என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருவடிக்குப்பம்"
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் கால்நடை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது45). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் குமாருக்கும் (54) சொத்து தகராறு இருந்து வந்தது.
நேற்றும் இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் பாலமுருகன், பாலசுந்தரம் ஆகிய 3 பேரும் சேர்ந்து சண்முக சுந்தரத்தை சரமாரியாக தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சண்முகசுந்தரத்தின் மனைவி அஞ்சலையையும் அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஏட்டு மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்