search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy murder"

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 32). இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கூலித்தொழிலாளியான அழகுபாண்டி மீது கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் ஆந்திரா மாநிலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அங்குள்ள முறுக்கு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

    அவர் ஆந்திரா சென்றதும் அவரது மனைவி தனது மகன்களுடன் மதுரை ஒத்தக்கடை அருகே மேல உறங்கான்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அழகுபாண்டி மீதான கொலைமுயற்சி வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அதில் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ஆந்திராவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி மேல உறங்கான்பட்டியில் உள்ள மாமனாரின் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று இரவு அழகு பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினர். அழகு பாண்டியும், அவரது மாமனார் மூக்கனும் முன்பக்க அறையில் படுத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்களது வீட்டின் கதவை சிலர் தட்டினர்.

    இதனால் விழித்தெழுந்த மூக்கன் வீட்டின் கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே 5 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அந்த நபர்கள், மூக்கனை கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கு தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த அழகுபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அழகுபாண்டியை கொன்ற மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இந்தநிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறைக்குள் படுத்து தூங்கிய அழகுபாண்டியின் மனைவி மற்றும் மகன்கள் எழுந்து வந்தனர். அவர்கள் அழகுபாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி வந்து பார்வையிட்டார். அவர் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு பாண்டிக்கு ஒத்தக்கடை, மேலூர், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஏராளமான அடிதடி வழக்குகளில் தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு விரோதிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆகவே முன் விரோதத்தில் அவரை மர்மநபர்கள் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் அஸ்வின் (வயது 28) ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு அப்பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க அஸ்வின் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. கொலையுண்ட அஸ்வின் தற்போது புதூரில் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அஸ்வின், கடந்த 3 மாதத்திற்கு முன்பு விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம்மாறி சென்று இருக்கிறார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று இரவு விஜயநல்லூரில் உள்ள உறவினரை சந்திக்க வந்தபோது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
    • குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணைவயல் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42), ரவுடி. இவர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்த முத்துப்பாண்டி திருவாடானையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலை முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையும், உடலும் தனித்தனியாக கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலங்கப்பட்டது. மோப்ப நாய் கடப்பாகுடி மர அறுவை மில் வரை ஓடிவிட்டு நின்று விட்டது.

    முத்துப்பாண்டியை முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த கொலை சம்பவம் திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்-30 பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 43). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி டவுன் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு வீரமணி மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்று விட்டனர். வீரமணி மட்டும் இரவு வீட்டில் தூங்கினார்.

    இன்று அதிகாலை சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரமணியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்தது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ரவுடி வீரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூரில் ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரி புலியூர் போலீஸ் சரகம் கம்மியம்பேட்டை பிடாரி–யம்–மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் மோட்டார் சை்ககிளில் அங்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்கள் வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்த ரேவன் (25), கம்மியம் பேட்டையை சேர்ந்த மூர்த்தி (22). ஜீவானந்தம் (22) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அதன் பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படு–காயம் அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ ேபால பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். 

    தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கல் பாரிசங்கர், திருப்பாதிரி–புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி–வைத்தனர். படுகாயம் அடைந்த ரேவன், மூர்த்தி ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்தி–ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு–பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய–வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 19.8.2020-ம் ஆண்டு திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த காம–ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கண்ணன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை காமராஜ் சகோதரர் சிவாஜி, அவரது நண்பர்கள் சந்திரசேகர், விக்னேஷ், சூர்யபிரதாப் ஆகியோர் நோட்டமிட்டுள்ளனர். நேற்று கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் கண்ணன் இருப்பதை அறிந்த சிவாஜி மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை, காஞ்சீபுரம், புதுவை ஆகிய பகுதிக்கு தனித்தனியாக விரைந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொட்டிகலை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது30). இவர் மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை, 2 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன.

