search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளை"

    • வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    குருபரப்பள்ளியில் ஏ.டி.எம்.மில் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் ஒரு ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த ஏ.டி.எம். உள்ள பகுதியில் சுற்றி ஓட்டல்கள், பெட்ரோல் பங்க, தனியார் கார் கம்பெனி உள்பட பெரும் நிறுவனங்கள் மற்றும் சிறிது தொலைவில் தொலைவில் குருபரப்பள்ளி போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

    இதன் காரணமாக ஏ.டி.எம். உள்ள அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியாகவே காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறையில் நுழைந்தனர். அப்போது அவர்கள் கருப்பு மையை கொண்டு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பூசி உள்ளனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இன்று காலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் வங்கி அதிகாரிகளுக்கும், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் குறித்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில், போலீஸ் நிலையம் அருகில் இருந்த போதிலும் ஏ.டி.எம்.மில் மர்ம நபர்கள் துணிச்சலாக வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து எடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத், பையாரம் நகரில் பாரத் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தனர்.

    அவர்கள் தங்களது காரை ஏ.டி.எம். மையத்திற்கு சிறிது தூரத்தில் நிறுத்தினர். ஏ.டி.எம். மையத்திற்கு அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டம் விட்டுவிட்டு காரில் இருந்த கியாஸ் கட்டரை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.29.70 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 6 பேர் கொண்ட கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
    • வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இன்று காலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.

    மேலும் அதிலிருந்து எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது பற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இருப்பது அதில் பதிவாகி இருந்தது.

    எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அந்த காட்சிகள் மூலம் தெரியவந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

    "ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

     


    "இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    • மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆலம்பட்டியை சேர்ந்த சிலர் ஏ.டி.எம். மையம் உள்ள பகுதிக்கு சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ள பெட்டியை திறக்க முடியாமல் கொள்ளை திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா? என தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எம். மைய நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது குறித்து தெரியவரும். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த பின்பு தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஒரு வாடிக்கையாளர் சென்றுள்ளார்.
    • கொள்ளையர்கள் காரில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் டவுனில் கர்நாடக வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க ஒரு வாடிக்கையாளர் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு, அதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி எடுத்து, ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் காரில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் மகாராஷ்டிரா விரைந்துள்ளனர்.

    • ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் ஈரோடு-கரூர் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது. இதைப்போல் அலாரமும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி சேர்ந்த மக்கள் வழக்கம் போல் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள லாக்கரை உடைக்க முயன்ற போது முடியாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் தப்பியது.

    ஏ.டி.எம். மையத்தில் இரவு நேர காவலாளி மற்றும் அலாரம் இல்லாததை நன்கு தெரிந்து கொண்ட நபர்கள் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு வசுவபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (75). இவர் ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று சித்தோடு நால்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

    அப்போது பணம் எடுப்பதில் சிரமம் இருந்ததால் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுக்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்ட அந்த வாலிபர் பிரபாகரனிடம் ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்துள்ளார்.

    பின்னர் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வருகிறது. எனவே வங்கிக்கு சென்று கேளுங்கள் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். அப்போது பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டை தான் வைத்துக்கொண்டு தன்னிடம் இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை முதியவர் பிரபாகரனிடம் கொடுத்துள்ளார்.

    இதை கவனிக்காத பிரபாபரன் ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியே சென்றதும் பிரபாகரனின் ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தி அந்த வாலிபர் ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் 5 முறை ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியதால் பிரபாகரன் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.

    அப்போது வங்கி அதிகாரிகள் பிரபாகரனின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது சிறிது நேரத்திற்கு முன்பு 5 முறை மொத்தம் ரூ.50 ஆயிரம் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தனக்கு உதவி செய்வது போல நடித்த வாலிபர் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த பிரபாகரன் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட வாலிபரை தேடிவந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த வினோத்(30) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது வினோத் இதே பாணியில் பலரிடம் கைவரிசை காட்டியதும் அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர் வினோத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
    • அரியானாவில் தனிப்படையினரின் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. பணமும் மீட்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது.

    விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர்.

    அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரியானாவில் தனிப்படையினரின் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.

    இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

    இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்னை கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

    கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அதன்படி கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்த உள்ளனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை அரியானாவில் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகே ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலில் வங்கியில் மிகப்பெரிய கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.அதை கொண்டு செல்வதற்காக காரை திருடினோம்.

    குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்டெய்னர் லாரியில் பணத்தை அரியானா கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தோம்.வங்கியில் அவ்வளவு பெரிய தொகை கொள்ளையடிக்க முடியாது என்பதால் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஏடிஎம்களில் கொள்ளையடித்தோம்.

    தடயங்களை அழிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்களை தீயிட்டும் தொடர்ந்து திட்டமிட்டபடி சோதனை சாவடிகள் இல்லாத வழியாக தப்பிச் சென்றோம். கோலாரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் பணத்தை அரியானாவுக்கு கொண்டு சென்றோம் என தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் ரூ.70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் கோலாரில் கைதான இருவரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர்.
    • ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சந்தைப்பேட்டையில் இந்தியா ஒன் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவலாளி இல்லை.

    இதை குறி வைத்து ஏ.டி.எம். மையத்தில் கடந்த 21-ந்தேதி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் ஏற்காடு ஒலக்கூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 29), சேலம் குகை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்தன் (22) ஆகியோரை போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு பிடித்து கைது செய்துள்ளனர்.

    இந்த கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த கடந்த 21-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியை சேர்ந்த வீரமுத்து மகன் ராமர் என்கிற குட்டி பையன் (22) ஆகியோர் சந்தைப்பேட்டையில் உள்ள இந்தியா ஒன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து பெரிய இரும்பு கடப்பாரையை கொணடு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். சந்தைபேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் பெண் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம். வாசலில் யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டு கொண்டிருந்த குட்டிபையன் போலீசாரை கண்டதும் அவர் கம்பி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான்.

    மேலும் லட்சுமணன், ஆனந்தன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற நிலையில் ஏ.டி.எம். முன்பு அவர்கள் தங்களது செருப்புகளை விட்டு சென்றதும், கடப்பாரை கிடந்ததும், ஏ.டி.எம். உடைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பெண் போலீசார் உடனடியாக இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பெண் போலீசார் வாக்கி-டாக்கி மூலமாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு சந்தைப்பேட்டை பகுதியில் கொள்ளையர்களை தேடினர்.

    இதனிடையே தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சந்தை பேட்டைக்கு விரைந்து வந்தார். உடனே அவர் சமயோசிதமாக செயல்பட்டு, தீவட்டிப்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செருப்பு இல்லாமல் யாராவது வந்தால் சொல்லுங்கள் என கூறினார்.

    அப்போது ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டிரைவர் சந்தோஷ், செருப்பு இல்லாமல் அந்த வழியாக கொள்ளையன் வேகமாக ஓடுவதை கண்டு, சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ்காரர் சந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க துரத்திச் சென்றனர். இதில் 100 மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று கொள்ளையர்களை பிடித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு இடது கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கொள்ளையர்கள் இருவரையும் தப்ப விடாமல் பிடித்தார். பின்னர் கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தார். தப்பி ஓடிய குட்டி பையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா, ஆட்டோ டிரைவர் சந்தோஷ் ஆகியோரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர். இதனால் ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு மேவாட் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37) ஆகிய 2 பேரை அந்த மாநில போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை பலத்த காவலுடன் போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க அனுமதி கேட்டனர். இதையடுத்து இருவரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவர்கள் கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள்.

    கொள்ளையடிக்க எப்படி சதி திட்டம் தீட்டினர், கொள்ளை சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில் அவர்கள் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×