search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து தகராறில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலைவீச்சு
    X

    சொத்து தகராறில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலைவீச்சு

    கருவடிக்குப்பத்தில் சொத்து தகராறில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் கால்நடை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது45). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் குமாருக்கும் (54) சொத்து தகராறு இருந்து வந்தது.

    நேற்றும் இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் பாலமுருகன், பாலசுந்தரம் ஆகிய 3 பேரும் சேர்ந்து சண்முக சுந்தரத்தை சரமாரியாக தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சண்முகசுந்தரத்தின் மனைவி அஞ்சலையையும் அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஏட்டு மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×