search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration shop"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ரேசன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு சிலர் இலவச அரிசியை பெறுவது இல்லை. அந்த அரிசி முறைகேடாக வெளி மார்க்கெட்டுக்கு செல்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தற்போது புதிய உத்தரவு அனைத்து ரேசன் கடை பணியாளர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி முன்னுரிமை, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக பெறப்படும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது குடும்பத்தில் ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளது. இனி குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 2-ந்தேதியில் இருந்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதன்மூலம் இலவச அரிசி பெற்ற குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தவர்கள், அரிசின் சலுகையை பெறாதவர்கள் விவரம் தெரியவரும். இதனால் அரசு வழங்கும் இலவச அரிசி விரயம் ஆகாமல் தடுப்பதோடு முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இறந்தவர்கள் விவரங்களை கூறி பெயரை நீக்குவது இல்லை. சிலர் இலவச அரிசியை வாங்குவது இல்லை. ஆனால் அவர்களின் பெயரில் அரிசி வாங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்ய கூறுகிறோம். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து பதிவு செய்து அரிசி, கோதுமையை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

    கடந்த மாதத்தில் இருந்து ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறை நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது. ரேசன் கடைகளில் உள்ள யு.பி.ஐ. எண்ணை பொதுமக்கள் தங்கள் செல்போனில் ஸ்கேனிங் செய்து பணம் செலுத்தலாம். இந்த வசதி சென்னையில் ஒவ்வொரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.

    • நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது.

    இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள முத்தநாடு எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தன. பின்னர் அங்கிருந்த உணவுப்பொருட்களை தின்று சூறையாடி விட்டுச் சென்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

    கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு உத்தரவிட்டனர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை.

    பல்லடம்:

    பல்லடம் வட்டாரத்தில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைகளில் போதுமான சுகாதார வளாக வசதி இல்லாததால் பணியாளர்கள் பெரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் உள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றோம்.

    அதிலும் பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே அனைத்து ரேசன் கடைகளிலும் சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும்.மேலும் பொதுவிநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.நியாய விலை கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும்.

    ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் தரமானதாகவும், காலாவதி ஆகாத பொருட்களாக அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளில் இணையதள வசதியை மேம்படுத்தி சர்வர் பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது.
    • ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பூர்,:

    தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழக கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

    தமிழக அரசு மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களின் வீடுகளில் இந்தாண்டு ஜூலையில் விண்ணப்பம் வழங்கியது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டன.

    இதற்கு ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் அம்மாத இறுதியில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆகஸ்டில் இருந்து மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பல கடைகளில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், பிற மாநிலத்தவருக்கு வழங்குவதற்கு ஏற்ப கூடுதலாக பொருட்களை அனுப்புவதில்லை. அதனால் அவர்களுக்கு வினியோகிக்க முடிவதில்லை என்றனர்.

    உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளதால், ரேஷன் கார்டை குடும்பத்தினரிடம் வழங்கி விட்டு வந்துள்ளனர். இதனால் பலர் தமிழகத்தில் பொருட்களை வாங்குவதில்லை.ஜூலையில் 381, ஆகஸ்டில் 615,இம்மாதத்தில் 90 பேர் பொருட்களை வாங்கியுள்ளனர். பிற மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
    • மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

    தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

    தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

    இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.

    இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததை இடித்துவிட்டு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    மேலும் அதே பகுதியில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரேசன் கடை இப்பகுதிக்கு வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் 15-வது மாநில மானிய திட்டத்தின் மூலம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.