    அவர், நண்பர்களுடன் சிறுகடல் மதுபானக்கடை அருகே உள்ள வேப்பமரத்து அடியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

    ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர் அம்மணிஅம்மன் தோட்டம் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஒத்தவாடை பிரகாஷ். இவருடைய மகன் தினேஷ் (வயது 24). ரவுடியான இவர் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    நேற்று முன்தினம் இரவு மர்மகும்பல் ஒன்று அதே பகுதியில் வைத்து ரவுடி தினேசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக திருவொற்றியூர் உதவி கமிஷனர் வெற்றிச்செழியன் தலைமையில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பதுங்கி இருந்த மாங்கா சதீஷ் (26), செல்வம் (23), சந்தோஷ்(19), அரி (19), பிரவீன் (20), மகேஷ் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் கொலையான தினேசுக்கும், கைதான மாங்கா சதீசுக்கும் யார் பெரிய ரவுடி? என போட்டி இருந்து உள்ளது. இதனால் தினேஷ், மாங்கா சதீசை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதை அறிந்த மாங்கா சதீஷ் முந்திக்கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேசை வெட்டிக்கொலை செய்ததும் தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக் (வயது 35). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், கவுசல்யா (7) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளைப்பூண்டு, மாதுளம்பழம் போன்றவை வாங்கி வாகனத்தில் வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு அனுமந்தன்நகரில் போடப்பட்டுள்ள புதிய பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் உயிருக்கு பயந்து பாலத்தின் மீது ஓடினார். ஆனால் 2 புறமும் சுற்றி வளைத்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் மற்றும் பட்டா கத்தி போன்ற ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    15-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. சுகாசினி தலைமையில் நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் விட்டுச் சென்ற 2 ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவல் சண்டை நடத்திய தகராறில் கார்த்திக் ஒரு சிலரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இவரது அண்ணன் செல்வம் என்பவரும் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் முக்கிய சாட்சியாக உள்ளார்.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் மனைவி மற்றும் குழந்தையுடன் கோபால்பட்டியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரவுண்டு ரோட்டுக்கு குடி வந்துள்ளார்.

    ஏற்கனவே இவர் மீது முன் விரோதத்தில் இருந்த நபர்கள்தான் கார்த்திக்கை வெட்டி படுகொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
    அரும்பாக்கத்தில் ரவுடியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பா.ம.க. பிரமுகர் கொலைக்கு பழிவாங்க 8 வருடம் காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    போரூர்:

    திருவொற்றியூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி லோடு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகர் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பெருந்துறை முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய கோயம்பேட்டைச் சேர்ந்த சங்கர், அஜித் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கவிராஜ், பாபு, கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 பைக் 2 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சங்கர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும் பாமக பிரமுகருமான நாகராஜ் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதேபோல் 2009-ம் ஆண்டு சித்தப்பாவின் சகோதரர் சரவணன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த இரண்டு கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது.

    எனவே தந்தை இல்லாத எங்களை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழி தீர்க்க முடிவு செய்தேன். 8ஆண்டுகளுக்கு பிறகு எனது நண்பர்கள் உடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டி கொலை செய்தோம்.

    இதில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீபெரும்புதூரில் கணவரை கொன்றதால் கூலிப்படை மூலம் ரவுடியை கொலை செய்த சென்னை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை விவேகானந்த நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). பிரபல ரவுடி.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பாஸ்கர் சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இந்த நிலையில் ரவுடி பாஸ்கர் கொலையில் தொடர்புடைய சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனாவை போலீசார் கைது செய்தனர். கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.

    கைதான புவனாவின் கணவர் கந்தன். கேபிள் ஆபரேட்டரான அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற போது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில் ரவுடி பாஸ்கருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பழிக்கு பழிவாங்கும் விதமாக புவனா கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட பாஸ்கர் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி ‘பங்க்’ குமாரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    கடந்த 2006-ம் ஆண்டு ‘பங்க்’ குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    படப்பையில் தஞ்சம் அடைந்த பாஸ்கர் அங்கு ரவுடியாக சுற்றி வந்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே செய்த கொலைக்கு பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்டப்பட்டு விட்டார்.
    ×