search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seized"

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
    • வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

     வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் உள்ள பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்து விற்பனைக்கு கொண்டு சென்ற திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்( வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
    • அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது.

    எட்டயபுரம்:

    சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ய அறிவுரை வழங்கியது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பூவையா, மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.

    அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    எட்டயபுரம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் மகேஸ்வரி மழைக்காலங்களில் நோய் பரவுவது குறித்தும், நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    • கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் அதிரடி சோதனை
    • 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தது. எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து, கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் கோத்தகிரி உணவுபாதுகாப்பு அதிகாரி சிவராஜ், மீன்வள சார்ஆய்வாளர் ஆனந்த், மீன்வள மேற்பார்வையாளர் ஜீவானந்தம், உதவியாளர் பரமன் அடங்கிய குழுவினர், அங்கு உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் சுமார் 44 கிலோ கெட்டுப் போன அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், மீன் வியாபாரிகள் கொள்முதல் செய்யும்போது தரமா னவையா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். மீன்களை பலநாட்களாக குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்திவைத்து விற் பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    கோத்தகிரி பகுதியில் சுற்றுலாபயணிகள் அதிக மாக குவிந்து வருகின்றனர். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில உணவு விடுதிகளிலும் பழைய பொருட்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்
    • காலாவதியான இறைச்சி பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமை யிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    இதில் கலப்பட தேயிலை தூள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

    • கரூரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பறிமுதல்
    • செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பா ன்மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் புகையிலை பொ ருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போ லீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை செய்த போது அங்கு பான் மசாலா, குட்கா, புகையிலை பொ ருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இத்னையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த புன்னம் சத்திரம் ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்த செம்மலர் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது ராஜூ என்பவர் வைத்திருந்த கடைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன்பேரில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு விளை தெருவை சேர்ந்த ராஜூ(வயது 37) என்பவர் வைத்திருந்த கடைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராஜூவும், கடையநல்லூர் பேட்டை நத்துகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நத்தகர் பாதுஷா(47) என்பவரும் கடையநல்லூரில் மொத்தமாக கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பாதுஷா, ராஜூ ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .

    • தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
    • புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், பணியாளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய மினி ஆட்டோவில் ரூ.10, 15, 20 விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் பணியா ளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் வாகன ங்களில் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு துறையிலும் அனுமதி பெறாமல் குடிநீர் விநியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 5 தனியார் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்தியதால் விடுவிக்கப்பட்டன.
    • சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமலும், சொந்த வாகனங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் தகுதிச் சான்று பெறாமல் சில வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜயா மற்றும் முத்துசாமி ஆகியோர் ஊட்டியில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஜூன் மாதம் முதல் தற்போது வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்திய நிலையில், அவைகள் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 11 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 50 வாகனங்கள் மூலம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் 985 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது.

    வருகிற நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் சொந்த வாகனங்களை, டாக்சிகளாக பயன்படுத்தினாலும், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை மறுப்பதிவு செய்யாமல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இயக்கும் பட்சத்தில் அவர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வரி செலுத்தாமல் வாகனம் இயக்கும் பட்சத்தில், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் அனுமதி சான்று ரத்து செய்யப்படும் எனவும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறினார்.

    • மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு வந்நதது.
    • திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதியில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் வடக்கு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் என்பதும் இவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ் .பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

    அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இன்னும் பல இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

    தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய விக்கி என்கின்ற விக்னேஸ்வரனை வடக்கு காவல் துறையினர் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்யப்பட்டன.
    • பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    அவிநாசி:

    அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கா், ஆட்டையாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வழியாக வந்த தெக்கலூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்தாா்.

    அப்போது, பள்ளி வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வாகனத்தில் கேமரா பொருத்தப்படாமலும், பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. 

    • திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன் மேற்பார்வையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்து வோர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சுமார் 75 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்து, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    ×