என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
ஓவியம் போல் காட்சி தரும் பிச்வாய் சில்க் புடவைகள்
- ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
- தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.
மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம்.
காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன. இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்