search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

    லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

    மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் பி.வி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

    இதே போன்று எஸ்.வி.புரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்யாதேவி (29). இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதே போன்று பூட்டியிருந்த கணேசபுரம் நாச்சம்மாள் (75) என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து ரூ.36 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.

    இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரம் அங்கு சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமாம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேர் காரில் பைபாஸ் சாலையில் வந்தனர். புதுக்கோட்டை அருகே அண்டகளூர் பகுதியில் வந்தபோது 2 பெரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.

    அப்போது சுமார் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர். திடீரென்று அவர்கள் செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த செயின்களை பறித்தனர்.

    பின்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர்களை அங்கேயே கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்பு அந்த வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர்.

    அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவ்ழியாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழிப்பறி கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. இதனிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் குறித்து அவர்கள் கொடுத்த அடையாளங்களின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பிளசண்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (வயது 52). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    மனைவி மற்றும் மகள் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார்களாம். கலைக்குமார் தான் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரும் தினமும் காலை 7.30 மணிக்கு பணிக்காக நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி சென்று விடுவாராம். அதன்பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் அவர் வீடு திரும்புவார்.

    நேற்று காலையும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கலைக்குமார், இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அவர், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்த்தனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கலைக்குமார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த பிளசண்ட் நகர் பகுதி வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இங்கு வீடுகளும் நெருக்கமாகவே உள்ளன. அப்படியிருந்தும் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் லாவகமாக வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆள் இல்லாத வீட்டில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனாலும் கொள்ளை யர்கள், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதனை தடுக்க கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எர்ரப்பட்டி பொதுப்பணித்துறை காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பெங்களூரில் எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (30). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களது மேல் மாடியில் மகேஸ்வரி (27) இவரது கணவர் அருண் தம்பதிகள், வாடகை இருந்து வருகின்றனர். இவர்களும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்வீடு மற்றும் மேல் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் வேறு்எவரும் இல்லை.

    வேலை முடிந்து மீண்டும் மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வள்ளி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதே போல் மேல் மாடியில் குடியிருந்து வரும் மகேஸ்வரி வீட்டில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகைகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து இரு குடும்பத்தினரும் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவேறு வழக்குகளாக பதிவு செய்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை சேகரித்து அதன் மூலமாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர்.
    • வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. வீட்டின் மாடியில் நர்சு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசித்து வந்தனர்.

    மேலும் வேலுச்சாமி குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். எப்போதாவது விடுமுறைக்கு மட்டுமே இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். மேலும் பீரோவையும் உடைத்து அதிலிருந்த தங்கம், வெள்ளி நகைகளையும், ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இதனையடுத்து மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த மற்றொரு வீட்டின் வாசலில் கட்டியிருந்த 2 சேவல்களையும் திருடிக்கொண்டு அக்கும்பல் தப்பியோடினர்.

    காலையில் வேலுச்சாமியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து வேலுச்சாமியிடம் கேட்ட போது பீரோவில் 3 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.அந்த நகை, பணம் திருடு போனது.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குஞ்சம்மாள் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் தாக்கி நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்க ராயன்பாளையம் அடுத்த மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (65).

    அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஒன்றாக வசித்து வருகி றார்கள். உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் உமா சாந்தியை அழைத்து வருவ தற்காக ராஜா கவுந்தப்பாடி புதூருக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது தாய் கஞ்ச ம்மாள் மட்டும் தனி யாக இரு ந்தார். இதையடுத்து ராஜா பள்ளியில் இருந்து மனைவி யை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது குஞ்சம்மா ள் வீட்டின் படுக்கை அறையி ல் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ர்ச்சி அடைந்த அவர்கள் மூதா ட்டி யிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவர் கழுத்தில் அணி ந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் கையில் அணிந்திரு ந்த 3 பவுன் வலையல் என 5 பவுன் நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம் பக்க த்தினர் உதவி யுடன் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனு ப்பி வைத்துள்ளனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி ச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ராஜா சித்தோ டு போலீசில் புகார் கொடு த்தார். அதன் பேரில் சித்தோ டு போலீசார் மற்று ம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் சம்பவ இடம் வந்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    இதில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரை தாக்கி நகைகள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு மர்ம நப ர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தோடு போலீ சார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
    • திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

    இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

    மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

    இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.

    அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
    • தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.

    இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.

    இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த மேல்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி சுகந்தி (வயது78). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.

    நகைகள் கொள்ளை

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுகந்தி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி குள்ளானூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (42). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 2-ந் தேதி சந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன்செயின் உள்பட 5 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சந்திரன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி பகுதிகளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் பொதுமக்க ளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

    • குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை தொட்டு சந்திரையர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53) வெள்ளி வியா பாரியான இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வரும் வழியில் திருப்பதி கோயிலில் தரிச னம் செய்து விட்டு நேற்று காலை சேலம் திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்க ரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாகும். இதுபற்றி பாஸ்கரன் செவ்வாய் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவிகமிஷனர் வெங்கடே சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு பூடடிக்கிடந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமி ராக்களை ஆய்வு செய்து வருவதுடன் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×