search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகள்
    X

    பெண்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகள்

    • புடவை தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன.
    • லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குரதா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    Next Story
    ×