search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja"

    • வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.
    • அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    'நான் யாரைப் பார்க்க நினைக்கிறேனோ, அவர்கள் மட்டுமே என்னைப் பார்க்க வர முடியும்.

    ஏனெனில் எனது அழைப்பும் வேண்டும்.'

    நெமிலியில் குடிகொண்டிருக்கும் அன்னை பாலாவின் அருள்வாக்கு இது.

    வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி அய்யர்.

    கடவுளுக்குத் தொண்டு செய்து காலம் செலுத்திய வேதவிற்பன்னரான ராமசுவாமி அய்யருக்கும் கஷ்ட காலம் வந்தது.

    அதிலிருந்து மீள முடியாமல் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே கிளம்பினார்.

    கால்நடையாகவே வந்தவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைகிறார்கள்.

    அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், நிரந்தரமான வசிப்பிடம் கிடைக்கும் வரை இங்கேயே தங்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்.

    ஆனால், சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களோ, இது மோகினிப் பிசாசு குடியிருக்கும் இடம் என்று அச்சமூட்டுகிறார்கள்.

    அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

    தூசிபடிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் அய்யரின் மனைவி சாவித்திரி.

    அன்று இரவு உணவை உண்டு அனை வரும் உறங்கிப் போனார்கள்.

    ஆனால், ராமசுவாமி அய்யர் விடிய விடியக் கண்விழித்து மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார்.

    பொழுது விடிந்ததும் சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள், அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டார்கள்.

    இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள், அய்யர் குடும்பம் நிரந்தரமாக தங்கள் ஊரிலேயே தங்கி இருக்க வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

    காலங்கள் கடந்தன. ஒருநாள் இரவு, ராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி காட்சி கொடுத்தாள்.

    "அன்னை ராஜ ராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன்.

    அங்கிருந்து என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து அமர்த்திக்கொள்; நீ தொட்டது அனைத்தும் துலங்கும்"

    என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சிதந்த பாலா.

    அன்னை பராசக்தியே தனது இல்லத்தில் அவதரிக்கப் போவதாகப் பேரானந்தம் கொண்டார் சுப்பிரமணியன்.

    விடிந்தும் விடியாததுமாய் ஊரார் சிலரோடு கொசஸ்தலை ஆற்றுக்கு ஓடினார்.

    ஆற்றில் இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலையடித்தது வெள்ளம். அதில் இறங்கி, பாலாவைத் தேடினார் சுப்பிரமணியன்.

    வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.

    மறுநாள், தான் மட்டும் ஆற்றுக்கு ஓடினார் சுப்பிரமணியன். இம்முறையும் பாலா பிரசன்னமாகவில்லை.

    அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    அப்போதும் கிடைக்கவில்லை. இறுதியாக, பாலாவை நினைத்தபடி ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார்.

    வலைவீசித் தேடியும் கிடைக்காத பாலா, சுப்பிரமணியனின் கையில் வாகாய் வந்தமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

    விரல் அளவிலான பாலாவைப் பார்த்துப் பரவசம் கொண்டவர் பாலா விக்கிரகத்துடன் வீடுவந்து சேர்ந்தார்.

    நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா, சுப்பிரமணிய அய்யரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலியே திரண்டுவந்தது.

    அந்த ஆண்டு நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா.

    ஒன்பது நாட்களும் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டது பாலா குடில்.

    தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வ செழிப்பாக்கினாள் பாலா.

    இப்படித்தான் சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

    பாலாவுக்கென ஒரு கோவில் தனியாக, இந்த உலகெங்கிலும் தேடிப் பார்த்தாலும் கிடையாது.

    அப்படி என்றால் இந்த பாலா பீடம் என்பது கோவில் இல்லையா? ஆம் பாலா பீடம் என்பது கோவில் அல்ல, ஒரு வீடு.

    பாலா தனக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒரு வீடுதான் இந்த பாலா பீடம்,

    ஆற்றிலே மிதந்து வந்த அன்னை பாலா அய்யரவர்கள் துயர் நீக்கி,

    அவர்தம் துன்பத்தைப் போக்கி அருளை வாரி வழங்கி காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி போல நெமிலியிலே தனி ஒரு அரசாட்சி நடத்திவருகிறாள்.

    அன்னை பாலாவின் அரசாட்சி, அகிலமே புகழும் அருளாட்சி, காண கண் கொள்ளா கண்காட்சி.