    இப்பகுதியில் கட்டப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆன 2 கட்டிடங்களையும் செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மேலும் தர்மபுரம் பகுதியில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக புதிய கட்டிடத்தில் இருந்து தமிழக அரசின் இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் டி.ராஜி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மோகனவேல் தர்மபுரம் ராஜேந்திரன் தெய்வமணி தயாளன் அம்பிகாபதி மாவட்ட பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அத்திக்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை, வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், அத்தி கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், நாடக மேடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், காரணி கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் புரிசை எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவர்கள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு, வேடக்கொல்லைமேடு, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு உள்பட பல்வேறு கிராமங்களில் நேற்று கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வருகைதந்து மக்கள் குறை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    குப்பம் கிராமத்தில் அரசு மேநிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    வாழியூர் ஊராட்சியில், ரூ.14.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கிடங்கு, காளசமுத்திரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், பள்ளக்கொல்லை புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வாழியூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவெங்கடேசன், படவேடு தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படவேடு கோட்டக்கரையில் கன்று விடும் திருவிழாவையும் எம்.எல்.ஏ. சரவணன் துவக்கி வைத்தார்.

    இதேபோல் கண்ணமங்கலம் அருகே அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள வேடக்கொல்லைமேடு அரசு மேநிலைப்பள்ளியில் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர், மாணவ மாணவிகள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.

    • நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது.
    • கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

    சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

    இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கலெக்டருக்கு பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராமசாமி–பட்டி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்பாடி பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 56) என்பவர் கடந்த 30 ஆண்டு–களுக்கும் மேலாக விற்பனை–யாளராக பணிபுரிந்து வரு–கிறார்.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனை–யாளருக் கும், மாவட்ட கூட்டுறவுத்து–றைக்கும் இடையே ஊதியம் வழங்குதல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை முழு–மையாக செயல்படுத்தாதது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    மேலும் ரேசன்கடை விற்பனையாளர் ராமசாமி இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள் ளார். நீதிமன்ற உத்தரவை மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை என கூறி மீண்டும் ராமசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் மோதல் உச்சக்கட் டத்தை எட்டியது.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனையாளரான ராமசாமி கடந்த 7-ந்தேதி விடுப்பு எடுத்த நிலையில், ராமசாமிபட்டி ரேசன் கடைக்கு குழுவாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டு–றவுத்துறை துணை பதிவா–ளர் தலைமையிலான சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிகா–ரிகள் ரேசன் கடையை திடீ–ரென மூடி சீல் வைத்த–னர்.

    மேலும் இந்த நடவடிக் கையின்போது திருச்சுழி வட்ட வழங்கல் அதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்காதது, போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்ட–தாக கூறப்படுகிறது. ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    இந்த நிலை யில் நேற்று முன்தினம் (8-ந்தேதி) காலை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடைக்கு வந்தபோது ரேசன் கடை பூட்டப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர். அதன்பின்னரே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததை அறிந்தனர். இத–னால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடி–யாமல் அவதிப்பட்ட–னர்.

    மேலும் ரேசன் கடையை திறக்கக்கோரி கடை முன்பு 50-க்கும் மேற்பட்ட பொது–மக்கள் கூட்டமாக திரண்ட நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூட்டுறவுத்துறை அதி–காரிகள் ரேசன்கடையை உடனடியாக திறந்து விட்ட–னர். இதனையடுத்து பொது–மக்கள் அனைவரும் ரேசன் பொருட்களை வாங்கி சென்றனர்.

    மேலும் இரு தரப்பு பிரச்சனையில் பொதுமக் கள் பயன்படுத்தி வரும் ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக் கைகள் எடுக்கவெண்டு–மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தக்காளி விலை ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தக்காளி கிலோ இன்னும் ரூ.120 முதல் ரூ.130 வரை சில்லறை காய்கறி கடைகளில் விற்கப்படுவதால் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது. கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    கர்நாடகாவில் தக்காளியை அதிக விலைக்கு வாங்கி வந்து நஷ்டத்திற்கு தான் கூட்டுறவு சங்கங்கள் தற்போது தக்காளியை விற்கின்றன. இதனால் குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி 11.30 மணிக்குள் விற்று விடுகின்றன.

    இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    அடையார், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, 60 டி.யு.சி.எஸ். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 42 கிலோ தக்காளி வினியோகம் செய்கிறோம். அவை 11 மணிக்குள் விற்று விடும். தக்காளி அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு கிலோ ரூ.60-க்கு விற்பதால் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் முடிவை ஏற்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×