என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nemili Bala"

    • வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.
    • அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    'நான் யாரைப் பார்க்க நினைக்கிறேனோ, அவர்கள் மட்டுமே என்னைப் பார்க்க வர முடியும்.

    ஏனெனில் எனது அழைப்பும் வேண்டும்.'

    நெமிலியில் குடிகொண்டிருக்கும் அன்னை பாலாவின் அருள்வாக்கு இது.

    வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி அய்யர்.

    கடவுளுக்குத் தொண்டு செய்து காலம் செலுத்திய வேதவிற்பன்னரான ராமசுவாமி அய்யருக்கும் கஷ்ட காலம் வந்தது.

    அதிலிருந்து மீள முடியாமல் தனது குடும்பத்தோடு ஊரை விட்டே கிளம்பினார்.

    கால்நடையாகவே வந்தவர்கள் அரக்கோணம் அருகிலுள்ள நெமிலி கிராமத்தை வந்தடைகிறார்கள்.

    அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், நிரந்தரமான வசிப்பிடம் கிடைக்கும் வரை இங்கேயே தங்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள்.

    ஆனால், சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களோ, இது மோகினிப் பிசாசு குடியிருக்கும் இடம் என்று அச்சமூட்டுகிறார்கள்.

    அய்யர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

    தூசிபடிந்து கிடந்த சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார் அய்யரின் மனைவி சாவித்திரி.

    அன்று இரவு உணவை உண்டு அனை வரும் உறங்கிப் போனார்கள்.

    ஆனால், ராமசுவாமி அய்யர் விடிய விடியக் கண்விழித்து மந்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டே இருந்தார்.

    பொழுது விடிந்ததும் சத்திரத்துக்கு ஓடிவந்த ஊர் மக்கள், அங்கே அய்யரும் அவரது மனைவி மக்களும் நலமுடன் இருந்ததைக் கண்டார்கள்.

    இவர்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த ஊர்மக்கள், அய்யர் குடும்பம் நிரந்தரமாக தங்கள் ஊரிலேயே தங்கி இருக்க வசதிகளை செய்து கொடுத்தார்கள்.

    காலங்கள் கடந்தன. ஒருநாள் இரவு, ராமசுவாமி அய்யரின் இரண்டாவது மகன் சுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி காட்சி கொடுத்தாள்.

    "அன்னை ராஜ ராஜேஸ்வரியின் அருளாசிப்படி பாலாவாகிய நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன்.

    அங்கிருந்து என்னை நீ எடுத்து உனது இல்லத்தில் வைத்து அமர்த்திக்கொள்; நீ தொட்டது அனைத்தும் துலங்கும்"

    என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சிதந்த பாலா.

    அன்னை பராசக்தியே தனது இல்லத்தில் அவதரிக்கப் போவதாகப் பேரானந்தம் கொண்டார் சுப்பிரமணியன்.

    விடிந்தும் விடியாததுமாய் ஊரார் சிலரோடு கொசஸ்தலை ஆற்றுக்கு ஓடினார்.

    ஆற்றில் இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலையடித்தது வெள்ளம். அதில் இறங்கி, பாலாவைத் தேடினார் சுப்பிரமணியன்.

    வெகுநேரமாகியும் பாலா வரவில்லை. சோர்ந்து போய் நின்றவரை ஊரார் சமாதானம் செய்தார்கள்.

    மறுநாள், தான் மட்டும் ஆற்றுக்கு ஓடினார் சுப்பிரமணியன். இம்முறையும் பாலா பிரசன்னமாகவில்லை.

    அப்படியும் முயற்சியைக் கைவிடாதவர் மூன்றாம் நாளும் ஆற்றில் இறங்கித் தேடினார்.

    அப்போதும் கிடைக்கவில்லை. இறுதியாக, பாலாவை நினைத்தபடி ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார்.

    வலைவீசித் தேடியும் கிடைக்காத பாலா, சுப்பிரமணியனின் கையில் வாகாய் வந்தமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

    விரல் அளவிலான பாலாவைப் பார்த்துப் பரவசம் கொண்டவர் பாலா விக்கிரகத்துடன் வீடுவந்து சேர்ந்தார்.

    நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் குழந்தை பாலா, சுப்பிரமணிய அய்யரின் இல்லத்தில் குடியேறிய செய்தி கேட்டு நெமிலியே திரண்டுவந்தது.

    அந்த ஆண்டு நவராத்திரிக் கொண்டாட்டங்களின் நாயகி ஆனாள் பாலா.

