என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூரில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்
- திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன் மேற்பார்வையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்து வோர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் திருச்செந்தூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சுமார் 75 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்து, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குறித்து நல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்