search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை
    X

    திருச்சுழி அருகே பூட்டி சீல் வைக்கப்பட்ட ரேசன் கடை முன்பு பொதுமக்கள் திரண்டு நின்ற காட்சி.

    ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை

    • ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கலெக்டருக்கு பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராமசாமி–பட்டி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்பாடி பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 56) என்பவர் கடந்த 30 ஆண்டு–களுக்கும் மேலாக விற்பனை–யாளராக பணிபுரிந்து வரு–கிறார்.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனை–யாளருக் கும், மாவட்ட கூட்டுறவுத்து–றைக்கும் இடையே ஊதியம் வழங்குதல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை முழு–மையாக செயல்படுத்தாதது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    மேலும் ரேசன்கடை விற்பனையாளர் ராமசாமி இதுகுறித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள் ளார். நீதிமன்ற உத்தரவை மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை என கூறி மீண்டும் ராமசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் மோதல் உச்சக்கட் டத்தை எட்டியது.

    இந்த நிலையில் ரேசன் கடை விற்பனையாளரான ராமசாமி கடந்த 7-ந்தேதி விடுப்பு எடுத்த நிலையில், ராமசாமிபட்டி ரேசன் கடைக்கு குழுவாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டு–றவுத்துறை துணை பதிவா–ளர் தலைமையிலான சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிகா–ரிகள் ரேசன் கடையை திடீ–ரென மூடி சீல் வைத்த–னர்.

    மேலும் இந்த நடவடிக் கையின்போது திருச்சுழி வட்ட வழங்கல் அதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்காதது, போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்ட–தாக கூறப்படுகிறது. ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

    இந்த நிலை யில் நேற்று முன்தினம் (8-ந்தேதி) காலை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடைக்கு வந்தபோது ரேசன் கடை பூட்டப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர். அதன்பின்னரே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததை அறிந்தனர். இத–னால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடி–யாமல் அவதிப்பட்ட–னர்.

    மேலும் ரேசன் கடையை திறக்கக்கோரி கடை முன்பு 50-க்கும் மேற்பட்ட பொது–மக்கள் கூட்டமாக திரண்ட நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூட்டுறவுத்துறை அதி–காரிகள் ரேசன்கடையை உடனடியாக திறந்து விட்ட–னர். இதனையடுத்து பொது–மக்கள் அனைவரும் ரேசன் பொருட்களை வாங்கி சென்றனர்.

    மேலும் இரு தரப்பு பிரச்சனையில் பொதுமக் கள் பயன்படுத்தி வரும் ரேசன் கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக் கைகள் எடுக்கவெண்டு–மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×