search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் கோவில்களில்"

    • கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    கொடுமுடி:

    ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.

    கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

    பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.

    கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.

    புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
    • கால பைரவருக்கு சிறப்புபூஜை

    கரூர்:

    கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான சிறப்பு பூஜை நடந்தது.

    சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் கால பைரவர் திருக்கோலமும் ஒன்றாகும். காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் எடுத்தமையால் கால பைரவர் என அழைக் கப்படுகிறார். சூரிய பகவானின் மகனான சனீஸ்வரர் காலபைரவரை வழிபட்டு அருள்பெற்று நவக்கிரக பதவியும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளார் என்பது வரலாறு.

    சனீஸ்வரருக்கு கால பைரவர் குருவாக கருதப்படுகிறார். கால பைரவரை ஒவ்வொரு அஷ்டமி அன்று வழிபட்டு வந்தால் கண்டம், பயம் நீங்கும், பல வியாதிகள் குணமாகும், வியாபாரம் நன்கு நடக்கும், தரித்திரம் நீங்கும் என்பது ஐதீகம்.

    க.பரமத்தி சௌந்தர நாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந் திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன் னைவனநாதர் கோயில் ஆகிய கோயில்களில் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×