search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saree"

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதியோர் உதவி தொகை பெறுவோருக்கும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
    • ஆனால் போதிய அளவில் வேட்டி, சேலை உற்பத்தி இல்லாததால், இலவச வேட்டி, சேலை வரத்து குறைந்தே காணப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டி

    கையையொட்டி நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதியோர் உதவி தொகை பெறுவோருக்கும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.

    நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை விநியோகிக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் போதிய அளவில் வேட்டி, சேலை உற்பத்தி இல்லாததால், இலவச வேட்டி, சேலை வரத்து குறைந்தே காணப்பட்டது. இதனால் சிலருக்கு மட்டுமே பொங்கலை ஒட்டி வழங்கப்பட்டன.

    நாமக்கல் மாவட்டத்தில் 5.4 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்பு 100 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இலவச வேட்டி, சேலையை பொருத்தமட்டில் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் 55 சதவீதம் சேலையும், 52 சதவீதம் வேட்டியும் குறைந்தபட்சம் 2.5 லட்சம் பேருக்கு (40 சதவீதம்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரியின் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் 20 சதவீதம் அளவில் வேட்டி, சேலை வழங்க வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்திற்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வேட்டி,சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
    • பெண்களுக்கு விதவிதமான புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி இந்த பொங்களுக்கு என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    * சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும் ,உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது.

    உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும், உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது. இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    • மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.
    • சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

    திருமணத்துக்கு எடுக்கப்படும் முகூர்த்தப்பட்டு சேலையை பெண்கள் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பாதுகாப்பது வழக்கம். ஆனால் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் அதன் ஆயுள் காலத்தை மேலும் கூட்ட முடியும். சிலர் பட்டு சேலையை ஏதாவது விழாவுக்கு கட்டிக்கொண்டு செல்வார்கள். வீட்டிற்கு திரும்பியதும் உடனே மடித்து பெட்டியில் வைத்து விடுவார்கள்.

    வியர்வை ஈரத்துடன் அந்த சேலை மடித்து வைக்கப்படுவதால் அதனை பூச்சிகள் அரித்து பட்டுச்சேலையின் சரிகை கருத்துப்போய் விடுகிறது. இதனால் சேலையின் பளபளப்பு குறைந்து அது கிழிந்து விடும் நிலைக்கு உள்ளாகிறது. அதனை தவிர்க்க சேலையை கழற்றியதும் உடனடியாக மடித்து வைக்காமல் மின்விசிறி காற்றில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை அயர்ன் செய்து பீரோவில் வைத்து அத்துடன் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் சேலைகளை பூச்சி அரிக்காது.

    மாதம் ஒருமுறை எல்லாப் பட்டு புடவைகளையும் வெளியில் எடுத்து நிழல்பட உலர்த்தி அயர்ன் செய்து வைத்தால் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த சேலைகள் புதியதுபோலவே இருக்கும். மேலும் அதை பாதுகாக்க துணிப்பைகளை தைத்து அதில் சேலையை மடித்து வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜரிகை கருக்காது. அத்துடன் மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.

    பட்டுப்புடவைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றை மரபீரோவில் வைத்து பராமரிக்கலாம். பட்டுச்சேலை மற்றும் பட்டு ஜாக்கெட் அணிந்து வெளியே சென்று திரும்பும்போது ஜாக்கெட் வியர்வையில் நனைந்து இருக்கும். அதனை லேசாக ஷாம்பு போட்டு கசக்கி அலசி காய வைக்க வேண்டும். அதற்கு சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் அதிக காரத்தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவதால், ஜாக்கெட் பொலிவிழந்து கிழிந்து விடும். இந்த ஆலோசனைகள் பட்டுச்சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மட்டும் அல்ல... பாரம்பரிய பட்டு ரகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

    • காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும்.
    • தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும்.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும்.
    • துணிகளுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    வண்ணங்கள் நம் கண்களுக்கு அழகையும் மனதிற்கு இனிமையையும் அளிக்கக் கூடியவை. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை. இந்த காரணத்தினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. நம் தமிழக கோயில்களிலும் அஜந்தா எல்லோரா குகைகளிலும் இன்னும் உலகில் பல்வேறு இடங்களிலும். இன்றும் அழகாய் வண்ணமயமாய் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களினால் தீட்டப்பட்டவையே. காலத்தை கடந்து நிற்கும் இயற்கை சாயங்களின் அற்புத தன்மையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. துணிகளுக்கும் இவ்வாறே இயற்கை சாயங்களை உபயோகித்து வண்ண உடைகளை அணிந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கை சாயங்கள் துணிகளில் கொண்டுவரப்பட்டன. செயற்கை சாயங்கள் வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் அவைகள் இயற்கை சாயத்திற்கு மாற்றாக எல்லா இடங்களிலும் குறிப்பாக துணி நெசவுகளில் உபயோகப்படுத்தப்பட ஆரம்பித்தது. ஆனால் இந்த செயற்கை நிறமூட்டிகளினால் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்று சமுதாய அக்கறை கொண்டவர்களும் புதுமை நோக்கம் கொண்டவர்களும் நினைக்கத் தொடங்கினர். அவ்வாறு நினைத்த ஆர்எம்கேவி நிறுவனத்தினர் களின் கருத்தில் உதித்து பத்தாண்டு கால ஆராய்ச்சிகளுக்கு பின்பு டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து பிரத்தியேக உத்திகளையும் கண்டுபிடித்து அந்த இயற்கை சாயங்களை தங்கள் துணிகளில் ஏற்றி அழகான பட்டு சேலைகளை நெய்து உள்ளனர்.

    இதைப் பற்றி கூறிய ஆர்எம்கேவி நிறுவனத்தினர், "ஆர்எம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் கலெக்சன். இயற்கை சாயங்களை உருவாக்கும் பண்டைய கால வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவற்றை பற்றி தெரிந்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே.

    நாங்கள் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டு அறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்சன்ஸ் சேலைகள், மஞ்சுஸ்தா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் ஆம்பர் நிற சாயங்களை கொண்டுள்ளது. அரக்கு மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நீல நிற சாயத்தையும், வெந்தயம், நெல்லிக்கனி, சிவப்பு மண், மாதுளை பழத்தோல்கள், மல்பெரி இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருள்களில் சிலவாகும்.

    துணியை நெய்து சேலை உருவாக்கிய பின் தான் பொதுவாக துணிக்கு சாயம் ஏற்றப்படும். ஆனால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும். அந்த முறையில் நாங்கள் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்களை ஏற்றி தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்கிறோம். எனவே இனி வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயம் இடப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் கலெக்ஷனில் இனி வரும் விழா காலங்களில் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள்

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள் என்ற புதிய லெனோ தொழில்நுட்பம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில் "40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இவை. பட்டுத்துணி நெசவில் லெனோ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டு நூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் காற்றோட்டமிக்க வடிவமைப்புடன் கைகளால் நெய்யப்பட்ட புதுமையான படைப்பாகும். மிக லேசான எடை கொண்ட இந்த சேலையை தற்கால இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.

    இந்த லெனோ சேலைகளில் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பிரத்தியேகமான புதுமை படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப் புடவைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தரமான நேர்த்தியான பட்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை எங்கள் தேர்ந்த நெசவாளர்கள் காப்புரிமை பெற்ற லினோ நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கைகளால் நெய்ய்கிறார்கள். இதனால் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் லேசாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. எளிமை மற்றும் உயிர்ப்பு கொண்ட இந்த சேலைகளை எந்த விழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் வாங்கி அணியலாம்.

    1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆர்எம்கேவி டிசைன் ஸ்டூடியோ பல தனித்துவமான பட்டு சேலைகளை உருவாக்கியுள்ளது. சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள், குரல் ஓவியம் போன்ற தீம் புடவைகளும், எந்த பக்கமும் திருப்பி அணிந்து கொள்ளக்கூடிய கிராண்ட் ரிவர்சல் புடவைகள், 50,000 நிறங்கள் கொண்ட சேலை, வர்ணஜாலம் ரகங்கள், நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லெனோ லைட் சேலை போன்றவை எங்களின் தனித்துவத்தை பறைசாற்றுபவைகள் ஆகும். இவற்றைக் கடந்து எங்களிடத்தே பேன்சி சேலைகள் எம்ராய்டரி சேலைகள் சல்வார் கம்மீஸ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் என்று பலவிதமான ஆடைகளும் விற்பனைக்கு உள்ளன," என்றனர்.

    • கம்பளி ஆடைகளை பராமரிக்க பயன்படுத்தக்கூடிய எளிய குறிப்புகள் உள்ளன.
    • இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும்

    மற்ற ஆடைகளை விட கம்பளி ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் இவை மென்மையானவை மற்றும் மிக எளிதாக மங்கலாம் அல்லது சுருங்கலாம், எனவே இந்த வகையான ஆடைகளுக்கு சரியான கவனிப்பு தேவை.

    குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள் ஒவ்வொருவர் முகத்திலும் மலர்ச்சி தரும் ஒன்று, ஆனால் இந்த ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுவதால் அவற்றை கவனிப்பது கடினம், எனவே அவற்றை நன்றாக பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவற்றை புதிதாக வாங்க வேண்டும்.

    நம் கம்பளி ஆடைகளை நாம் நன்றாக கவனித்துக் கொண்டால் இவை நீண்ட காலம் நீடிக்கும். உங்கள் கம்பளி ஆடைகளை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.

    பொதுவான குறிப்புகள்

    1.ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் உங்கள் கம்பளி ஆடைகளை பிரஷ் கொண்டு நன்றாக துடைக்க வேண்டும், இதனால் தூசிகள் மீது ஒட்டாது.

    2.எப்பொழுதும் கம்பளி ஆடைகளை பேட் செய்யப்பட்ட ஹேங்கர்களில் தொங்கவிடவும் மற்றும் துணிகளின் அனைத்து பட்டன்கள் மற்றும் ஜிப்பர்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

    3.உலர் துணிகளை கவனமாக மடித்த பிறகு உலர்த்தி பைகளில் வைக்கலாம். துணிகளைப் போடுவதற்கு முன், உங்களின் பணம், அணிகலன்கள், நகைகள் போன்றவை ஸ்வெட்டர்கள் அல்லது ஜாக்கெட்டுகளின் பாக்கெட்டுகளில் இருந்தால் அவற்றை அகற்றவும்.

    4.ஆடைகள் ஈரமாக இருந்தால் அவற்றை அறை வெப்பநிலையில் எப்போதும் உலர்த்தவும், அவற்றை உலர வைக்க ஹீட்டர் அல்லது சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டாம்.

    5.நீங்கள் துணிகளை நீண்ட நேரம் அணிய விரும்பினால், அவற்றை நன்றாக துவைத்த பின் அணியவும். அதனால் புழுக்கள் வராமல் இருக்கும்.

    6. நீங்கள் திரும்ப பயன்படுத்த இருக்கும் ஆடைகளை வைக்கும் பெட்டியில் அல்லது அல்மிராக்களில் எப்பொழுதும் உலர்ந்த வேப்ப இலைகள், ஃபீனைல் உருண்டைகளை போட்டு வைக்கவும்.

    கம்பளி துணிகளை துவைக்கும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.கம்பளி துணிகளை துவைக்கும்போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்.

    2. லேசான சோப்பு, மென்மையான திரவ சோப்பு அல்லது அதிக இரசாயனங்கள் இல்லாத வேறு ஏதேனும் லேசான திரவத்தைப் பயன்படுத்தவும். இந்த சோப்புகள் உங்கள் ஆடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் வண்ணங்கள் மங்காமல் தடுக்கும்.

    3. துணிகளை 4-5 நிமிடங்களுக்கு சோப்புப் பொருட்களில் ஊறவைத்து, மென்மையாக கைகளால் தேய்க்கவும் (பிரஷ் பயன்படுத்த வேண்டாம் அல்லது சலவை இயந்திரத்தில் துவைக்கவும்) துணிகளை சாதாரண நீரில் துவைக்க வேண்டும், இதனால் டிடெர்ஜென்ட் அவற்றில் இருந்து முற்றிலும் அகற்றப்படும்.

    4.தண்ணீரை அகற்றுவதற்கு மென்மையான டவல்களுக்கு இடையில் துணிகளை அழுத்தவும், பிழிய வேண்டாம்.

    5. கம்பளி ஆடைகளை உலர வைக்க ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள், செய்தித்தாள், மடிப்பு படுக்கை போன்றவற்றின் மீது எப்போதும் நேராக வைக்கவும்.

    கம்பளி ஆடைகளை சலவை செய்யும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.நீராவி இஸ்திரியை எப்போதும் பயன்படுத்தவும் மற்றும் கம்பளி அமைப்பில் வைக்கவும்.

    2.துணிகளை உலர வைக்க அவற்றை அயர்ன் செய்யாதீர்கள்.

    3.முடிந்தால் துணிகளை தலைகீழாக (உள் பக்கம்) இருந்து அயர்ன் செய்யவும். முன் பக்கத்தை அயர்ன் செய்ய வேண்டுமானால் எப்போதும் பருத்தி துணியை கம்பளி துணியின் மேல் போடவும்.