    பாலா அவள் உத்தரவின்றி அவள் வீட்டிலே நுழைய முடியாது.

    அவளது ஒப்புதலின்றி அவ்விடத்தில் சிறு உப்பும் சுவை தராது.

    அளவிலாத லட்சங்களுக்கு அதிபதி ஆனாலும் அவள் உத்தரவின்றி உள்ளே நுழைய முடியாது.

    நெமிலியில் அவள் அமர்ந்திருக்கும் பீடத்திலே அவள் வைத்ததுதான் சட்டம்.

    அவள் சொல்வதுதான் தீர்ப்பு.

    நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள்.

    என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோவிலுக்குத்தான் செல்வார்கள்.

    கோவிலுக்கு செல்ல அழைப்பு தேவையில்லை.

    நினைப்பு போதும், என் வீட்டிற்குள்ளே நுழைய நினைப்பு மட்டும் போதாது. என் அழைப்பும் வேண்டும்.

    இதுதான் அன்னை பாலாவின் அருள்வாக்கு.

    அகிலம் புகழும் அற்புத வாக்கு. இதுதான் பாலா பக்தர்களுக்கு வேத வாக்கு.

    நெமிலியிலே ஆற்றினை அடுத்த வீதியில் அமைந்திருக்கும் அழகிய வீட்டிலே நடுக்கூடத்திலே தான் ஸ்ரீபாலா அமர்ந்திருக்கிறாள்.

    நடு வீடு பீடமாகி எனும் வார்த்தைகள் அன்றே சித்தர் பாடிய சத்திய வார்த்தைகள்.

    அவள் வந்து அமர்ந்த அந்த வீடுதான் பாலா பீடமாகியது.

    எவ்வளவு தீர்க்க தரிசனமாக 800 ஆண்டுகளுக்கு முன்னரே கருவூர் சித்தர் எழுதிவிட்டார்.

    நெமிலியெனும் அந்த சிற்றூரிலே வந்து ஸ்ரீபாலா பீடம் எங்கே என்று கேட்டால் அதுங்களா நம்ம ஐயர் வீட்லதான் இருக்கு என்று கூறுவார்கள்.

    கருவூர் சித்தர் பாடலும் அதனையே வலியுறுத்துகிறது. ஆம் ஆலயமல்ல. அது பாலாவின் வீடு. வீடு வீடுதான்.

    • 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கின
    • சேரங்கோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரெப்கோ வங்கியின் உதவியுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைக்கபட்டது.

    நிகழ்ச்சியில் சேரங்கோடு ஊராட்சி தலைவர், துணை தலைவர், பொதுமக்கள், வியாபார சங்க உறுப்பினர்கள், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நீலகிரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

    • வேலாயுதம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது
    • முருகனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி முதல் நாளை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதே போல புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    மேலும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும் சற்றும் அசையாமலும், ஆடாமலும் எரிகின்றது.
    • இந்த விளக்கானது, ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி என்ற வாயுத் தலத்தின் கருவறைத் திருவிளக்குகளில்

    பல சுடர்களில் ஒரு திருச்சுடர் காற்றால் தாக்கப்படுவதைப் போல எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கின்றது.

    அந்தத் திருச்சுடரின் நடன கோலம், வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது.

    மோகனூரில் உள்ள சிவன் கோவில் கருவறை விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும்

    சற்றும் அசையாமலும், ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து எரிகின்றது.

    இங்குள்ள இறைவனுக்கு "அசலதீபேசுவரர்" என்று பெயர்.

    மிகப்பெரிய திருவிளக்கு!

    ஏத்துமானூர் மகாதேவர் கோவிலின் திருவிளக்கு, அளவில் மிகப்பெரியது.

    அதன் குழி ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    கோவில்களில் எண்ணற்ற திருவிளக்குகள் உள்ளன.

    ஆனால் வேதாரண்யம் கோவிலில் உள்ள விளக்கு மட்டும் மிக்க அழகுடையது.

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
    • குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

    எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

    அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    • புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 11-வது வார்டு மற்றும் 20-வது வார்டுக்கு உட்பட்ட அலைமகள் நகர் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பூமி பூஜைக்கு புகழூர் நகர்மன்ற தலைவரும் புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். பூமி பூஜை விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள் நந்தினி ராஜேஸ் , சுரேஷ் , வார்டு செயலாளர் விஜயகாந்த் ,நகர துணை செயலாளர் இம்ரான்கான் ,11-வது வார்டு அவைத் தலைவர் மணிவேல் , கட்சி நிர்வாகிகள் மனோகரன் , கலைச்செல்வி, நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட் வழக்கு தொடர்ந்தனர்.
    • நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில், குப்பன் என்பவருக்கு 1978-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி ஒரு ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. அப்போது, 10 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.