    ஒன்பது நாட்களும் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டது பாலா குடில்.

    தான் குடிகொண்ட கிராமத்தையும் தன்னை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வ செழிப்பாக்கினாள் பாலா.

    இப்படித்தான் சுப்பிரமணிய அய்யரின் இல்லம் பாலா பீடமானது.

    பாலாவுக்கென ஒரு கோவில் தனியாக, இந்த உலகெங்கிலும் தேடிப் பார்த்தாலும் கிடையாது.

    அப்படி என்றால் இந்த பாலா பீடம் என்பது கோவில் இல்லையா? ஆம் பாலா பீடம் என்பது கோவில் அல்ல, ஒரு வீடு.

    பாலா தனக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒரு வீடுதான் இந்த பாலா பீடம்,

    ஆற்றிலே மிதந்து வந்த அன்னை பாலா அய்யரவர்கள் துயர் நீக்கி,

    அவர்தம் துன்பத்தைப் போக்கி அருளை வாரி வழங்கி காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி போல நெமிலியிலே தனி ஒரு அரசாட்சி நடத்திவருகிறாள்.

    அன்னை பாலாவின் அரசாட்சி, அகிலமே புகழும் அருளாட்சி, காண கண் கொள்ளா கண்காட்சி.

    பாலா அவள் உத்தரவின்றி அவள் வீட்டிலே நுழைய முடியாது.

    அவளது ஒப்புதலின்றி அவ்விடத்தில் சிறு உப்பும் சுவை தராது.

    அளவிலாத லட்சங்களுக்கு அதிபதி ஆனாலும் அவள் உத்தரவின்றி உள்ளே நுழைய முடியாது.

    நெமிலியில் அவள் அமர்ந்திருக்கும் பீடத்திலே அவள் வைத்ததுதான் சட்டம்.

    அவள் சொல்வதுதான் தீர்ப்பு.

    நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள்.

    என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோவிலுக்குத்தான் செல்வார்கள்.

    கோவிலுக்கு செல்ல அழைப்பு தேவையில்லை.

    நினைப்பு போதும், என் வீட்டிற்குள்ளே நுழைய நினைப்பு மட்டும் போதாது. என் அழைப்பும் வேண்டும்.

    இதுதான் அன்னை பாலாவின் அருள்வாக்கு.

    அகிலம் புகழும் அற்புத வாக்கு. இதுதான் பாலா பக்தர்களுக்கு வேத வாக்கு.

    நெமிலியிலே ஆற்றினை அடுத்த வீதியில் அமைந்திருக்கும் அழகிய வீட்டிலே நடுக்கூடத்திலே தான் ஸ்ரீபாலா அமர்ந்திருக்கிறாள்.

    நடு வீடு பீடமாகி எனும் வார்த்தைகள் அன்றே சித்தர் பாடிய சத்திய வார்த்தைகள்.

    அவள் வந்து அமர்ந்த அந்த வீடுதான் பாலா பீடமாகியது.

    எவ்வளவு தீர்க்க தரிசனமாக 800 ஆண்டுகளுக்கு முன்னரே கருவூர் சித்தர் எழுதிவிட்டார்.

    நெமிலியெனும் அந்த சிற்றூரிலே வந்து ஸ்ரீபாலா பீடம் எங்கே என்று கேட்டால் அதுங்களா நம்ம ஐயர் வீட்லதான் இருக்கு என்று கூறுவார்கள்.

    கருவூர் சித்தர் பாடலும் அதனையே வலியுறுத்துகிறது. ஆம் ஆலயமல்ல. அது பாலாவின் வீடு. வீடு வீடுதான்.

    • உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான்
    • அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும்.

    உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான்.

    சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள்.

    சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள்.

    அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு

    அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    1945ம் ஆண்டில் அன்னையை தரிசிக்க வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவர் போற்றி பாராட்டியுள்ளார்

    1945ம் ஆண்டில் அன்னையை தரிசிக்க வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவாள் ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,

    "ஒரு தனிப்பட்ட குடும்பத்தினர் தாம் வழிபட அமைத்துக் கொண்ட இல்லமாயினும் அனைவருக்கும் தாயின் அருள்

    கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஜாதிமத பேதமின்றி அனைவரையும் வரவேற்று அன்னையின் அழகை

    அனைவரும் தரிசிக்க வைக்கும் பரந்த மனப்பான்மையை அந்த தெய்வீக ஆன்மீகப் பணியை மனக்குளிரப்

    போற்றுகிறேன்" என்று பாராட்டினார்.

