என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
டி20 உலக கோப்பை: அரைஇறுதியுடன் இந்திய அணி வெளியேறும்- அக்தர்
- பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும்
- இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல.
லாகூர்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யூ டியுப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும் (சூப்பர்12 சுற்றுடன் வெளியேறுவது) என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதே போல் இந்திய அணி அடுத்த வாரம் அரைஇறுதியில் விளையாடியதுடன் தாயகம் திரும்பும். இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல. நாங்கள் அதைவிட மோசமாக இருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வீரர்கள் தேர்வும் சரியில்லை என்று அக்தர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியா கோப்பையை வெல்லக்கூடாது என்ற பொறாமையில் அக்தர் உளறிக் கொண்டிருப்பதாக இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்