    இதன்படி, இந்த நிலத்தை 1988-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி பவர் ஏஜெண்ட் மூலம் குப்பன் விற்பனை செய்தார். அதன்பின்னர், அந்த நிலத்தை பகுதி பகுதியாக பலர் வாங்கியுள்ளனர். அதில், 27 சென்ட் நிலத்தை அரவிந்த தேவி என்பவர் 1999-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.

    அதில், 13.84 சென்ட் நிலத்தை தன் மகள் பிங்கிள் ரமேஷ் ரெட்டிக்கு எழுதி கொடுத்தார். இதற்கிடையில், குப்பன் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று, இந்த நிலத்துக்குரிய பட்டாவை ரத்து செய்து கோத்தகிரி தாசில்தார் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பிங்கிள் ரமேஷ் ரெட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த நிலம் மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்டத்தில் தனியாருக்கு நிபந்தனைகளுடன் வழங்கப் பட்ட அரசு நிலங்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் மறுஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அந்த நிலத்தை பொது பயன்பாட்டுக்காக மீண்டும் கையகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்'' என்று உத்தர விட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிங்கிள் ரமேஷ் ரெட்டி, நடிகை பூஜா பட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோர் தனித்தனியாக மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிங்கிள் ரமேஷ் ரெட்டி தரப்பில் மூத்த வக்கீல் அப்துல் சலீம் ஆஜராகி, நிலத்தின் ஒதுக்கீட்டை 45 ஆண்டுகளுக்கு பின்னர் ரத்து செய்துள்ளனர். இதன்மூலம், மனுதாரருக்கு சொத்தின் மீதுள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பா.முத்து குமார், ''நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது'' என்றார். இதை பூஜாபட் தரப்பில் ஆஜரான வக்கீல் மறுப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ''இந்த வழக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி தள்ளிவைக்கிறோம். அதுவரை அனைத்து தரப்பினரும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

    • கந்தர்வகோட்டை சிவன் கோவில்களில் சிவனுக்கு அன்னாபிஷேக் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்

    கந்தர்வகோட்டை,

    ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் பௌர்ணமி சாமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிவபெருமானை தரிசித்தனர். 

    • ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.
    • ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.

    ஐப்பசி மாதம் சுக்கில பட்ச அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் வரும்.

    அதற்கு முன் தொடங்கி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    இயலாதவர்கள் விரத தினம் ஒருநாள் மட்டும் உபவாசத்துடன் பூஜை செய்யலாம்.

    கணவனும், மனைவியும் குடும்பத்தில் கருத்தொருமித்து செயல்பட்டு இன்பமாக வாழ வேண்டும் என்பதே இவ்விரதத்தின் உட்கருத்து.

    வழிபாட்டுக்குப் பிறகு 21 நூல்கள் சேர்ந்த 21 முடியுள்ள பட்டு அல்லது நூல் சரட்டை மஞ்சளில் நனைத்துக் கையில் அணிந்து கொள்ள வேண்டும்.

    இருபத்தோரு இழைகளிலே கயிறு முறுக்கி நாளுக்கு ஒரு முடியாக,

    இருபத்தோரு நாட்களும் ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றால்

    ஸ்ரீ பரமேஸ்வரன் தம்முடைய ரிஷப வாகனத்திலே எழுந்தருளி காட்சி கொடுப்பார்.

    அவரவர் விரும்பிய வரத்தையும் தந்தருள்வார் என்று கவுதம முனிவர் கூறியுள்ளார்.

    இவ்விரதத்தை இடைவிடாமல் 21 முறைகள் பக்தியுடன் அனுஷ்டித்து வந்தால் சகல பாவமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

    தன தானிய சம்பத்தும், பால் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் இவ்விரதத்தால் உண்டாகும்.

    கணவன் மனைவி மன ஒற்றுமையும், அந்நியோன்யமும் உண்டாகும்.

    • அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
    • மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

    இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும்

    கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை

    அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய

    அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

    அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.

    மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

    கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு,

    அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

    கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

    நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.

    .இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம்.

    நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

    ×