search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் வரி செலுத்தாமல் இயங்கிய 61 வாகனங்கள் பறிமுதல்
    X

    ஊட்டியில் வரி செலுத்தாமல் இயங்கிய 61 வாகனங்கள் பறிமுதல்

    • 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்தியதால் விடுவிக்கப்பட்டன.
    • சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமலும், சொந்த வாகனங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் தகுதிச் சான்று பெறாமல் சில வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜயா மற்றும் முத்துசாமி ஆகியோர் ஊட்டியில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஜூன் மாதம் முதல் தற்போது வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்திய நிலையில், அவைகள் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 11 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சொந்த வாகனங்களை டாக்சிகளாக பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 50 வாகனங்கள் மூலம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் 985 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது.

    வருகிற நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் சொந்த வாகனங்களை, டாக்சிகளாக பயன்படுத்தினாலும், பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை மறுப்பதிவு செய்யாமல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இயக்கும் பட்சத்தில் அவர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வரி செலுத்தாமல் வாகனம் இயக்கும் பட்சத்தில், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் அனுமதி சான்று ரத்து செய்யப்படும் எனவும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறினார்.

    Next Story
    ×