search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "savings account"

    • வங்கி கணக்கை குழந்தைகள் தனித்து இயக்க முடியும்.
    • கட்டுப்பாடுகளை கொண்ட சேமிப்பு கணக்கை தேர்வு செய்யுங்கள்.

    சிறுவயதிலேயே வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி அதை முறையாக செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகள் பணத்தை பொறுப்பாக கையாள்வதற்கு கற்றுக் கொள்வார்கள். வங்கிக்கணக்கை பெற்றோரின் உதவியுடன் கையாள்வதன் மூலம் சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும். குழந்தைகள் அவர்களுக்கான எதிர்கால நிதி இலக்குகளை அடைவதற்கும் இது உதவி செய்யும்.

    உங்கள் குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவதற்கு முன்பு, அவற்றின் அம்சங்களையும், நன்மைகளையும் கருத்தில் கொள்வது முக்கியமானது.

    குழந்தைகளுக்கான வங்கி கணக்கில் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கானது, 10 முதல் 18 வயது உள்ளவர்களுக்கானது என இரண்டு வகைகள் உள்ளன. இதில் முதல் வகை வங்கி கணக்கை, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சேர்ந்து கூட்டாக மட்டுமே இயக்க முடியும். இரண்டாவது வகை வங்கி கணக்கை குழந்தைகள் தனித்து இயக்க முடியும்.

    குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

    * பெற்றோர் அல்லது பாதுகாவலரின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வகையில், குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கை தொடங்கலாம். குழந்தைகள் வங்கிக்கணக்கை பாதுகாப்பாக கையாளவும், தவறான வழியில் பயன்படுத்தாமலும் இருக்க வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை நிலுவைத் தொகையாக செலுத்தி நிர்வகிக்கலாம். இது அவர்கள் பணத்தை அதிகமாக செலவழிப்பதை தடுக்க உதவும்.

    • வங்கிக்கணக்குக்கான பாஸ்புக், காசோலை புத்தகம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தாலும், குழந்தைகள் அதை பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே எடுத்து பயன்படுத்தும்படியான கட்டுப்பாடுகளை கொண்ட சேமிப்பு கணக்கை தேர்வு செய்யுங்கள்.

    • குழந்தைகளுக்கான வங்கி கணக்குகளுக்கும் இணையவழி சேவை உள்ளது. ஆனால், அதை பெறுவதற்கு வங்கியில் பெற்றோரின் ஒப்புதல் அவசியமானது. முடிந்தவரை குழந்தையின் சேமிப்பு கணக்குக்கு இணையவழி சேவையை தவிர்ப்பது நல்லது.

    * உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்பு கணக்கானது, அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் தன்னிச்சையாகவே தனிநபர் சேமிப்பு கணக்காக மாறும்படி இருப்பது சிறந்தது. இது உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வங்கிக்கடன் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.

    * உங்கள் குழந்தையின் வங்கிக்கணக்கில் நிகழும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் எப்போதும் உங்களுடைய கவனத்துக்கு வரும் வகையில் அவர்களின் வங்கிக்கணக்குடன் தொலைபேசி எண்ணை இணைத்திடுங்கள்.

    * உங்கள் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை கொண்ட வங்கிக்கணக்கை தேர்ந்தெடுக்கலாம். இது குழந்தைகள் அதிகமாக பணம் செவவழிப்பதையும், இருப்புத்தொகை குறைவதன் காரணமாக விதிக்கப்படும் அபராதத்தையும் தவிர்க்க உதவும்.

    • ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
    • முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மு.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் உரிமைத் தொகை பெற கட்டணமின்றி "சேமிப்பு கணக்கு" தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்து உள்ளது.

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 24-ந் தேதி தொடங்குகின்றன.

    இத்திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு துவங்க, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ் போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நடத்தும் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.
    • மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் தொட ங்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 32 கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமும் குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்டம மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
    • ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும்.

    புதுடெல்லி :

    பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி உள்ளது.

    ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி 0.30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆனால், ரூ.10 கோடிக்கு உட்பட்ட இருப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை. அக்டோபர் 15-ந் தேதி முதல், வட்டி உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

    ×