search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இதுதான் இந்தியா தோல்விக்கு காரணம்- பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து
    X

    இதுதான் இந்தியா தோல்விக்கு காரணம்- பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து

    • அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என அக்தர் கூறினார்.
    • இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.

    அப்ரிடி (பாகிஸ்தான் முன்னாள் வீரர்):

    எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த நம்பிக்கை ஏற்படும். இதுவே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதை அனுபவித்து இருப்போம். டிரெவிஸ் ஹெட் சதம் அடித்தபோது ரசிகர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இது மிகப்பெரிய சதமாகும். குறைந்தபட்சம் ஒரு சிலராவது எழுந்து நின்று பாராட்டி இருக்கலாம்.

    சோயிப் அக்தர் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர்):

    அதிர்ஷ்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அபாரமாக விளையாடிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்திருந்தால் டாஸ் மிக முக்கிய பங்கு வகித்து இருக்காது என்றார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆடுகளம் உகந்ததாக அமைந்ததுதான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×