search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பாரம்பரியத்தை பறைசாற்றும் நவாரி புடவைகள்
    X

    பாரம்பரியத்தை பறைசாற்றும் நவாரி புடவைகள்

    • இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.
    • மகாராஷ்டிர மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.

    தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்பது கெஜப் புடவைகளை ஒத்து இருக்கும் புடவைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நவாரி புடவைகள் என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கெஜ புடவைகளை ஒவ்வொரு மராட்டியப் பெண்களும் விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மராட்டிய புதுவருடப்பிறப்பு போன்ற விழாக்களில் மராட்டியப் பெண்கள் இந்த நவாரி புடவைகளை அணிந்து தங்க நகைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடுவதைப் பார்க்க முடியும்.

    நவாரி புடவைகளின் தோற்றம்

    ஒன்பது கெஜப் புடவைகளான இந்த நவாரி புடவைகள் ஒரு வரலாற்றுச் சூழலைக் கொண்டவையாகும். மராட்டி ஆட்சிக்காலத்தின் போது, சக ஆண் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.அவர்களுக்கு உதவும் பொழுது வசதியாக இருப்பதற்காக ஆண் கால்சட்டையை ஒத்த நவாரிபுடவைகளை மகாராஷ்டிரப் பெண்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இந்தப் புடவைகள் மகாராஷ்டிரப் பெண்களின் பாரம்பரிய உடையாக மாறிவிட்டது. இந்தப் புடவைகளை அணியும்போது மராட்டியப் பெண்கள் ஆண்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெறுவதாக நினைக்கிறார்கள்.

    கலாச்சார முக்கியத்துவம்

    மகாராஷ்டிர மணப்பெண்கள் தங்கள் திருமண விழாக்களில் தவறாமல் அணியும் ஒரு பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.பொதுவாக ஒரு பாரம்பரிய பாணியை கொண்டிருக்கும் இந்தப் புடவைகளை மணப்பெண்கள் அணியும் பொழுது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் "குடி பாட்வா" போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் நவாரி புடவைகளை அணியாத பெண்களை நாம் காண்பது அரிது.

    நவாரி புடவையை உடுத்தும் முறை

    நாம் சாதாரணமாக புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையை பயன்படுத்துவோம்.. ஆனால், இந்த நவாரி புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையோ அல்லது ஷிம்மியோ அவசியமில்லை.இந்தப் புடவைகள் பெரும்பாலும் பருத்தியில் தயாரிக்கப்படுவதால் இந்தப் புடவைகளை முதல் முறையாக அணிந்தாலும் அவற்றை அணிந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்காது.

    # ஒரு ஜோடி இறுக்கமான ஸ்லாக்குகளை அணிந்து,மடிப்புகளைப் பாதுகாக்க, தொப்புளுக்குக் கீழே ஒரு மைய முடிச்சைக் கட்டி, உங்கள் இடதுபுறத்தில் ஒரு மீட்டர் நீளத்திற்கு புடவையை விட்டுவிட வேண்டும்.

    * இடது தோளில் உள்ள சேலையின் பல்லுவை எடுத்து, அதை போர்த்தி, உங்கள் தோள்பட்டையின் வலது முனைக்கு கொண்டு வரவேண்டும்.

    * இப்போது, சேலையின் மீதமுள்ள பகுதியுடன், 4-5 அங்குல மடிப்புகளை உருவாக்கத் தொடங்கவும்.

    * மடிப்புகளை மீண்டும் மடித்து, அவற்றை நேர்த்தியாக இழுத்து, நடுப்பகுதியை உள்ளிழுக்கவும்.

    * மீதமுள்ள மடித்த புடவையைக் கொண்டு வந்து, அதை உங்கள் இடுப்பின் வலது பக்கம் சுற்றிக்கொண்டு உங்கள் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.கால்களுக்கு அருகில் இருக்கும் புடவையின் பகுதியை ஒரு அடுக்கில் மடித்து, முன்பக்கத்தில் இருந்து ஒரு டோத்தி பேண்ட் போல் தோன்றும் வகையில் உங்கள் இடுப்பில் செருக வேண்டும்.

    பல்வேறு வடிவமைப்புகள்

    இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.ஆரம்ப காலங்களில் பருத்தியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இவ்வகை புடவைகள் இப்பொழுது பட்டு மற்றும் சாட்டின் உட்பட மற்ற துணி வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.இந்தப் பாரம்பரிய புடவைகளில் கவர்ச்சிகரமான மலர்கள், உருவங்கள் மற்றும் வடிவங்களை பிரிண்ட் செய்து மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள்.அரைக்கை பிளவுஸ் உடன் இந்த புடவைகளை அணிவதைக் காட்டிலும், முக்கால் கை மற்றும் ஸ்லீவ்லெஸ் போன்ற பிளவுஸ் டிசைன்களுடனும் இந்தப் புடவைகளை அணியும்போது அவை மிகவும் பிரமாதமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பட்டு நவாரி புடவைகளின் பிரபலத்திற்கு அதன் அடர்த்தியான வடிவ பார்டர்களும் ஒரு காரணமாகும்.இந்த பார்டர்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது தங்க நூலினால் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது.அப்படியே தைய்க்கப்பட்டு ஆயத்தமாக வரும் நவாரி புடவைகளை வாங்கி அணிந்து கொள்வதை இப்பொழுது பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இந்த புடவைகளை அணிந்து கொள்வதும் எளிது.

    சுவையான தகவல்கள்

    * மராட்டியப் பெண்களின் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாக நவாரி புடவை கருதப்படுகிறது.

    * பண்டிகைகளின் போது பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் பொழுது அது மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    * சிவப்பு, நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் பார்டர்கள் வைத்து வரும் இந்தப் புடவைகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும் . இந்தப் புடவைகளை உடுத்தும் பொழுது மூக்கு புள்ளக்கு,ஒட்டியாணம்,காதணிகள், கருகமணி மாலை, சோக்கர்,நெற்றிச்சுட்டி, ஹாரம் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல் களுடன் கூடிய பிற வளையல்கள் போன்ற நகைகளை தவறாமல் அணிகிறார்கள்.

    * மராட்டிய மணப்பெண்கள் தங்களது திருமணத்திற்கு பைத்தானி பட்டினால் தயாரிக்கப்பட்ட நவாரி புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.மிகவும் மென்மையாக தங்க நிறத்தில் கிடைக்கும் இந்தப் புடவைகள் மராட்டிய மணமகளின் சரியான தேர்வாக இருக்கும்.

    Next Story
    ×