என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rowdy arrested"
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.
ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.
இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.
தூத்துக்குடி அந்தோணி யார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.
பாலமுருகன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவர் குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கும் சங்கரின் மகன் பாரதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதி, சங்கர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை வாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அடிக்கடி நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பட்டப்பகலிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர்.
மதுரை பைக்காரா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (வயது 32). இவர் நேற்று திருமங்கலம் மறவங்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மானாமதுரை ஏ.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு என்ற குட்டை கமல் (27) என்பவர் வழிமறித்தார். அவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பிரபுவை கைது செய்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் நேற்று இரவு சீர்காழியை அடுத்த எருக்கூரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சிதம்பரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சீர்காழியை நோக்கி வந்தனர். சந்தேகத்தில் பேரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் வெடிகுண்டுகளை வாகனத்தில் வைத்திருந்தது தெரியவந்தது. 2 டிபன் பாக்ஸ்களில் அந்த வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எருக்கூரில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் அந்த டிபன் பாக்ஸ்களை வைத்துள்ளனர். அதனை சுற்றி மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனர். டிபன் பாக்ஸ்சில் இருப்பது நாட்டு வெடிகுண்டா? சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளா? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கலைவாணன் (வயது30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் எருக்கூரைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கொலை திட்டத்துடன் வந்தார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எருக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் அளித்த மனுவில்:- வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டு போய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில்:- 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவின் தாய் கலைச்செல்வி (வயது 65), கலெக்டர் ராமனை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆறுமுகம் ராணுவத்தில் பணி புரிந்து இறந்துவிட்டார். எனக்கு புற்று நோய் இருப்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது ஒரே மகன் ராஜா என்கிற வசூர் ராஜா மீது மீண்டும் மீண்டும் பல பொய் வழக்குகளை போட்டு பொதுமக்களிடம் ரவுடியாக சித்தரித்து விட்டனர்.
ராஜா என்பவரை வசூர்ராஜா என்று பட்டம் கொடுத்து போலீசார் உருவாக்கிவிட்டனர். நான் சென்னையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன். வயதான காலத்தில் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு என் மகன் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார்.
அப்போது முதல் எந்த வம்புக்கும்போகாமல் வீட்டில் இருந்து என்னை கவனித்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி காலை 8.30 மணிக்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
நானும் பின்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். போலீசாரிடம் கேட்டதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக வசூர் ராஜாவை கைது செய்துள்ளதாக கூறினர்.
என் மகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். வசூர் ராஜா திருந்தி என்னுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். பெண் பார்த்துவந்தேன். இந்த நிலையில், போலீசார் கைது செய்ததால் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகன் வசூர்ராஜாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
போடி சிலமலை அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவர் போடியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கான பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்லையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கூறினார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர் செல்லையாவை கத்தியால் கையில் குத்தினார். இதில் வேதனையால் செல்லையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
உடனே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். உஷரான பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வடிவேல் என்கிற தீக்கொளுத்தி (வயது29), பிரபல ரவுடி என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரைச் சேர்ந்த தினேஷ், கணேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்கு மற்றும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பிரபல ரவுடியான சின்ன சிவாவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
பொள்ளாச்சி:
ஈரோடு மாவட்ட கியூபிரிவு இன்ஸ்பெக்டர் செல்லத்துரை(45), கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகனசுந்தரம்(43) ஆகியோரை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் வைத்து 3 ரவுடிகள் கத்தியால் குத்தினர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் நடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக் காமனன், ரத்தின குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து போலீசாரை கத்தியால் குத்திய போளுவாம்பட்டியை சேர்ந்த விஜய், வெங்கடேசா காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(25), மரப்பேட்டையை சேர்ந்த ‘நாத்(24) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்தவர்களை பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. நாத் கோவை செல்வபுரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்