    4. ஆடைகள் முழுவதும் இஸ்திரி பெட்டியால் அழுத்தி தேய்க்க வேண்டாம், மெதுவாக அழுத்தவும்.

    இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும், எனவே அவற்றைப் பயன்படுத்தி வித்தியாசத்தைப் காணுங்கள்.

    • செமி பேம்பு புடவைகள் எடை குறைவாக இருக்கும்.
    • ப்யூர் சில்க் புடவைகள் குறைந்த எடை கொண்டது.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    *சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன.பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • உமரி சத்தியசீலன், வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கினர்.
    • தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஸ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் ஆலோசனைப்படி மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத் தலைவர் வக்கீல் வாரியார் ஆகியோர் தொண்டர்களை நேரில் சந்தித்து வேட்டி, சேலை,இனிப்பு,பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இதேபோல் தெற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் வேட்டி, சேலை, இனிப்பு மற்றும் பட்டாசுளை உமரி சத்தியசீலன் வழங்கினார். இதில் மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், சக்தி கேந்திர பொறுப்பாளர் துர்க்கையப்பன், மகளிர் அணி தலைவர் செல்வி, பூத் கமிட்டி நிர்வாகிகள் பாண்டியன், ராஜகோபால், சவுந்தர்ராஜன், சந்தான நிஷாத், மாரிமுத்து, ராஜபாண்டி,விக்னேஷ் உட்பட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம்.
    • தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாக தீபாவளி சேலை ஆர்டர் வழங்கப்பட்டதால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சொக்கப்பன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சேலை நெசவு செய்து தர கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 4 கோடி வரை ஆர்டர் கொடுக்கும். இதனால் நாங்களும் தீபாவளிக்கு முன்பே சேலை நெசவு செய்து வழங்கிவிடுவோம். ஆனால் இந்த வருடம் தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆர்டர் குறைவால் இந்த சங்கத்தை சேர்ந்த 450 கைத்தறி நெசவாளர்களுக்கு வருமான இழப்பு ஒரு புறம் இருந்தாலும் காலதாமதமாக கொடுத்த ஆர்டரை தீபாவளிக்குள் முடித்து தரமுடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    ஒரு கைத்தறியில் ஒரு சேலை நெசவு செய்திட 3 முதல் 4 நாட்கள் ஆகும். இனி வரும் காலங்களில் பண்டிகை கால ஆர்டர்களை முன்கூட்டியை வழங்க வேண்டும். மேலும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகபடியான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்த சங்கத்திற்கு அரசு அதிக சேலை ஆர்டர் வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.
    • மகாராஷ்டிர மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.

    தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்பது கெஜப் புடவைகளை ஒத்து இருக்கும் புடவைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நவாரி புடவைகள் என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கெஜ புடவைகளை ஒவ்வொரு மராட்டியப் பெண்களும் விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மராட்டிய புதுவருடப்பிறப்பு போன்ற விழாக்களில் மராட்டியப் பெண்கள் இந்த நவாரி புடவைகளை அணிந்து தங்க நகைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடுவதைப் பார்க்க முடியும்.

    நவாரி புடவைகளின் தோற்றம்

    ஒன்பது கெஜப் புடவைகளான இந்த நவாரி புடவைகள் ஒரு வரலாற்றுச் சூழலைக் கொண்டவையாகும். மராட்டி ஆட்சிக்காலத்தின் போது, சக ஆண் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.அவர்களுக்கு உதவும் பொழுது வசதியாக இருப்பதற்காக ஆண் கால்சட்டையை ஒத்த நவாரிபுடவைகளை மகாராஷ்டிரப் பெண்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இந்தப் புடவைகள் மகாராஷ்டிரப் பெண்களின் பாரம்பரிய உடையாக மாறிவிட்டது. இந்தப் புடவைகளை அணியும்போது மராட்டியப் பெண்கள் ஆண்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெறுவதாக நினைக்கிறார்கள்.

    கலாச்சார முக்கியத்துவம்

    மகாராஷ்டிர மணப்பெண்கள் தங்கள் திருமண விழாக்களில் தவறாமல் அணியும் ஒரு பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.பொதுவாக ஒரு பாரம்பரிய பாணியை கொண்டிருக்கும் இந்தப் புடவைகளை மணப்பெண்கள் அணியும் பொழுது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் "குடி பாட்வா" போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் நவாரி புடவைகளை அணியாத பெண்களை நாம் காண்பது அரிது.

