search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாடானை அருகே தலை துண்டித்து ரவுடி படுகொலை
    X

    திருவாடானை அருகே தலை துண்டித்து ரவுடி படுகொலை

    • முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணைவயல் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரது மகன் முத்துப்பாண்டி (வயது 42), ரவுடி. இவர் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்த முத்துப்பாண்டி திருவாடானையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலை முத்துப்பாண்டி செங்கமடை என்ற பகுதியில் ரோட்டோர வயல்வெளியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையும், உடலும் தனித்தனியாக கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் திருவாடானை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலங்கப்பட்டது. மோப்ப நாய் கடப்பாகுடி மர அறுவை மில் வரை ஓடிவிட்டு நின்று விட்டது.

    முத்துப்பாண்டியை முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த கொலை சம்பவம் திருவாடானை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×