search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint Registrar"

    • ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.
    • மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் தொட ங்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 32 கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமும் குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்டம மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×