search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • சோழவந்தான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்,

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் வலம்வந்து சிவாய நமக... சிவாய நமக... என்று சொல்லி வந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவி ல்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    Next Story
    ×