search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery"

    • தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நித்தியா நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 13-ந் தேதி, இவரது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த நித்யா நந்தினியை கட்டிப்போட்டு, 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்கள் பண்ணை வீட்டில் இருந்து செஞ்செரிமலை வழியாக நெகமம் நோக்கி வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்பதை அறியும் பணியில் போலீசார் இறங்கினர்.


    போலீஸ் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன்(72), ஆந்திர மாநிலம் தாவணிக்கரையை சேர்ந்த முருகன்(55), குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஏழுமலை என்ற ராஜா(50), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்ற ராஜேஷ்(42) என்பதும், இந்த கும்பலுக்கு தலைவனாக அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன் செயல்பட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை தேடி தனிப்படையினர் குடியாத்தம் விரைந்தனர். அங்கு அவர்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கும்பல் மோகனூரில் உள்ள ஆந்திர வங்கி, பண்ரூட்டி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளிலும் ஏராளமான பணம் மற்றும் பல சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இவர்கள் பொள்ளாச்சியில் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இங்கேயே எங்காவது கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்து, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது பண்ணை வீடு இருப்பதை பார்த்ததும் அங்கு சென்று, அங்கு இருந்தவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையர்களை பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.

    இருந்தபோதிலும் கிடைத்த தகவல்களை வைத்து, கொள்ளையர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து விட்டோம் என்றனர்.

    இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 14ந் தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல் மணிக்கூண்டு அருகே செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏ.எஸ்.பி. சிபின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் எட்வார்டு போலீசார் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


    இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த கடைகள், சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கரூர் கல்லுமடையைச் சேர்ந்த அஜய் (வயது 24), ராயனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (21), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (21), கோவை சாய்பாபா காலனியைசேர்ந்த சத்தியசீலன் (23) ஆகியோர் 2 கடைகளிலும் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பழனி ஆயக்குடியில் 2 ஸ்டுடியோக்களில் பூட்டை உடைத்து 3 விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருடிய பணம், 3 கேமராக்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் பேல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 52) அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவியும் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதியரின் மகன், மகள் இருவரும் வெளியூரில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் இரண்டு பேரும் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

    பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு உள்பக்க அறையில் படுத்து தூங்கினர்.

    இந்த தலையில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ப நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வேறொரு அறையில் பீரோவில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் திருட்டு நடந்தது அவர்களுக்கு தெரியவந்தது. அன்பரசன் திருபெரும்பூர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3000 பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதன் அருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

    மேலும் குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70). அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் விஜயலட்சுமி நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நீங்கள் யார் என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கொள்ளை கும்பல் அவரது வாயை பொத்தி அங்கிருந்த சேரில் கட்டிப்போட்டனர்.

    பின்னர் விஜயலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள் மற்றும் 3/4 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பீரோவில் பணம், நகை எதுவும் உள்ளதா என்று கேட்டனர். மேலும் விஜயலட்சுமியை மிரட்டி பீரோவின் சாவியை எடுத்துக்கொண்டனர். பின்னர் கொள்ளையர்கள் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த பணம், நகைகளை ஓட்டுமொத்தமாக கொள்ளையடித்தனர். தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளுடன் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    அதன்பிறகு மூதாட்டி விஜயலட்சுமி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் சேரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த விஜயலட்சுமியை விடுவித்து விசாரித்தனர். அப்போது தான் 2 பேர் கும்பல் வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவரம் தெரியவந்தது.

    இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பேரூர் சரக போலீஸ் டி.எஸ்.பி வெற்றிசெல்வன், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போலீசார் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர்.

    இதில் அடையாளம் தெரியாத 2 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் டீச்சர்ஸ் காலனிக்கு வருவதும், பின்னர் விஜயலட்சுமி வீட்டின் பின்பக்க பகுதிக்கு நைசாக சுவரேறி குதித்து செல்வதும் தெரியவந்தது. அதாவது மூதாட்டி வீட்டு வளாகத்துக்குள் சுமார் 7.45 மணியளவில் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து மதுஅருந்தியது. பின்னர் அவர்கள் மதுபோதையுடன் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த வீஜயலட்சுமி வீட்டுக்குள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

    ஆசிரியை வீட்டில் மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.

    வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.

    இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத், பையாரம் நகரில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தனர்.

