search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas act law"

    திருச்சியில் 34 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் அஜிபா. இவரது மகன் சாதிக்பாட்சா. இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலக்கரை எடத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற மர்ம நபர், சாதிக்பாட்ஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

    இது குறித்து சாதிக்பாட்சா காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்தி விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பாலக்கரை பிள்ளை மாநகரை சேர்ந்த அந்துவன் மகன் வைத்தன் சுதாகர் (வயது40) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை, அடிதடி என திருச்சி மாநகர காவல் நிலையங்களில் மொத்தம் 34 வழக்குகள் உள்ளது. 

    இந்தநிலையில் வைத்தன் சுதாகரின்  தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய மாநகர  கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து  போலீசார் தேடி வந்தனர்.  

    இந்த நிலையில் பிச்சை நகர் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சுதாகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம்  இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×