search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1 கோடியில் பள்ளி கட்டிடம், ரேசன் கடை
    X

    ரூ.1 கோடியில் பள்ளி கட்டிடம், ரேசன் கடை

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அத்திக்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை, வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், அத்தி கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், நாடக மேடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், வட சேந்தமங்கலம் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி கட்டிடம், காரணி கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் புரிசை எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×