search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
    X

    தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
    • வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் உள்ள பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்து விற்பனைக்கு கொண்டு சென்ற திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்( வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×