search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property issue"

    ரெட்டியார் பாளையத்தில் சொத்தை பிரித்து தர தாய் மறுத்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைசாவடி வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு 4 மகன்கள்.

    மூத்த மகன் மணிகண்டன் (வயது 26). கட்டிட வேலை செய்து வந்த இவர் தனது மாமன் மகளை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்தார்.

    பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து மணிகண்டன் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இரவில் மட்டும் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மணிகண்டன் மனைவியுடன் தூங்க செல்வார்.

    இதற்கிடையே மணிகண்டன் தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாக பிரிவினை செய்து தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால், அதற்கு அஞ்சலை சம்மதிக்கவில்லை.

    மற்ற மகன்கள் 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு வீட்டை பாகம் பிரித்து தருவதாக கூறி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மணிகண்டன் மது குடித்து விட்டு தனது தாய் அஞ்சலையிடம் வீட்டை பாகம் பிரித்து தருமாறு மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இதற்கு அஞ்சலை மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இரவு நேரத்தில் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்ற மணி கண்டன் அங்கு மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காட்டுமன்னார்கோவில் அருகே சொத்தை எழுதி தராததால் மனைவியை தீர்த்துகட்டினேன் என்று கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.

    அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.

    உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.

    விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெங்களூருவில், சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தந்தையின் கண்விழியை விரலால் தோண்டி எடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பெங்களூரு :

    பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சகாம்பரி நகரில் வசித்து வருபவர் பரமேஸ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு சந்தன், சேத்தன் என்று 2 மகன்கள் உள்ளனர். சந்தன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தனியாக வசித்து வருகிறார். சேத்தன் தொழில்அதிபராக இருக்கிறார். இவர், ஊதுபத்தி தயாரித்து மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    பரமேஸ் தனக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் மனைவி வசந்தியுடன் வசித்து வந்தார். தரைதளத்தில் சேத்தன் மட்டும் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் வசந்தி இறந்து போனார். இதன் தொடர்ச்சியாக, பரமேசின் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று சேத்தன், தந்தை பரமேசிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக பரமேசுக்கு, சேத்தன் வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. நோட்டீசில், சொத்தை பிரித்து கொடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நோட்டீசை நேற்று பெற்ற பரமேஸ், சேத்தனிடம் சென்று ‘நேரம் வரும்போது சொத்துகளை உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன். இப்போது சொத்துகளை எழுதி கொடுக்க முடியாது‘ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேத்தன், தந்தை பரமேசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதற்கு அஞ்சாத பரமேஸ் வீட்டில் இருந்து வெளியேறி முதல் தளத்துக்கு சென்றுள்ளார். இந்த வேளையில், அங்கு சென்ற சேத்தன், பரமேசின் கண்களை விரலால் தோண்டினார். இதனால் பரமேசியின் ஒரு கண்ணில் இருந்த கருவிழி கீழே விழுந்தது. இன்னொரு கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் பரமேஸ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் சேத்தனை பிடித்து வைத்து கொண்டதோடு, பரமேசை மீட்டு அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும், பரமேசுக்கு மீண்டும் கண்பார்வை கிடைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறினர். தொடர்ச்சியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, பிடிபட்ட சேத்தனை ஜே.பி.நகர் போலீசில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். இதுபற்றி பரமேஸ் கொடுத்த புகாரின் பேரில் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்தை எழுதி கொடுக்காததால் ஆத்திரமடைந்து தொழில்அதிபர் ஒருவர் தந்தையின் கண் விழியை விரலால் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    கருவடிக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் கால்நடை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது45). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் குமாருக்கும் (54) சொத்து தகராறு இருந்து வந்தது.

    நேற்றும் இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் பாலமுருகன், பாலசுந்தரம் ஆகிய 3 பேரும் சேர்ந்து சண்முக சுந்தரத்தை சரமாரியாக தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சண்முகசுந்தரத்தின் மனைவி அஞ்சலையையும் அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஏட்டு மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். #wifenkillsMan #Rs15crproperty
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் ஷங்கர் கைக்வாட் மாயமானதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இந்த கோணத்திலும் விசாரிக்க தொடங்கியபோது, ஆஷா கெய்க்வாட்டின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

    அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

    இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக தந்தார்.

    கடந்த மே மாதம் 18-ம் தேதி கணவர் ஷங்கரை ஆட்டோ ரிக்‌ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். ஷங்கர் சுயநினைவை இழக்க தொடங்கியவுடன், ஹிமான்ஷு துபே மற்றும் அவருடன் வந்த 4 பேர் உதவியுடன் ஷங்கரை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொன்ற ஆஷா, அவரது உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கிவீசினார்.

    பிறகு, ஒன்றும் தெரியாததுபோல் கல்யான் டவுன் ஷிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துசேர்ந்த ஆஷா, தனது கணவர் காணாமல் போனதாக போலி நாடகமாடியும் போலீசில் புகாரும் அளித்த உண்மைகளை, ஆஷாவின் கைபேசி அழைப்புகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதைதொடர்ந்து, ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஹிமான்ஷு துபேவின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். #wifenkillsMan #Rs15crproperty 
    குரும்பூர் அருகே சொத்து பிரச்சினையில் மோதி கொண்டது தொடர்பாக ராணுவவீரர் மற்றும் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரத்தை சேர்ந்தவர் நயினார். இவருக்கு 2 மனைவி. முதல் மனைவிக்கு ரவிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவவீரராக உள்ளார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நயினார் தற்போது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். 2-வது மனைவி சந்தனமாரியம்மாள்.

    இந்நிலையில் நயினார் தனது சொத்துக்களை பிரித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து சந்தனமாரியம்மாள் தனது பங்கு சொத்துக்களை விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், ரவிக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருவருரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும், சந்தனமாரியம்மாளை ஆத்தூர் தனியார் மருத்துவமனையயிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குரும்பூர் போலீசில் ரவிக்குமார், சந்தனமாரியம்மாள் தரப்பில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    ×