    • ஸ்ரீ பாலா குங்குமம், மகாதிருக்குங்கும பிரசாதம் எனப்படுகிறது.
    • நோய் நொடி யாவையையும் நொடியிலே நீக்கும்.

    ஸ்ரீ பாலா குங்குமம், மகாதிருக்குங்கும பிரசாதம் எனப்படுகிறது.

    பாலாவின் பல கோடி பெறும் குங்கும பிரசாதம் ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு வரப்பிரசாதமாகும்.

    அன்னை பாலாவின் அரிய குங்கும பிரசாதம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நோய் நொடி யாவையையும் நொடியிலே நீக்கும்.

    பாலாவின் மஹா திருக்குங்கும பிரசாதம் இளமைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை எல்லா பருவத்திலும்

    எல்லா கால கட்டத்திலும் துணை நிற்கும், துயர் நீக்கும், ஓர் உன்னத பிரசாதம்.

    அப்படிப்பட்ட பாலாவின் குங்கும பிரசாதத்தை ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரமோடு சேர்த்துப் பெற்றுக்கொண்டால் இன்னும் விசேஷம்.

    • அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.
    • கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.

    ஸ்ரீபாலா ஸ்ரீசக்கரம் நினைத்ததை நிறைவேற்றும் நிகரில்லாத ஸ்ரீ சக்கரமாக விஸ்வரூபம் எடுத்து

    பாலாவின் பக்தர்களுக்கு பலகோடி பெறும் பலன் கோடி தரும் ஸ்ரீ சக்கரமாக உருவெடுத்துள்ளது.

    என் பெயர்தான் மந்திரம், என் திருவடி தான் எந்திரம். அதாவது ஸ்ரீ சக்கரம் என்று பாலா கவசம் கூறுகிறது.

    அப்படிப்பட்ட பாலாவின் திருவடிகள் உங்கள் வீட்டிலிருந்தால் பிறகேது குறை நினைத்ததை அளித்து நிம்மதி கொடுத்து

    அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.

    கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.

    அப்படிப்பட்ட மிகவும் விசேஷமான பாலா ஸ்ரீ சக்கரமோடு சேர்த்து ஸ்ரீ பாலா டாலர் தரப்படுவது மிகவும் விசேஷமானது.

    • குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி பாலாவின் டாலரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
    • செல்லுமிடமெல்லாம் நீங்காத துணையாக அன்னை பாலாவின் டாலர் உறுதுணையாக இருக்கும்.

    ஸ்ரீ பாலா டாலர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பாலாவின் செல்லக் குழந்தைகள் தான்.

    ஒரு கறுப்புக் கயிற்றில் வெள்ளி முலாம் பூசிய அந்த பாலா டாலரை அணிந்து கொண்டு அவர்கள் வலம் வரும் அழகே அழகு.

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி பாலாவின் டாலரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

    செல்லுமிடமெல்லாம் நீங்காத ஒரு துணையாக அன்னை பாலாவின் டாலர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

    கழுத்திலே கறுப்புக் கயிற்றிலே பாலா டாலரும், கையிலே பாலா பாராயண புத்தகமும்

    இருந்தால் போதும், கடுந்துயரும் காணாமல் போகும்.

    • உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.
    • இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.

    பாலா பீடத்தில் பேரம் பேசாதீர்கள்.

    அதாவது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.

    பேரம் பேசாதீர்கள். "காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக இருப்பதெல்லாமே பாலா தான்.

    இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.

    யாரும் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து இவளை எளிதில் பார்த்துவிட முடியாது.

    ஆனால், யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவர்களை அவளே நேரம் கொடுத்து அழைப்பாள்.

    அப்படி அவளால் அழைக்கப்படுகிறவர்கள் இங்கு வந்து வைக்கும் வேண்டுதல்களை அவள் நிறைவேற்றிக் கொடுப்பாள்.

    எக்காரணம் கொண்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தந்தால்,

    'நான் உனக்கு இதைச் செய்கிறேன்' என்று வேண்டிக்கொள்ளாதீர்கள்.

    ஏனென்றால் பாலா யாரிடமும் யாசகம் கேட்க மாட்டாள்.

    அதனால்தான் இங்கே உண்டியல்கூட வைப்பதில்லை" என்கிறார் ஸ்ரீபாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி.

    • பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.
    • அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதிக்கலாம்.

    பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.

