்) சதம் அடித்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்போட்டியில் டேவிட் வார்னர் 13 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்சை தவற விட்டது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

    இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர்கள் மீது முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகளை எடுக்க முடியாத நீங்கள் குறைந்தபட்சம் எதிரணி பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்சையாவது பிடித்திருக்க வேண்டும். பேட்டிங், பீல்டிங்கில்தான் சொதப்புகிறீர்கள் என்றால் வெற்றிக்கு அடித்தளமாக அமையக்கூடிய கேட்ச்சுகளை எதிரணி தாமாக கொடுத்தும் அதை தவறவிடலாமா? உங்களால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியாத போது கேட்ச் வாய்ப்புகளை சரியாக பிடியுங்கள். நீங்கள் இவ்வாறு அதிகமாக கேட்சுகளை தவறவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.
    • ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    கராச்சி:

    6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் கேப்டன்சி மேம்பட்டுள்ளது. அவரும் அணி நிர்வாகமும் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.

    இங்கிருந்து, உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். நல்ல வேலை செய்தீர்கள் சிராஜ். நீங்கள் இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்தீர்கள். உங்கள் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்து நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.

    இந்தியா உலகக்கோப்பைக்கு அவர்களின் நம்பிக்கையை உயர்த்திய பிறகு செல்கிறது. இந்தியா பின்தங்கிய நிலையில் தொடங்கியது. ஆனால் இப்போது இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் கவலையாக இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.
    • இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் "பாஸ்பால்" என்ற வார்த்தை சமீப காலங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது டெஸ்ட்டில் அதிரடியான பேட்டிங்கின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கண்டறிந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மூலம் இது பிராண்ட் ஆனது. நடந்து வரும் ஆஷஸ் தொடரின் காரணமாக தலைப்புச் செய்திகளில் இந்த வார்த்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதேபோல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து ராகுல் டிராவிட் அணியைக் குறிக்கும் வகையில் 'டிராவ்பால்' என்ற பிராண்ட் உருவானது.

    இந்த வரிசையில் பாக்பால் என்ற பிராண்ட் உருவாகி இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அறிவித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனை குறிக்கும் வகையிலும் பாஸ்பால் மற்றும் டிராவ்பால் வரிசையில் "பாக்பால்" என்ற பிராண்ட் பாகிஸ்தான் கிரிக்கெட்டை குறிக்கும் என்று அக்தர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் 28.3 ஓவர்களில் 145 ரன்களை எடுத்தது. ரன் விகிதம் ஓவருக்கு 5-க்கு மேல் உயர்ந்தது. இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
    • பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவார்.

    இந்நிலையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டதை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில், துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோயிப் அக்தர் என்னை சந்தித்து 'ஹலோ' என்று கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பினர். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.

    இந்த பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர், சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோரை பார்க்க ஒன்றுபோல் இருப்பதாகவும், இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை ஒன்று போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் என பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.
    • முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன்.

    லாகூர்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்டில் 1205 நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சதம் அடித்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்டில் அவர் 186 ரன்கள் குவித்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் செஞ்சூரி அடித்து இருந்தார்.

    34 வயதான விராட் கோலி டெஸ்டில் 28-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் 46 சதமும், 20 ஓவரில் ஒரு செஞ்சூரியும் அடித்து இருந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் மொத்தமாக 75 சதம் (28+46+1) அடித்து டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    டெண்டுல்கர் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்து முதல் இடத்தில் உள்ளார். 1989 முதல் 2013 வரை 23 ஆண்டு காலம் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விராட் கோலி 110 சதங்கள் வரை குவிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரான சோயிப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் இது தொடர்பாக கூறியதாவது:- 

    விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது. தற்போது அவர் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி 110 சதங்கள் அடித்து டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் சாதனையை முறியடிப்பார். அவர் ஆக்ரோஷமாக ரன்களை குவிப்பார்.

    என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரே எனக்கு பிடித்தமான வீரர் ஆவார்.

    சச்சின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று சக வீரரிடம் ஒருமுறை சொன்னது நினைவு இருக்கிறது. அப்போது நாங்கள் கொல்கத்தாவில் ஆடிக் கொண்டிருந்தோம். முதல் பந்திலேயே 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினேன். எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. டெண்டுல்கர் பெவிலியன் திரும்பிய பிறகு மைதானம் பாதி காலியாகி விட்டது.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    • மார்க் வுட் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார்.

    உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது வரை பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தான் வைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 100 மைல் வேகத்தில் பந்துவீசிய ஒரே வீரர் இவர்தான். ஆனால் இன்றைய நாள் வரை அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மனுக்கு எதிராக அவர் வீசிய பந்து மணிக்கு 161.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று பதிவாகியுள்ளது. ஆனாலும் அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இப்படி தனது அதிவேக பந்துவீச்சு சாதனையை முறியடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கணிப்பினை தற்போது சோயிப் அக்தர் வெளியிட்டுள்ளார்.

    இது குறித்த அவர் கூறுகையில்:-

    தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் மார்க் உட்டால் என்னைவிட அதிவேகமாக பந்துவீச முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் அவர் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார். இன்னும் அவர் தீவிர முயற்சி எடுத்தால் நிச்சயம் என்னுடைய இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணியை சேர்ந்த 32 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அந்த அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது.

    மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் (52 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை வெளியிட்டிருந்தார்.

    அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''இது கர்மா (It's call (sic) karma) என்று அழைக்கப்படும்'' எனப் பதில் அளித்திருந்தார்.

    இதுகுறித்து சற்றும் எதிர்பார்க்காத சோயிப் அக்தர் ''இதை நீங்கள் உணர்வுப்பூர்வமான ட்வீட் என அழைக்கிறீர்கள்'' என அக்தர் பதில் அளித்துள்ளார்.

    கிரிக்கெட் விமர்சகரான ஹர்சா போக்லே ''பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு. அவர்கள் செயல்பட்ட விதத்தில் சில அணிகள் 137 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும். சிறந்த பந்து வீச்சு அணி'' என ட்வீட் செய்திருந்தார்.

    • நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன்.
    • மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.

    நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    கோடான கோடி ரசிகர்கள் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், பாகிஸ்தான் ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:-

    ஹிந்துஸ்தான், நாங்கள் மெல்போர்னுக்கு முன்னேறிவிட்டோம். உங்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிலாந்தை வீழ்த்தி நீங்கள் மெல்போர்ன் வர மனதார வாழ்த்துகிறேன். மெல்போர்னில் நாங்கள் 1992 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளோம்.

    தற்போது 2022-வது வருடம். வருடம் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நம்பர் ஒன்றேதான். நான் இந்தியா- பாகிஸ்தான் இறுதி போட்டியை விரும்புகிறேன். இன்னொரு முறை மோதப் போகிறோம். நமக்கு இன்னும் ஒரு போட்டி தேவை. உலகம் முழுவதும் மூச்சு விட முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது.
    • இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த்தில் நடைபெற்றது. அதிவேக பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாதல் திணறினர். சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும். ஆனால், தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.

    சூப்பர் 12 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.

    பாகிஸ்தான் 3-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய மங்கி விட்டது. பாகிஸ்தான் அடுத்து தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். ஒன்றில் தோல்வியடைந்தால் கூட வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததன் மூலம், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை அழித்து விட்டது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ''தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்து விட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். நாம் இதை அடுத்தவர்கள் மீது விட்டுவிட்டோம். இந்தியா மீண்டும் வலுவாக திரும்பும் என்றும் நம்புகிறோம். இந்தியா விளையாடிய விதம், தரமான பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய அணிகளின் நிலை, வெளிப்படையாக வெளிப்படும் என்பதை காட்டுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது. இருந்தாலும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. அவர்களுக்கு இன்னும் எளிதான ஆட்டங்கள் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் கடினமான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பார்க்கும் வகையில் அது கடினமாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளது. இருந்தாலும், எனது அணிக்குதான் ஆதரவு. என்னதான் நடக்கும் என்றும் பார்ப்போம்.

    இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது எளிதானது அல்ல. இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது. இந்திய வீரர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு, 150 ரன்கள் எடுத்திருந்தால், அது வெற்றிக்கான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், எங்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது.

    தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வங்காளதேசம் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜிம்பாப்வே 3 இடத்திலும் உள்ளன.

    • பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும்
    • இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல.

    லாகூர்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யூ டியுப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும் (சூப்பர்12 சுற்றுடன் வெளியேறுவது) என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதே போல் இந்திய அணி அடுத்த வாரம் அரைஇறுதியில் விளையாடியதுடன் தாயகம் திரும்பும். இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல. நாங்கள் அதைவிட மோசமாக இருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வீரர்கள் தேர்வும் சரியில்லை என்று அக்தர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியா கோப்பையை வெல்லக்கூடாது என்ற பொறாமையில் அக்தர் உளறிக் கொண்டிருப்பதாக இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    • பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை என சோயிப் அக்தர் விமர்சனம்
    • பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கராச்சி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, 'தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    ×