search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SBI"

    • பங்குகளின் அடிப்படையில் எந்த கடனும் வழங்கவில்லை.
    • அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை.

    மும்பை :

    இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

    இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால் இந்த வீழ்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

    இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

    பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை.

    கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு.

    இதைப்போல இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை.

    இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா தெரிவித்தார்.

    இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது.

    இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை' என்றும் கூறினார்.

    • அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
    • ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும்.

    புதுடெல்லி :

    பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி உள்ளது.

    ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி 0.30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால், ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை. அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் ( வயது 57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம்.

    அந்த சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து வரும் ஜூலை.13ந்தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடியில் இழப்பீடு குறித்து இதுவரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி நிர்வாகம் தொடர்ந்து இழப்பீடு குறித்து முறையான அறிவிப்புகளை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டி வங்கிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகிற 13 ந்தேதி காலை 10 மணிக்கு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இப்படிக்கு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம். அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நகைகடன் பெற்று விட்டு , திரும்பவும் நகைக்கடனை அடைத்துவிட்டு நகையை மீட்டு பார்த்தபோது அதில் அளவு குறைபாடு இருந்தது கண்டு சில விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புதிதாக நகை வாங்கும்போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடன் பெற்ற பிறகு அட்டையில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மோசடியால் பாதிக்கப்பட்ட 504 வாடிக்கையாளர்களிடம் சமரசத் தீர்வு ஏற்பட்டுள்ளது. 30 வாடிக்கையாளர்களிடம் இழப்பீடு வழங்குவதில் உடன்பாடு ஏற்படவில்லை, மேலும் 50 வாடிக்கையாளர்களிடம் சமரச பேச்சு நடத்த வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கத்தினர் கூறுகையில், வங்கியில் நடைபெற்ற நகை மோசடியால், வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம். விரைவாக இழப்பீடு வழங்க பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில் நாட்டின் மிகப்பெரிய  அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாகவும், அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளது.

    மேலும், எஸ்பிஐ வாயிலாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
    பாரத ஸ்டேட் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. இந்த கட்டுப்பாடு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. #SBI #SBIDebitCards #ATM
    புதுடெல்லி:

    ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களை காப்பாற்றுவது குறித்து வங்கி நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றன.



    இந்நிலையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தற்போது எடுக்க முடியும். இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்கும் வரம்பை குறைத்திருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். #SBI #SBIDebitCards #ATM
    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாராக்கடன்கள் உயர்வால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 4,876 கோடி இழப்பை சந்தித்துள்ளது. #SBI #StateBankofIndia
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த நிதியாண்டின் முதல் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில் 2006 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றிருந்தது.

    கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றிருந்த நிகர வருவாயான 62,911.08 கோடி ரூபாயைவிட இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய்  65,492.67 கோடி ரூபாயாக உள்ளது.



    எனினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9.97 சதவீதமாக ( 1,88,068 கோடி ரூபாய்) இருந்த இயங்காத சொத்துகளின் நிகர மதிப்பு இந்த ஆண்டில் 10.69 சதவீதமாக (2,12,840 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.

    அதேவேளையில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8,929.48 கோடி ரூபாயாக இருந்த மொத்த செலவினங்கள் இந்த ஆண்டில் இருமடங்கு அதிகமாகி  19,228 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இவற்றின் அடிப்படையில்,  கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 3,032  கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த ஆண்டின் முதல் காலாண்டில்  4,230 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அவ்வங்கியின் வழக்கமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #SBI #StateBankofIndia
    பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக அதன் முன்னாள் துணை மேலாண்மை இயக்குனர் அர்ஜித் பாசு இன்று பொறுப்பேற்றார். #SBI
    புதுடெல்லி :

    பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குனராக பதவி வகித்த ரஜ்னீஷ் குமார்,  தற்போது அவ்வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், காலியாக உள்ள மேலாண்மை இயக்குனர் பதவிக்கு அர்ஜித் பாசு தேர்வு செய்யப்பட்டு இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார். கமர்ஷியல் கிரெடிட் மற்றும் ஐ.டி ஆகியவை சார்ந்த துறைகளை அர்ஜித் பாசு கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கித்துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் உடைய அர்ஜித், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவராவார்.  இதற்கு முன்னதாக,  பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனராக அவர்  பதவி வகித்துள்ளார். மேலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக செப்டம்பர் மாதம் 2014 முதல் மார்ச் மாதம் 2018 வரை அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SBI
    கடந்த 2016-17 நிதியாண்டின் நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் ரூ.7718 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. #SBI
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 2016-17 ஆண்டின் நான்காவது காலாண்டு வரவு - செலவுகளை தாக்கல் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்துள்ளது.

    இதே காலாண்டில் வங்கி ரூ.7718 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் வங்கி ரூ.2814 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. செயலற்ற சொத்துகள் மூலம் அதிக கடன் அளிக்கப்பட்டதால் இந்த நஷ்டத்தை வங்கி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SBI 
    ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
    ×