    இளைய தலைமுறையினர் தாங்கள் வேண்டும் உயர் கல்வியோ, நல்ல வேலை வாய்ப்போ, இல்ல திருமணமோ,

    மற்றும் நினைத்த நல்ல செயல்கள் யாவும் உடனடியாக ஈடேற அன்னை பாலாவுக்கு

    அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை செய்து நாளைய வெற்றிக்கு அட்வான்சாக அன்னை பாலா தரும்

    அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதித்து முடிக்கலாம்.

    நல்ல வேலையில் சேர்ந்து, திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக மீண்டும் பாலா பீடத்திற்கு வந்து பாலா தம்பதி பூஜை செய்யலாம்.

    • பாலா பூஜை செய்த தம்பதிகள் பாலாவின் விசேஷ படங்களை வாங்கி சென்றால் பல மடங்கு விசேஷம்.
    • இதன் மூலம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அடையலாம்.

    ஸ்ரீ பாலா தம்பதி பூஜை என்பது வருகின்ற எல்லா தலைமுறைகளும் எந்த வித குறைகளும், குழப்பமும்

    இன்றி நன்றாக இருக்க வேண்டிய தம்பதிகள் செய்யும் எளிய பூஜை.

    அன்புக் கணவர் அன்னை பாலாவின் அஷ்டோத்திர மந்திரங்களைக் கூறி வர, அன்பு மனைவி பாலாவுக்கு ஆசையோடு

    குங்கும அர்ச்சனை செய்து, பாலா ஸ்ரீ சக்கர பிரசாதமோடு, பாலா டாலர்கள் மற்றும் பாலா சிடி ஒன்றை பெற்று செல்லலாம்.

    இதன் மூலம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அடையலாம்.

    முன்பதிவு ஏதுமின்றி பாலாவின் பீடத்திற்குள் நுழைந்த பதினைந்து நிமிடத்திற்குள் பூஜை செய்த பிரசாதங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பாலா பூஜை செய்த தம்பதிகள் பாலாவின் விசேஷ படங்களை வாங்கி சென்றால் பல மடங்கு விசேஷம்.

    • பாலாவின் விசேஷ படங்கள் இரண்டு ஒன்று பக்திக்கு. ஒன்று சக்திக்கு.
    • பாலாவைப் பற்றி பேசுதல் லட்சம் புண்ணியம்.

    பாலாவின் விசேஷ படங்கள் இரண்டு ஒன்று பக்திக்கு. ஒன்று சக்திக்கு.

    பச்சை நிற படம் பூஜை அறைக்கு. சிகப்பு (அக்னி) நிற படம் சமையல் அறைக்கு.

    உன் வீடு தேடி ஆசையோடு வந்திருக்கிறேன்.

    உன் சமையல் அறையில் நீ எதை செய்தாலும் எனக்கு செய்வதாக நினைத்துக் கொண்டு என்னையே பார்த்து

    ஆசையோடு செய்து வா! உன் வீட்டில் அந்த தோஷம், இந்த தோஷம் மற்றும் எந்த தோஷம் இருந்தாலும்

    அதை சந்தோஷமாக மாற்றி உன் குடும்பத்தை மட்டுமல்ல, வருகின்ற வம்சத்தையே நான் பார்த்துக் கொள்கிறேன்

    என்ற அன்னை பாலாவின் அற்புத வாக்கு., அது தான் அனைவர்க்கும் வேத வாக்கு.

    பாலாவைப் பற்றி பேசுதல் லட்சம் புண்ணியம்.

    எழுதுதல் கோடி புண்ணியம். அதுவும் பாலா பேனாவைக் கொண்டு எழுதினால் பல கோடி புண்ணியம்.

    பாலா பீடத்தில் கிடைக்கும் பேனாவும், சாக்லெட்டும் அவ்வளவு விசேஷம்.

    • அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.
    • இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.

    அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.

    நவராத்திரியின் ஒன்பது நாளும் பாலா பீடத்தில் அன்னதானம் ஒரு புறமும்,

    அமுதகானம் ஒரு புறமும் நடந்து கொண்டே இருக்கும்.

    இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.

    அன்னதானம் அமுதகானம் அனைத்தும் இங்கே தானடி!

    இவ்விடம் போல் இவ்வுலகில் வேறு இடம் ஏதடி?

    உனக்கெனவே ஓர் இடமும் இவ்வுலகில் ஏதுடி?

    நெமிலி மட்டும் உன்னிடமாய் ஆன மாயம் என்னடி!

