search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annabhishek ceremony in"

    • கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    கொடுமுடி:

    ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.

    கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

    பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.

    கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.

    புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

    தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

    இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

    இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ×