search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saree"

    • புடவை தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன.
    • லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குரதா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
    • சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியலாம்.

    அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்) கூடுதல் அழகைத் தருவதாக இருக்கின்றது.மிகவும் மிருதுவான பீச், சந்தனம், பிஸ்தா, ஆரஞ்சு,கிரே, பிங்க் வண்ண புடவைகளுக்கு போச்சம்பள்ளி மற்றும் இக்கத் டிசைன்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்து பிளவுஸ் பீஸாகத் தருகிறார்கள்.

    இந்த பிளவுஸ் பீஸ்கள் அந்தப் புடவைக்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது. இதுபோன்ற லினன் ஜூட் புடவைகள் பெயர் மற்றும் வண்ணத்திற்கு ஏற்றது போலவே மிகவும் மிருதுவாக, மென்மையாக இருக்கின்றன. இந்தப் பிளெயின் புடவைகளில் கோல்டன் ஜரி கட்டங்கள் வருவதுபோல வடிவமைக்கப்பட்டு வருவது கூடுதல் அழகாக இருக்கின்றது. புடவை தலைப்பில் வரும் குஞ்சங்களும், கோல்டன் மற்றும் புடவை நிறத்தில் வருவதுபோல செய்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.

    பிச்வாய் சில்க் புடவைகள்

    மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம். காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

    இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது. உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

    பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

    சாஃப்ட் காதி சில்க் புடவைகள்

    பிளெயின் வண்ணப் புடவைக்கு தலைப்பு மற்றும் பார்டர் பூ டிசைன் வருவதுபோல் வடிவமைத்து தலைப்பில் டேஸில்ஸ் எனப்படும் குஞ்சம் தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது இந்தப் புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் போன்ற வண்ணங்களை உடலுக்குத் தந்து பார்டர் மற்றும் தலைப்பில் பெரிய பூ டிசைன் இருப்பது போன்று தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகளிலேயே இக்கத் டிசைன்களை மிகவும் அழகாகத் தந்திருக்கிறார்கள். பார்டரும், பிளவுஸும் ஒரே டிசைனில் இருப்பது அருமையாக இருக்கின்றது. அணிந்தால் உடலுடன் ஒட்டி வரும் இந்தப் புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் பிரிண்ட்கள் இருக்க பார்டர் மற்றும் பிளவுஸ் பிளெயினாக இருப்பது போன்று வரும் புடவைகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வரும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் வெளியில் உடுத்திச் செல்வதற்கு ஏற்றவையாக உள்ளன.

    சாட்டின் சில்க் புடவைகள்

    தொட்டாலே வழுவழுப்பாகவும், மெத்தென்றும் இருக்கும் இந்த சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியும் பொழுது அவர்களை சற்று குறைந்த உடல்வாகு இருப்பதுபோல் காட்டக்கூடிய புடவை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் ஏராளமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வருவதால் எதை எடுப்பது எதை விடுவது என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிலும் இந்த புடவைகளில் வரும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் இந்தப் புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டுகின்றன.சாட்டின் சில்க் புடவைகளுக்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. இந்தப் புடவைகளின் தலைப்பில் மட்டும் டிசைன்கள் வந்து உடல் முழுவதும் பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது, தலைப்பில் வரும் பெரிய டிசைன் பார்டரிலும் அதே பெரிய அளவில் வருவது, தலைப்பில் வரும் டிசைன் இரண்டு பக்க பார்டரி லும் வந்து உடல் பகுதி பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது என ஒவ்வொரு புடவையும் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

    • ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
    • தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

    மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம்.

    காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன. இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.

    உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

    பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

    • இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
    • இந்த புடவைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை, புளிச்சை கீரை நார், மூங்கில் நார்கள் என அனைத்து நார் வகை உணவுப் பொருட்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.

    சணல் புடவைகள்

    காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே சணல் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்ட் பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.

    மூங்கில் பட்டுப் புடவைகள்

    மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வருகிறது இந்த மூங்கில் புடவைகள். பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரமாண்டத்தைக் கொடுக்கும்.

    கற்றாழை நார் புடவைகள்

    மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளன. நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது. பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றி பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    • கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.
    • ஸ்டிரெயிட் குர்தா(Straight Kurta)க்களை அனைத்து உடல்வாகுடைய பெண்களும் அணியலாம்.

    நம் நாட்டுப் பெண்கள் அணியக்கூடிய பாரம்பரிய உடைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பது புடவைகளாகத்தான் இருக்கும்.

    பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய ஆடை வடிவமைப்புகள் புடவைகள், குர்தா செட், லெஹங்கா சோளி, சல்வார் கமீஸ், சுரிதார் உடைகள் இந்திய ஸ்டைல் ​​கவுன்கள், பாரம்பரிய உடகள், பாவாடைகள், குர்தா பைஜாமா, பலாஸ்ஸோ உடைகள், பாட்டியாலா சூட், ஹரேம் சூட், ஷராரா சூட், டோத்தி சூட்

    சமகாலத்திய புடவைகள்

    * காஞ்சீவரப் பட்டுப்புடவைகள்: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவை இந்த காஞ்சீவரப் பட்டுப்புடவைகள். காஞ்சீவரப் பட்டுப் புடவைகளிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பலவிதமான டிசைன்களும், பாணிகளும் வந்துவிட்டன.கதை பேசும் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு கருவை புடவையில் கொண்டுவந்து நெய்கிறார்கள்.காஞ்சிவரம் புடவைகள் என்றாலே மிகவும் கனமாக இருக்கும் என்று சொல்வதற்கு மாறாக இப்பொழுது லைட் வெயிட் புடவைகளும் வந்துவிட்டன.

    * பனாரஸ் பட்டு புடவைகள்: புனித நகரமான வாரணாசியை பிறப்பிடமாகக் கொண்டவை பனாரஸ் பட்டு புடவைகள். இந்தப் புடவைகள் ஆடம்பரமான மற்றும் சிக்கலான வடிவமைப்புக்கு பெயர் பெற்றவையாகும்.. பாரம்பரிய பனாரஸ் புடவைகள் மிகவும் கனமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இப்பொழுது வரும் பனாரஸ் சேலைகள் கண்கவர் டிசைன்களில் கனம் குறைந்தவையாக வருகின்றன.

    * சந்தேரி சில்க் புடவைகள்: கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் உடுத்தக்கூடிய வசதியான புடவைகளாக இவை இருக்கின்றன.

    * சீக்வின் ஷிஃபான் புடவைகள்: மிகவும் கனம் குறைந்த அதே நேரத்தில் ஆடம்பர தோற்றத்தை தரக்கூடிய இந்த புடவைகளின் ரகத்திலேயே பெரும்பாலான பார்ட்டி புடவைகள் வருகின்றன.இந்த புடவைகளில் பலவிதமான எம்பிராய்டரி மற்றும் சம்கி வேலைப்பாடுகளுடன் வரும் புடவைகள் இன்றைய இளம் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.இந்த புடவைகளிலேயே நீளமான கவுன்களை தைத்து அணிந்து கொள்வதும் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

    குர்த்தாக்கள்

    * நவீன ஹை-லோ அனார்கலி குர்தா: முகலாய தோற்றம் கொண்ட அனார்கலி குர்த்தாக்கள் மார்பு பகுதியில் இறுக்கிப் பிடித்து இடுப்பிலிருந்து பரந்த ஃப்ளேர்களை கொண்டவையாக இருக்கும்.பாரம்பரிய அனார்கலி குர்திகள் எம்பிராய்டரி மற்றும் மிகவும் கனமான அலங்காரங்களை கொண்டவையாகும்..இப்பொழுது வரும் ஹை- லோ குர்திகள் மிகவும் ட்ரெண்டிங் ஆடையாக இருக்கின்றன. காட்டன், ஷிஃபான்,பட்டு, ஜார்ஜெட் என அனைத்து விதமான துணிகளிலும் கல்லூரி, அலுவலகம் மற்றும் சிறு விழாக்களுக்கு அணிந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

    * A-லைன் குர்தா: A-லைன் வடிவத்துடன் பரந்த அடிப்பாகத்தை கொண்ட இவ்வகைக் குர்த்தாக்கள் அனார்கலி ஆடைகளுக்கு மாற்று என்று சொல்லலாம்.இந்த பிரபலமான நவீன பாணி ஆடைகள் தினசரி முதல் எப்போதாவது அணிவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மாடல்களில் வருகின்றன.இவை கணுக்கால் வரை இருக்கும் லெகிங்களுடன் அணிய ஏற்றவை..

    * பிரிண்டட் ஸ்டிரெயிட் குர்தா: பல ஆண்டுகளாக பெண்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் இவை முதலிடம் பிடித்தவை என்றால் அது மிகையாகாது. லெக்கின்ஸ், பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என பலவிதமான கால்சட்டைகளுடன் அணிவதற்குப் பொருத்தமானவை இவை.கலம்காரி, இக்கத்,ஃபிளோரல்,ஜியாமெட்ரிகல் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்களுடன் வரும் இந்த ஸ்டிரெயிட் குர்தாக்களை அனைத்து உடல் வாகுடைய பெண்களும் அணியலாம்.

    * லேயர்ட் குர்தா: ஒரே குர்த்தாவில் பல லேயர்கள் வருவது போல வடிவமைக்கப்பட்டு வருவது இப்பொழுது மிகவும் பிரபலமான பாணியாக உள்ளது. பெரும்பாலும் உட்புறம் வரும் லேயர்பிளெயின் கலரிலும் வெளிப்புறம் வரும் லேயர்கள் பிரிண்ட்களுடன் வருவது போலவும் வடிவமைக்கிறார்கள்.சில குர்தாக்களில் சுங்கங்கள் தொங்குவது போன்று தைய்த்திருப்பது கூடுதல் அழகைத் தருகின்றது.கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாக இவை இருக்கின்றன.

    * சிக்கன்காரி குர்தா: லக்னோவின் வர்த்தக முத்திரைக்கு பெயர் பெற்றவை என்றால் அவை சிக்கன்காரி குர்தாக்களாகத்தான் இருக்க முடியும். பருத்தி, பட்டு மற்றும் ஷிஃபான் துணிகளில் வரும் இந்த ஆடைகளில் நுட்பமான நூல் வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.இவை பெரும்பாலும் வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலேயே வருகின்றன.கழுத்து, கைகள் மற்றும் ஹெம்லைன் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வரும் இந்த சிக்கன்காரி ஆடைகளுக்கு எப்பொழுதுமே பெண்களிடம் மவுசு அதிகம் என்று சொல்லலாம்.அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இவை ஏற்றவையாக இருக்கின்றன. பாட்டியாலா, லெகிங் மற்றும் நேரான பேண்ட்களுடன் அணிய ஏற்றவை.

    லெஹங்கா சோளி

    ரஃபிள்டு துப்பட்டாவுடன் வரும் மென்மையான நெட்டட் லெஹங்கா, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா கமீஸ்,ஃபாயில் பிரிண்ட்டுடன் கூடிய துடிப்பான வண்ணங்களில் வரும் லெஹங்கா, ஹெவி பிரைடல் எம்ப்ராய்டரி லெஹங்கா,ஸ்டைலான லெஹங்கா சோளி என லெஹங்காக்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மிகவும் டிரெண்டாகவும், அசத்தலாகவும் வந்திருக்கின்றன.

    • சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம்.

    ஜாலி வேலைப்பாடு என்பது துணிகளில் துளைகளை உருவாக்கி,அந்தத் துளைகளைச் சுற்றி செய்யப்படும் நூல் வேலைக்கு ஒப்பான ஒரு நுட்பமான வேலைப்பாடாகும். துணிகளில் வெறும் துளைகளை மட்டும் உண்டாக்கி செய்யப்படும் வேலைப் பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்று சொல்லலாம்.துணியின் தொடர்ச்சியை சேதப்படுத்தாமல் ஒரு ஊசியால் வார்ப் மற்றும் நெசவு நூல்களை வெளியில் இழுத்து துளைகளை உருவாக்குவதை உள்ளடக்கியதே இந்த வேலைப்பாட்டின் சிறப்பாகும்.இதன் மூலம் எம்பிராய்டரி வேலைப்பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்பது புரிந்திருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கன்காரி வேலைகளில் இந்த சிறப்பு வாய்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளில் மிகச்சிறந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் ஜாலி என்பது ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி(டிரெலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

    தையல் மற்றும் எம்பிராய்டரி என்பது காலங்காலமாக முதலில் தேவையாகவும் பின்னர் ஒரு விலை போகும் பொருளாகவும் இருந்திருக்கின்றது.துணிகளை கற்கள் மற்றும் நூல்களால் அழகுபடுத்துவது, ஜமிக்கி வேலைப்பாடுகள் என பல்வேறு அலங்காரங்கள் இருந்தாலும் இந்த ஜாலி வேலைப்பாடு என்பது சற்று வித்தியாசமான அதிநவீன வேலைப் பாடாக இருந்ததால் மக்களிடையே பிரபலமானது.

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான், துருக்கிய கட்டிடக்கலையில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.பரந்த திறந்த வடிவமைப்புகளும், ஜாலியின் காட்சி விளைவுகளும், அதாவது கான்கிரீட்டில் உள்ள லேட்டிஸ் திரைகளும் அவரைக் கவர்ந்தன. ஜாலி அல்லது லேட்டிஸ் திரைகளை கான்கிரீட்டில் பிரதி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் சிக்கன்காரியில் இந்த நுட்பத்தை உருவாக்க தூண்டியது.முகலாய கட்டிடக்கலையில், அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றில் இந்த லேட்டீஸ் திரைகள் போன்ற அமைப்புகள் முகலாயர்களுக்கு ஒரு அடையாளமாக மாறியது

    வேலைப்பாடு

    சுமார் 40 தையல்கள் உள்ள இந்த சிக்கன் காரி வேலைப்பாட்டில் ஒருவகையான தையலில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் தங்கள் ஆடைகளில் மட்டுமே வேலைப்பாடுகளை செய்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.. இந்த ஆடைகளில் விடுபட்ட இடங்களை நிரப்பும் கைவினைஞர்களால் துணிகளில் ஜாலிகளை உருவாக்க முடியாது.. ஜாலிகளை உருவாக்குவதற்கென்றே நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற ஜாலிகளை உருவாக்க முடியும்.

    'அசெம்பிளி லைன்' எனப்படும் எம்பிராய்டரி வேலைப் பாட்டின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வார்ப் மூலம் துணியின் மீது ஜாலியை உருவாக்கும் வேலை செய்யப்படுகிறது..ஒரு ஊசியால் நெசவு நூல்களைப் பிரித்து இறுக்குவதன் மூலம் துணியில் வலை போன்ற தோற்றமானது உருவாகின்றது.இது துணியின் வலிமையை சமரசம் செய்யாமல் வழக்கமான சுற்றளவுடன் துளைகளை உருவாக்குகிறது. துளைகளுடன் உருவாக்கப்பட்ட துணியை நிரப்ப கைவினைஞர்கள் அந்த வலையைச் சுற்றி வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.

    பாணி மற்றும் வகை

    நெட்டட் துணிகளை தயாரிக்கும் வேலையைப் போன்றதே இந்த ஜாலியை உருவாக்கும் விளைவு என்று சொல்லலாம். இது ஆடையை மிகவும் நேர்த்தியாகவும் எடை குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது. ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாக இருந்தாலும், இதுபோன்ற பல நுட்பத்துடன் கூடிய வேலைப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

    ஹத்கதி மற்றும் பேங்க் ஜெயில் என்று அழைக்கப்படும் இரண்டு நேரான ஜாலி தையல்கள் இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன.புள்புள் சாஷ்ம், மக்ரா, மந்த்ராஸி, பூல் ஜாலி, சிதாவுல் ஜாலி மற்றும் தாஜ்மஹால் ஆகியவை பொதுவாகக் காணப்படும் பிற ஜாலி தையல்கள் ஆகும்.சிக்கன்காரி ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்ஃப்கள் பூக்கள், கொடிகள், இலைகள் மற்றும் புட்டிஸ். இதற்குள் ஜாலிகள் உருவாக்கப்படுகின்றன.

    இன்றைய சூழ்நிலை

    உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம்பிராய்டரி வடிவங்களில் ஒன்று என்று சிக்கன்காரி ஆடைகளைச் சொல்லலாம்..உலக அளவில் போற்றப்படும் சில சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டஇந்த ஜாலி வேலைப்பாட்டுடன் கூடிய சிக்கன்காரி உடைகளை அணிந்து ஆடவரும், பெண்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள். இருப்பினும் சிக்கன் காரி கலையை கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.

    ஜாலிஸை உருவாக்கும் நுட்பம் உலகம் முழுவதும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட பல வடிவமைப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த வகை எம்பிராய்டரியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால்,சிக்கன்காரி ஆடைகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.

    பராமரிப்பு

    ஜாலி உருவாக்கப்படும் விதத்தால் துணியானது எந்தவித சமரசமும் இல்லாமல் முன்பு எப்படி வலிமையாக இருந்ததோ அதேபோன்ற வலிமையுடன் ஜாலி உருவாக்கப்பட்ட பின்பும் இருக்கின்றது.இதனால் இந்த ஆடையை பராமரிப்பது என்பது எளிதாகிறது.வழக்கமான சலவை மற்றும் இஸ்திரி நுட்பங்கள் ஜாலி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றது.மற்ற சாதாரண துணிகளுக்கு செய்யும் பராமரிப்பு போன்ற பராமரிப்பை இந்த துணிகளுக்கும் வழங்கலாம்.

    ஜாலியில் உள்ள துளைகள் கைவினைஞர்கள் விரும்பும் நீளம் மற்றும் அகலத்தில் இருப்பது போன்று உருவாக்கப்படுகின்றது. அது பொதுவாக அவர்களுடைய படைப்புப் பார்வையைப் பொறுத்தது.

    ஜாலியை முடிக்க, அது உருவாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு அவுட்டர் லைனிங் இருக்க வேண்டும்.ஒரு ஜாலி எப்போதுமே ஏதாவது ஒரு மையக் கருத்தை கொண்டிருப்பதுபோல் செய்யப்படுகிறது.

    சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    முதலில், சிக்கன்காரி வெள்ளை நிற துணிகள் அல்லது பேஸ்டல் வண்ணங்களில் மட்டுமே செய்யப்பட்டாலும், தற்பொழுது துடிப்பான வண்ணங்களில் செய்யப்படும் சிக்கன்காரி ஆடைகளை இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.

    • மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன.
    • மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை..

    பெண்கள் அன்றாடம் உடுத்துவதற்கு மிகவும் வசதியான மிருதுவான சேலைகளின் வரிசையில் மல்மல் சேலைகளுக்கு முதலிடம் என்று சொல்லலாம். பலவித வண்ணங்களில் அருமையான பூ டிசைன்கள், ஜியோ மெட்ரிக் டிசைன்கள்,இக்கத் பிரிண்ட்டுகள் என உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலும் பல்லு மற்றும் பார்டர் வேறு வண்ணத்திலும் இருப்பது போலவும், புடவை முழுவதுமே ஒரே வண்ணத்தில் இருப்பது போலவும், உடல் முழுவதும் ஒரு வண்ணம் மூன்றுவிதமான பார்டர் வண்ணங்கள் என்று வித்தியாசமாகவும் இந்த மிருதுவான மல்மல் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதிலும் குறிப்பாக உடல் முழுவதும் டிசைன்கள் இருக்க பார்டர் ஒன்றன் கீழ் ஒன்றாக பிளெயின் வண்ணத்தில் இருப்பது போன்று வந்திருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் இரண்டு சைடு பார்டர்களும் ஜியோ மெட்ரிக் டிசைனில் இருப்பது போன்று காண்ட்ராஸ்ட் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சேலைகள் கண்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றன..ஆரஞ்சு வண்ணத்திற்கு அடர் நீல வண்ணம் பார்டராக வருவது போலவும், மஜன்தாவிற்கு வான நீல நிறம் பார்டராக வருவது போலவும், கிரே வண்ண உடலிற்கு மஜன்தா வண்ணம் பார்டராக வருவது போலவும் மிகவும் அருமையாக கண்கவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.

    உடல் முழுவதும் அலை வடிவத்தை செங்குத்தாக வடிவமைத்து பார்டர் மற்றும் பல்லு விற்கு வெறும் கோடுகள் வருவது போன்று வடிவமைத்திருப்பது அணிபவருக்கு ஒல்லியான தோற்றத்தை தருவதாக இருக்கும். உடல் முழுவதும் கொடியில் இலைகளும் பூக்களும் இருப்பது போன்றும் பார்டர் மற்றும் பல்லுவிற்கு நெளி கோடுகள் வருவது போன்றும் டிசைன் செய்யப்பட்டிருப்பது அலுவலகம் செல்லும் பெண்கள் உடுத்துவதற்கு நேர்த்தியான ஒன்றாக இருக்கும்.

    சில பெண்கள் மிகவும் மிருதுவான வண்ணங்களில் வரும் சேலைகளை அணிவதற்கு விருப்பப்படுவதால் அதுபோன்றும் இந்த மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன. உடல் முழுவதும் சந்தன வண்ணத்தில் நீலம், பச்சை, மஞ்சள்,பழுப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய டிசைன்களை பிரிண்ட் செய்து அதே வண்ணங்களை பார்டராகக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கின்றது. வயதான பெண்கள் மட்டுமல்லாமல் சிறு வயது பெண்களும் இதுபோன்ற மிருதுவான வண்ணங்களை இப்பொழுது தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.. இந்த மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை.. இந்த புடவைகளை வீட்டிலேயே சாதாரண ஷாம்பு வாஷ் செய்து அணியலாம்.

    உடல் முழுவதும் செங்குத்துக் கோடுகள் இருக்க பல்லு மற்றும் பார்டரில் ஃபிகர் பிரிண்டுகள் வருவது போன்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புடவைகள் அதன் வண்ணம் மற்றும் டிசைனிற்கு அட்டகாசமாக பொருந்தி வருகின்றது என்று சொல்லலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிவதற்கு இந்த புடவைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்..புடவை முழுவதும் செல்ஃப் கலரில் இருப்பது ஒரு விதமான அழகு என்றால் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் வரும் புடவைகள் மற்றொரு விதத்தில் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

    உடல் முழுவதும் கலம்காரி டிசைன்களுடன் பாந்தினி பிரிண்ட் பார்டர் மற்றும் பல்லுவுடன் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.மிருதுவான வண்ணத்தில் உடல்முழுவதும் கலம்காரி டிசைன்கள் வருவது போன்றும் அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பாந்தினி பிரிண்டுகள் பார்டர் மற்றும் பல்லுவாக வருவது போன்றும் வடிவமைத்து இருப்பது புடவையை விரும்பாதவர்களைக் கூட வாங்கத் தூண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.

    பத்திக் பிரிண்ட்களை இந்தப் புடவைகளில் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்..கையகல பட்டையான செங்குத்து கோடுகளில் பத்திக் பிரிண்ட்டுகளும் அதையடுத்து கையகல பிளெயின் வண்ணப் பட்டைகளும் வருவது போன்று இருக்கும் புடவைகள் அட்டகாசமாக இருக்கின்றன.. அதிலும் பிரிண்டுகள் ஒரு வண்ணத்திலும் பிளெயின் பட்டைகள் மற்றொரு வண்ணத்திலும் வருவது மிகவும் அழகாக இருக்கின்றது.

    மல் மல் காட்டன் புடவைகளில் பிளவுஸுடன் வரும் புடவைகளும் இருக்கின்றன..உடல் முழுவதும் பூ டிசைன்கள், பல்லுவிற்கு வித்தியாசமான டிசைன்கள் இருப்பதுபோன்று வரும் புடவைகளுக்கு மிகவும் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிளவுஸ் துணிகளை இணைத்திருக்கிறார்கள்..

    மல்மல் புடவைகளில் ஹாஃப் அண்ட் ஹாஃப் பேட்டர்ன்களும் வருகின்றன.உடல் முழுவதும் பூ டிசைன் இருந்தால் ஃபிரில்லிற்கு கட்டங்கள், கோடுகள் மற்றும் பிளெயின் வண்ணங்கள் வருவது போன்றும் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்த புடவைகளில் ஹேண்ட் பிரிண்டுகள் மிகவும் கலக்கலாக இருக்கின்றன என்று சொல்லலாம்.. வெளியில் அணிந்து செல்வதற்கு மிகவும் பொருத்தமாக இந்த சேலைகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    மிருதுவான துணியில் அட்டகாசமான டிசைன்களும் அருமையான வண்ணங்களும் இருப்பது போன்று வடிவமைத்து வருவது மல்மல் சேலைகளின் சிறப்பம்சம் என்று சொல்லலாம்.. இந்தப் புடவைகளை டிரை கிளீன் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் வீட்டிலேயே சாதாரணமாகத் துவைத்துப் பயன்படுத்தலாம்.கோடைக்காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற சேலைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.இவ்வளவு அருமையான இந்தப் புடவைகள் 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்குள் கிடைப்பது மல்மல் புடவைகளின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    • இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.

    கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.

    இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.

    வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.

    ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.

    நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.

    கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.

    இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    • திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.
    • காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    திசையன்விளை:

    திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.

    நற்பணி இயக்கத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இயக்க நிர்வாகிகள் ஆதி, ராஜ், சின்னத்துரை, பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனபால் வரவேற்று பேசினார்.

    விழாவில் 120 மாணவர்களுக்கு சீருடைகளும் 300 பேருக்கு வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் சி.விஜயபெருமாள், திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தராஜ், பனங்காட்டு படை கட்சி அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சி இறுதியில் நற்பணி இயக்க நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.

    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    ×