    அவர்கள் தங்களது காரை ஏ.டி.எம். மையத்திற்கு சிறிது தூரத்தில் நிறுத்தினர். ஏ.டி.எம். மையத்திற்கு அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் விட்டுவிட்டு காரில் இருந்த கியாஸ் கட்டரை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.29.70 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பகுதியில் நேற்று 2-வது நாளாக மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 4 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.3.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரியில் உள்ள எஸ்.வி.சாலையில் காந்தி நகர் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது40). இவர் அன்னசாகரம் கூட்ரோடு பகுதியில் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரையின் சிமெண்டு அட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது பணப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. மேலும், அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதேபோன்று கேசவனின் கடையின் பக்கத்தில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த நல்லசாமி (40) என்பவரது பத்திர கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவருக்கும் கேசவன் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த நல்லசாமி கடையயை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த உண்டியல் பணத்தை ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோன்று அதே பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி கணேசனின் மெடிக்கல் கடையில் ரூ.2 ஆயிரத்தையும், அதனருகில் உள்ள இளையராஜா என்பவரது ஆட்டோ மொபைல் கடையில் ரூ.5 ஆயிரத்தையும் மர்ம திருடி சென்றுள்ளார்.

    இதுகுறித்து கேசவன் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்ததில், இந்த 4 கடைகளிலும் மர்ம நபர் ஒருவர் மேற்கூரையை உடைத்து உள்ளேபுகுந்து ரூ.3.14 லட்சம் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    மேலும், அந்த பகுதியில் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதில் பதிவான மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரியில் உள்ள சோகத்தூர் கூட்ரோடு, குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 கடைகளில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கதவை உடைத்து பணம் கொள்ளயைடித்த சம்பவம் அரங்கேறி முழுவிசாரணை முடிவதற்குள் நேற்று இரவு மீண்டும் அதே மர்ம நபர் எஸ்.வி. சாலையில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மர்ம நபரின் இந்த துணிகர செயலால் தருமபுரி நகர் பகுதியில் வியாபாரிகள், வணிகர்கள் பெரும் தங்களது கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த எஸ்.வி. சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக தகவல்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துனரின் டிக்கெட் பை கொள்ளையடிக்கப்பட்டது.

    பின்னர், நடத்துனர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டிக்கெட் பையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.38 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
    • 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆனைமலை பகுதியில் உள்ள 6 இடங்களில் தொடர்கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

    இதன்படி வால்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீநிதி மற்றும் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 38) என்பவர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பகலில் கட்டிடத் தொழிலாளி போல் வலம் வந்துள்ளார். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் வீடு புகுந்து நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபகாலமாக கோட்டூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    குற்றவாளி ராமச்சந்திரனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை கோட்டூர் போலீஸ் சரகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பூட்டியிருந்த 3 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த பகுதிக்கு பரிச்சயம் இல்லாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பதிவெண் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கோட்டூர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய குற்றவாளி பற்றி தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த கொத்தனார் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தோம். பின்னர் அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புடைய 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோட்டூரில் நடைபெற்ற 6 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட ராமச்சந்திரன் பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது மதுரை மாநகர், மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் போலீசின் தேடுதல் வேட்டைக்கு பயந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்து கோட்டூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டதால் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

    ராமச்சந்திரனை கைது செய்யும் விஷயத்தில் எங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உதவியாக இருந்தது. எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்றால், நாங்கள் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.
    • கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிரதிபாடு அடுத்த உத்தரகாஞ்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வங்கி இயங்கி வரும் கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர்.

    பின்னர் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் வங்கியில் இருந்த 2 லாக்கர்களை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர். அதிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கைரேகைகள் பதிவாகாமல் இருக்க வங்கி லாக்கரை கியாஸ் கட்டர் மூலம் எரித்தனர்.

    பின்னர் கியாஸ் சிலிண்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். வங்கிக்கு வந்த அதிகாரிகள் லாக்கர் எரிக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை.

    கொள்ளையர்களின் உருவம் பதிவாகவில்லை. இதையடுத்து அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர் . அதில் கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.

    கண்காணிப்பு கேமரா மூலம் 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கேமரா பதிவுகளை வைத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமாம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேர் காரில் பைபாஸ் சாலையில் வந்தனர். புதுக்கோட்டை அருகே அண்டகளூர் பகுதியில் வந்தபோது 2 பெரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.

    அப்போது சுமார் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர். திடீரென்று அவர்கள் செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த செயின்களை பறித்தனர்.

    பின்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர்களை அங்கேயே கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்பு அந்த வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர்.

    அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவ்ழியாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழிப்பறி கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. இதனிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் குறித்து அவர்கள் கொடுத்த அடையாளங்களின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×