search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.29 லட்சம் கொள்ளை
    X

    தெலுங்கானாவில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.29 லட்சம் கொள்ளை

    • 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத், பையாரம் நகரில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தனர்.

    அவர்கள் தங்களது காரை ஏ.டி.எம். மையத்திற்கு சிறிது தூரத்தில் நிறுத்தினர். ஏ.டி.எம். மையத்திற்கு அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் விட்டுவிட்டு காரில் இருந்த கியாஸ் கட்டரை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.29.70 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×