    நவாரி புடவையை உடுத்தும் முறை

    நாம் சாதாரணமாக புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையை பயன்படுத்துவோம்.. ஆனால், இந்த நவாரி புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையோ அல்லது ஷிம்மியோ அவசியமில்லை.இந்தப் புடவைகள் பெரும்பாலும் பருத்தியில் தயாரிக்கப்படுவதால் இந்தப் புடவைகளை முதல் முறையாக அணிந்தாலும் அவற்றை அணிந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்காது.

    # ஒரு ஜோடி இறுக்கமான ஸ்லாக்குகளை அணிந்து,மடிப்புகளைப் பாதுகாக்க, தொப்புளுக்குக் கீழே ஒரு மைய முடிச்சைக் கட்டி, உங்கள் இடதுபுறத்தில் ஒரு மீட்டர் நீளத்திற்கு புடவையை விட்டுவிட வேண்டும்.

    * இடது தோளில் உள்ள சேலையின் பல்லுவை எடுத்து, அதை போர்த்தி, உங்கள் தோள்பட்டையின் வலது முனைக்கு கொண்டு வரவேண்டும்.

    * இப்போது, சேலையின் மீதமுள்ள பகுதியுடன், 4-5 அங்குல மடிப்புகளை உருவாக்கத் தொடங்கவும்.

    * மடிப்புகளை மீண்டும் மடித்து, அவற்றை நேர்த்தியாக இழுத்து, நடுப்பகுதியை உள்ளிழுக்கவும்.

    * மீதமுள்ள மடித்த புடவையைக் கொண்டு வந்து, அதை உங்கள் இடுப்பின் வலது பக்கம் சுற்றிக்கொண்டு உங்கள் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.கால்களுக்கு அருகில் இருக்கும் புடவையின் பகுதியை ஒரு அடுக்கில் மடித்து, முன்பக்கத்தில் இருந்து ஒரு டோத்தி பேண்ட் போல் தோன்றும் வகையில் உங்கள் இடுப்பில் செருக வேண்டும்.

    பல்வேறு வடிவமைப்புகள்

    இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.ஆரம்ப காலங்களில் பருத்தியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இவ்வகை புடவைகள் இப்பொழுது பட்டு மற்றும் சாட்டின் உட்பட மற்ற துணி வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.இந்தப் பாரம்பரிய புடவைகளில் கவர்ச்சிகரமான மலர்கள், உருவங்கள் மற்றும் வடிவங்களை பிரிண்ட் செய்து மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள்.அரைக்கை பிளவுஸ் உடன் இந்த புடவைகளை அணிவதைக் காட்டிலும், முக்கால் கை மற்றும் ஸ்லீவ்லெஸ் போன்ற பிளவுஸ் டிசைன்களுடனும் இந்தப் புடவைகளை அணியும்போது அவை மிகவும் பிரமாதமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பட்டு நவாரி புடவைகளின் பிரபலத்திற்கு அதன் அடர்த்தியான வடிவ பார்டர்களும் ஒரு காரணமாகும்.இந்த பார்டர்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது தங்க நூலினால் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது.அப்படியே தைய்க்கப்பட்டு ஆயத்தமாக வரும் நவாரி புடவைகளை வாங்கி அணிந்து கொள்வதை இப்பொழுது பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இந்த புடவைகளை அணிந்து கொள்வதும் எளிது.

    சுவையான தகவல்கள்

    * மராட்டியப் பெண்களின் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாக நவாரி புடவை கருதப்படுகிறது.

    * பண்டிகைகளின் போது பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் பொழுது அது மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    * சிவப்பு, நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் பார்டர்கள் வைத்து வரும் இந்தப் புடவைகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும் . இந்தப் புடவைகளை உடுத்தும் பொழுது மூக்கு புள்ளக்கு,ஒட்டியாணம்,காதணிகள், கருகமணி மாலை, சோக்கர்,நெற்றிச்சுட்டி, ஹாரம் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல் களுடன் கூடிய பிற வளையல்கள் போன்ற நகைகளை தவறாமல் அணிகிறார்கள்.

    * மராட்டிய மணப்பெண்கள் தங்களது திருமணத்திற்கு பைத்தானி பட்டினால் தயாரிக்கப்பட்ட நவாரி புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.மிகவும் மென்மையாக தங்க நிறத்தில் கிடைக்கும் இந்தப் புடவைகள் மராட்டிய மணமகளின் சரியான தேர்வாக இருக்கும்.

    ×