search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Temples"

    • பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும்.
    • பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    பல்லடம் :

    சிவாலயங்களில் பிரதோஷ நாளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • சிவன் கோவில்களில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
    • அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், அரிசி மாவு, அபிஷேகப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் அபிஷேக பால், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர், மட்டுவார் குழலி அம்மன், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் சிவன் கோவில் ஆகிய பகுதிகளிலும் சோமவார பிரதோசத்தை ஒட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம்விக்ரம சோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி ,உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொ ண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷ த்தையொட்டி சிவபெருமா னுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம்,தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    உடுமலை :

    உடுமலையில் சனி பிரதோஷத்தை முன்னி ட்டு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், சோழீஸ்வரர் சன்னதியில் சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கே ஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து ரத்தின லிங்கேஸ்வரர் சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    எலையமுத்தூர் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.மடத்துக்கு ளம் கடத்தூரில் அமரா வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சு னேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவி ல்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் நந்தியம் பகவானை தரிசனம் செய்தனர்.

    • மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    மதுரை

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    • சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
    • கால பைரவருக்கு சிறப்புபூஜை

    கரூர்:

    கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான சிறப்பு பூஜை நடந்தது.

    சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் கால பைரவர் திருக்கோலமும் ஒன்றாகும். காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் எடுத்தமையால் கால பைரவர் என அழைக் கப்படுகிறார். சூரிய பகவானின் மகனான சனீஸ்வரர் காலபைரவரை வழிபட்டு அருள்பெற்று நவக்கிரக பதவியும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளார் என்பது வரலாறு.

    சனீஸ்வரருக்கு கால பைரவர் குருவாக கருதப்படுகிறார். கால பைரவரை ஒவ்வொரு அஷ்டமி அன்று வழிபட்டு வந்தால் கண்டம், பயம் நீங்கும், பல வியாதிகள் குணமாகும், வியாபாரம் நன்கு நடக்கும், தரித்திரம் நீங்கும் என்பது ஐதீகம்.

    க.பரமத்தி சௌந்தர நாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந் திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன் னைவனநாதர் கோயில் ஆகிய கோயில்களில் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்,

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் வலம்வந்து சிவாய நமக... சிவாய நமக... என்று சொல்லி வந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவி ல்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

    • ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
    • ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
    உலகநாதனாகிய சிவபெருமான் அபிஷேக பிரியன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சிவபெருமான் நமக்கு வரும் அத்தனை பயங்களையும் நீக்கும் வல்லமை கொண்டவர். குறிப்பாக சிவ பக்தர்களுக்கு மரணபயம் என்பதே இருக்காது. அப்படி நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

    500 ஆண்டுகளுமேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். புராணங்களின் படி சிவபெருமானிடமிருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அதை இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென்திசை நோக்கி பயணமானான். இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபிப்பதை தடுக்க, ராவணன் சந்தியாகால பூஜை செய்யும் வேளையில், அந்தண இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் தனது தந்திரத்தால் இந்த லிங்கத்தை இப்பகுதியில் ஸ்தாபித்து விட்டார். பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன், லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது இருபது கைகளால் இந்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகம் ஆனதாக கூறப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

    தல சிறப்பு

    இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

    எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலத்தில், உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

    காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
    மதியம் 3.00 மணி முதல் இரவு 8.15 வரை

    கோவில் முகவரி :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில்,
    பட்கல், உத்தர கன்னட மாவட்டம்
    கர்நாடகா - 581350

    தொலைபேசி எண் :

    422 2615258
    422 2300238
    ×