search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice"

    • அரவைக்காக நெல் அனுப்பப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி, 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் வீதம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • காட்டுபட்டி பகுதியில் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது
    • இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மாந்தங்குடி காட்டுபட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி காட்டுபட்டி பகுதியில் ஒரு குடோனில் சுமார் 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சுமார் 2,500 கிலோ பச்சரிசி, சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்பு அரிசி, சுமார் 700 கிலோ உடைக்கப்பட்ட குருணை அரிசி ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் சுமார் 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை சேகரிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை செய்த அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து தயார் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது.

    இந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி செறிவூட்ட ப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயரான உணவை சாப்பிட்டார்.

    இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்ய ப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டு பரிமாறப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும்.
    • சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ரத்தின வேலவன், ராமலிங்கம், சீராலூர் தனபால், பூதலூர் சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, விடுதலை சுடர், பழ. ராஜேந்திரன், தென்னவன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடியில் திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தொடர் வேளாண் தொழில் பெருந்தடம் உருவாக்கப் போவதாக அறிவித்தது.

    பெரும் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை மண்டலமாக தொழில் பேட்டைகளின் தொடர் சங்கியாக இது அமைக்கப்பட கூடாது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்ட ஏற்பாட்டிற்கு ஊரு நேரா வண்ணம் உணவுத்துறை சார்ந்த சிறுகுறு தொழில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2600 விலை தருகிறது. அதுபோல் தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

    2 thousand 500 per quintal should be provided for paddy - Maniarasan interviewமேலும் இதர வேளாண்மை பொருட்களுக்கு சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    நியாய விலை கடைகளில் உயிர்ம வேளாண் உற்பத்தி பொருட்கள், அரிசி தொடங்கி சிறு தானியங்கள், காய்கறிகள் என பலவும் மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உயிர்ம வேளாண்மை நிலங்களுக்கு இயற்கை எரு கிடைக்க கிடை போட அரசு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்ககுடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் 123 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய கரும்பு பாக்கி தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்.

    தவறான வங்கி கடன்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டில் வெளிப்படை தன்மை தேவை. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார்.
    • இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (வயது 52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடை காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.

    வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனைக் கண்ட ரவிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார். இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, 'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டு சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன.

    இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.

    • ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அதன்படி திருக்குவளை அருகே வடுவூர் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி நிரப்பிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வடிரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து சுமார் 50 வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி டிராக்டர் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் செயல்முறை வட்டக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஆய்வாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது எனவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் தனபதி , வேணு ராஜசேகர், தங்க குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் , செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுகளை தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடத்த வேண்டும்.

    பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு சீர் தங்கராசு, அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • இலுப்பூர் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
    • மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள்ளிட்டோர் அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்று பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வெட்டுக்காடு ஊராட்சி போலம்பட்டியில் ேரஷன் கடை செயல்பட்டு வருகிறது. போலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பொதுமக்கள் வாங்கிச் சென்று பார்த்த–போது அரிசியில் மற்றொரு அரிசியைபோல் ஏதோ பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து ரேஷன் கடையில் வாங்கிய அரி–சியை மீண்டும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கொண்டு காண்பித்து இது–குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஊழியர் இது–குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள் ளிட்டோர் விரைந்து வந்து அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப் பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், இது பள்ளிகளுக்கு வழங்கப்ப–டுபவை என்றும் பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர். இதனால் நிம்மதியடைந்த பொது–மக்கள் அந்த அரிசியை பெற்றுச்சென்றனர்.


    • சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
    • ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன்அரிசி மூட்டைகள் சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. ரெயிலில் ரேஷன்அரிசி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.

    இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    • ரேசன்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா?
    • புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாய–விலைக் கடையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதித்தார்.

    இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர தஞ்சை மாவட்ட த்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    ×