    உள்ளம் எனும் கோவிலிலே உள்ள தெய்வம் நீயடி

    உன்னை நம்பி நாங்கள் வந்தோம் எம்மைக் கொஞ்சம் பாரடி!

    எனவே பாலா பீடத்துக்கு செல்லும்போது அன்னதானத்துக்காக தாராளமாக நிதி உதவி செய்யுங்கள்.

    அன்னதானத்துக்கு உதவுவது அளவற்ற நன்மைகளை கொண்டு வரும்.

    • நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.
    • உள்ளம் உருகச் செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1945ம் ஆண்டு பல்லக்கு ஒட்டகம்,

    குதிரைகள், சேவகர்கள், யானைகள் என சகல பரிவாரங்களும் புடைசூழ நெமிலிக்கு வந்தார்.

    மூன்று நாட்கள் அவர் அம்பாளின் பீடத்திலே தங்கி ஆனந்தமடைந்தார்.

    அந்த பசுமையான நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் சுவையாகப் பதிந்து விட்டது.

    வைத்த விழி வாங்காமல் நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் பேரழகைப் பருகிய ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

    "இந்த பாலா திரிபுர சுந்தரி பீடத்திலே எல்லா தெய்வங்களையும் ஒருசேரக் காண்கிறேன்" என மெய்மறந்து கூறினார்.

    மயிலை குருஜி ஸ்ரீ சுந்தர ராம சுவாமிகள் "எனது குருநாதர் வள்ளிமலை சுவாமிகளுக்கு பாலா திரிபுர சுந்தரிதான் இஷ்ட தெய்வம்.

    இந்த பாலாவைப் பார்க்கும்போது எனது குருநாதரைக் காண்கிறேன்" எனக் குதூகலம் பொங்கக் கூறினார்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பரம ஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் ஒவ்வொரு ஆண்டும் "பாலா திரிபுர சுந்தரி ஹோமம்,

    ஸ்ரீவித்யா ஹோமம், ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம்" என பல ஹோமங்களைப் புரிந்து நெமிலி ஸ்ரீபாலாவின்

    திவ்ய தரிசனத்திலே மனம் களித்து நின்று மந்திரகோஷம் புரிந்தார்.

    காளிகாம்பாள் தேவஸ்தான ஸ்ரீ சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் தமது சகதர்மிணியின் பிரார்த்தனைக்கு இரங்கி

    தமது இரண்டு மகள்களின் திருமணத்தை அன்னை நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி முடித்து வைத்தாள்

    என்பதை அறிந்து நன்றியாக அந்த அன்னையின் சன்னிதியிலே 'த்ரிசதி'யை முழங்கி

    அன்னையின் பீடத்திலே ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார்.

    ஸ்ரீ சாம்ப மூர்த்தி சிவாச்சார்யாருடன் வந்த திருவேற்காடு ஸ்ரீ ராமதாச சுவாமிகள் அன்னையின் அருளில் திளைத்து மனமெல்லாம் மகிழ்ந்து நின்றார்.

    கொடுவிலார்பட்டி ஸ்ரீ சச்சிதானந்த ஆசிரமம் ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் அன்னையின் சன்னதியிலே

    தீபாராதனைக் காட்சியைக் கண்டவுடன் குலுங்கிக் குலுங்கி அழுது அம்பாளின் சன்னதியிலே உளமுருகிப் போனார்.

    நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.

    இப்படி அந்த சன்னிதியிலே எத்தனையோ அற்புதங்கள் நடந்துள்ளன!

    "எனது ஊமைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டிய பாடகர் அமரர் கே.வீரமணியின் குறையினை நீக்கினாள்.

    "எனது பையனுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. கண் திறந்து பாரம்மா பாலா" என வேண்டிக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பாலா அருள்புரிந்தாள்.

    "எனக்கு ஒரு திரைப்படம் கூட இல்லையே பாலா! நான் 45 நாட்களாக ஒருவித வேலையுமின்றி இருப்பதும் சரியா? தாயே! நீதானே என்னைக் காக்க வேண்டும்"

    என்று முறையிட்ட இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாழ்க்கையிலே அன்னை புரிந்த விளையாட்டு அற்புதமானது.

    இசைமணி பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனை தனது பீடத்திலே பல ஆண்டுகளாகப் பாட வைத்த பாலா,

    ஒரு குறிப்பு தந்து அவர்களது மறைவை உணர வைத்த ஒரு பெரிய அதிசய நிகழ்ச்சியினை ஏற்படுத்தினாள்.

    உள்ளம் உருக செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    ×